search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சர்வ அலங்காரத்தில் வீற்றிருந்த மத்தியபுரி அம்மன், சுவாமியை படத்தில் காணலாம்.
    X
    சர்வ அலங்காரத்தில் வீற்றிருந்த மத்தியபுரி அம்மன், சுவாமியை படத்தில் காணலாம்.

    இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் மாசிப்பெருந்திருவிழா கொடியேற்றம்

    மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    மதுரை இம்மையிலும், நன்மை தருவார் கோவிலில் மாசிப் பெருந்திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. விழாவையொட்டி கடந்த 18-ந்தேதி கொட்டகை முகூர்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து மறுநாள் மாலையில் வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது.

    நேற்று காலையில் கொடியேற்று விழா நடைபெற்றது. இன்று (புதன் கிழமை) முதல் 24-ந்தேதி வரை தினமும் சுவாமி வீதிஉலா வருகிறார். 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சைவ சமய வரலாற்று கழுவேற்ற லீலை நிகழ்ச்சி இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. 26-ந்தேதி காலையில் பிஷாடணர் புறப்பாடு நடக்கிறது.


    கோவில் பட்டர் கொடி மரத்திற்கு தீபாராதனை காண்பித்ததை படத்தில் காணலாம்.

    27-ந்தேதி மாலை 3 மணிக்கு செவ்வாய் பிரதோஷம், யானை வாகனம், புஷ்ப பல்லாக்கு நடைபெற்று இரவு 8 மணிக்கு 4 மாசி வீதிகளில் உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந்தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 1-ந்தேதி 10-ம் உற்சவ தினத்தில் காலையில் தீர்த்தவாரி, இரவு கொடி இறக்குதல் மற்றும் மவுன பலி நடைபெறுகிறது. 2-ந்தேதி உற்சவ சாந்தியும், பைரவர் பூஜையும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் பாலசரவணன் மற்றும் கோவில் நிர்வாகக் குழுவினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×