என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மண்டைக்காடு பகவதி அம்மன் இன்று வெள்ளி பல்லக்கில் பவனி
Byமாலை மலர்6 March 2018 3:35 AM GMT (Updated: 6 March 2018 3:35 AM GMT)
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழாவையொட்டி பகவதி அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி நேற்று நடந்த விழாவில் முப்பந்தல் ஆலமூடு இசக்கியம்மன் கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு சுமங்கலி சீர்வரிசை கொண்டு வரப்பட்டது.
இதில் நிர்வாக தலைவர் அருணாசலம் தலைமையில் ராமசாமி பிள்ளை, மண்டைக்காடு முன்னாள் வார்டு உறுப்பினர் ஜெயசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் இன்று காலை நடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4 மணிக்கு யானை மீது களப பவனி, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு சமய மாநாடு, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நடக்கிறது.
நாளை (புதன்கிழமை) காலை தீபாராதனை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், 11 மணிக்கு சமய மாநாடு, மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை யானை மீது களப பவனி, சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு சமய மாநாடு, 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, 10 மணிக்கு பக்தி இன்னிசை ஆகியவை நடைபெறுகிறது.
இதில் நிர்வாக தலைவர் அருணாசலம் தலைமையில் ராமசாமி பிள்ளை, மண்டைக்காடு முன்னாள் வார்டு உறுப்பினர் ஜெயசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் இன்று காலை நடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4 மணிக்கு யானை மீது களப பவனி, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு சமய மாநாடு, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் நடக்கிறது.
நாளை (புதன்கிழமை) காலை தீபாராதனை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், 11 மணிக்கு சமய மாநாடு, மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை யானை மீது களப பவனி, சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு சமய மாநாடு, 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, 10 மணிக்கு பக்தி இன்னிசை ஆகியவை நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X