என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா
Byமாலை மலர்3 March 2018 3:15 AM GMT (Updated: 3 March 2018 3:15 AM GMT)
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இந்த கும்பாபிஷேகம் நடந்து 5 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி வருஷாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, நிர்மாலய பூஜை, விசுவரூப தரிசனம் போன்றவை நடைபெற்றது. காலை 6 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு ஸ்ரீபலிபூஜை, 9 மணிக்கு கலச பூஜை நடந்தது. கலச பூஜையை கோவில் மேல்சாந்தி மணிகண்டன் போற்றி நடத்தினார்.
10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், தயிர், குங்குமம், களபம், சந்தனம், மஞ்சள்பொடி, மாபொடி, பஞ்சாமிர்தம், கரும்புசாறு, மாதுளைசாறு, நெல்லிச்சாறு, நெய் ஆகிய 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மேலாளர் சிவராமச்சந்திரன், மேல்சாந்திகள் விட்டல் போற்றி, ஸ்ரீனிவாச போற்றி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மதியம் அன்னதானம் நடைபெற்றது.
இரவு அம்மனுக்கு பலவண்ண புஷ்பாபிஷேகம், ஸ்ரீபலி பூஜை, அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், தயிர், குங்குமம், களபம், சந்தனம், மஞ்சள்பொடி, மாபொடி, பஞ்சாமிர்தம், கரும்புசாறு, மாதுளைசாறு, நெல்லிச்சாறு, நெய் ஆகிய 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மேலாளர் சிவராமச்சந்திரன், மேல்சாந்திகள் விட்டல் போற்றி, ஸ்ரீனிவாச போற்றி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மதியம் அன்னதானம் நடைபெற்றது.
இரவு அம்மனுக்கு பலவண்ண புஷ்பாபிஷேகம், ஸ்ரீபலி பூஜை, அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X