search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்பத்திருவிழா 21-ந்தேதி தொடங்குகிறது
    X

    மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்பத்திருவிழா 21-ந்தேதி தொடங்குகிறது

    திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்பத் திருவிழா வருகிற 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 29-ந்தேதி இரவு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு இறைவன், அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார். இந்த திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 23, 24, 25 ஆகிய நாட்களில் தாயுமான ஈசர் திருமேனி மீது மாலை நேரத்தில் கதிரவன் ஒளி பட்டு பொன் வண்ணமாக பக்தர்களுக்கு காட்சியளிப்பதை பார்க்கலாம். இது சூரிய பூஜை ஆகும்.

    தாயுமானசுவாமிக்கு மலைக்கோட்டை மேற்கில் பிரம்ம தீர்த்தம் என்ற சோம ரோகணி(தெப்பக்குளம்) உள்ளது. தெப்பக்குளத்தின் நடுவில் அழகிய நீராழி மண்டபம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமானசுவாமிக்கு தெப்பத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெறும்.

    இந்த தெப்பத்திருவிழா வருகிற 21-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து அன்று மாலை 7 மணிக்கு சுவாமி கேடயம் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதே போல ஒவ்வொரு நாளும் இரவு உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம் மற்றும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் 29-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.
    Next Story
    ×