என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றம்
Byமாலை மலர்21 Feb 2018 6:08 AM GMT (Updated: 21 Feb 2018 6:08 AM GMT)
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் வென்னிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாள் திருவிழா காமராஜ்நகர் பொது மக்கள் சார்பில் நடைபெற்றது. அதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 5.15 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
பால்குடம் ஊர்வலமானது கோவிலை வந்தடைந்த உடன் நண்பகல் 12 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்தில் பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதி பெண்கள் கலந்து கொண்டு 1,008 திருவிளக்கு பூஜை நடத்தினர். இரவு 8.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலா, கோவில் வளாகத்தில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் சிகர நாளான 10-ம் திருவிழா வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) நாடார் சமுதாய மண்டகபடிதாரர்கள் சார்பில் நடைபெறுகிறது. அன்று கீழப்பாவூர் சிவன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வருகின்றனர். ஊர்வலம் கோவிலை வந்தடைந்த உடன் மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5 மணிக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி, இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதிஉலா வருதல், 12 மணிக்கு அர்த்த சாமபூஜை நடைபெறுகிறது. அதேபோல் ஊரின் பல்வேறு பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து தினமும் பல்வேறு சமுதாயத்தினர் சார்பில் திருவிழாக்கள் நடக்கின்றன.
ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் அனைத்து சமுதாயத்தினர் செய்து வருகின்றனர்.
பால்குடம் ஊர்வலமானது கோவிலை வந்தடைந்த உடன் நண்பகல் 12 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்தில் பாவூர்சத்திரம் சுற்று வட்டார பகுதி பெண்கள் கலந்து கொண்டு 1,008 திருவிளக்கு பூஜை நடத்தினர். இரவு 8.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலா, கோவில் வளாகத்தில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் சிகர நாளான 10-ம் திருவிழா வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) நாடார் சமுதாய மண்டகபடிதாரர்கள் சார்பில் நடைபெறுகிறது. அன்று கீழப்பாவூர் சிவன் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வருகின்றனர். ஊர்வலம் கோவிலை வந்தடைந்த உடன் மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5 மணிக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி, இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதிஉலா வருதல், 12 மணிக்கு அர்த்த சாமபூஜை நடைபெறுகிறது. அதேபோல் ஊரின் பல்வேறு பகுதிகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து தினமும் பல்வேறு சமுதாயத்தினர் சார்பில் திருவிழாக்கள் நடக்கின்றன.
ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் அனைத்து சமுதாயத்தினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X