search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    70 கிலோ தங்க சிலைக்கு காஞ்சீபுரத்தில் சிறப்பு அபிஷேகம்
    X

    70 கிலோ தங்க சிலைக்கு காஞ்சீபுரத்தில் சிறப்பு அபிஷேகம்

    வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ சக்தி அம்மா பொற்கோவிலில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 70 கிலோ தங்கத்தினால் செய்யப்பட்ட சொர்ண லட்சுமி சிலைக்கு அபிஷேகங்கள்செய்யப்பட்டன.
    வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ சக்தி அம்மா பொற்கோவிலில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 70 கிலோ தங்கத்தினால் செய்யப்பட்ட சொர்ண லட்சுமி சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. சொக்கத்தங்கத்தில் செய்யப்பட்ட சொர்ணலட்சுமி சிலை, வேலூர் அடுத்த வாலாஜாபேட்டை, ஆற்காடு, காவேரிப்பாக்கம், ஓச்சேரி வழியாக காஞ்சீபுரத்துக்கு கொண்டுவரப்பட்டது.

    இந்த சிலை காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டன. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. காஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து சொர்ணலட்சுமியை தரிசித்தனர். அனைவருக்கும் பிரசாதங்களும், அன்னதானங்களும் வழங்கப்பட்டன.

    Next Story
    ×