என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் மாசிப்பெருந்திருவிழா கொடியேற்றம்
Byமாலை மலர்21 Feb 2018 3:21 AM GMT (Updated: 21 Feb 2018 3:21 AM GMT)
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை இம்மையிலும், நன்மை தருவார் கோவிலில் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. விழாவையொட்டி கடந்த 18-ந்தேதி கொட்டகை முகூர்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து மறுநாள் மாலையில் வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது.
நேற்று காலையில் கொடியேற்று விழா நடைபெற்றது. இன்று (புதன் கிழமை) முதல் 24-ந்தேதி வரை தினமும் சுவாமி வீதிஉலா வருகிறார். 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சைவ சமய வரலாற்று கழுவேற்ற லீலை நிகழ்ச்சி இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. 26-ந்தேதி காலையில் பிஷாடணர் புறப்பாடு நடக்கிறது.
கோவில் பட்டர் கொடி மரத்திற்கு தீபாராதனை காண்பித்ததை படத்தில் காணலாம்.
27-ந்தேதி மாலை 3 மணிக்கு செவ்வாய் பிரதோஷம், யானை வாகனம், புஷ்ப பல்லாக்கு நடைபெற்று இரவு 8 மணிக்கு 4 மாசி வீதிகளில் உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 1-ந்தேதி 10-ம் உற்சவ தினத்தில் காலையில் தீர்த்தவாரி, இரவு கொடி இறக்குதல் மற்றும் மவுன பலி நடைபெறுகிறது. 2-ந்தேதி உற்சவ சாந்தியும், பைரவர் பூஜையும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் பாலசரவணன் மற்றும் கோவில் நிர்வாகக் குழுவினர் செய்துள்ளனர்.
நேற்று காலையில் கொடியேற்று விழா நடைபெற்றது. இன்று (புதன் கிழமை) முதல் 24-ந்தேதி வரை தினமும் சுவாமி வீதிஉலா வருகிறார். 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சைவ சமய வரலாற்று கழுவேற்ற லீலை நிகழ்ச்சி இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. 26-ந்தேதி காலையில் பிஷாடணர் புறப்பாடு நடக்கிறது.
கோவில் பட்டர் கொடி மரத்திற்கு தீபாராதனை காண்பித்ததை படத்தில் காணலாம்.
27-ந்தேதி மாலை 3 மணிக்கு செவ்வாய் பிரதோஷம், யானை வாகனம், புஷ்ப பல்லாக்கு நடைபெற்று இரவு 8 மணிக்கு 4 மாசி வீதிகளில் உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 1-ந்தேதி 10-ம் உற்சவ தினத்தில் காலையில் தீர்த்தவாரி, இரவு கொடி இறக்குதல் மற்றும் மவுன பலி நடைபெறுகிறது. 2-ந்தேதி உற்சவ சாந்தியும், பைரவர் பூஜையும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் பாலசரவணன் மற்றும் கோவில் நிர்வாகக் குழுவினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X