என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவல்லிக்கேணியில் தெப்பத் திருவிழா - இன்றும் நாளையும் பார்த்தசாரதி சுவாமி வலம் வருகிறார்
Byமாலை மலர்16 Feb 2018 9:55 AM GMT (Updated: 16 Feb 2018 9:54 AM GMT)
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவம் தொடங்கியது. இன்றும் நாளையும் பார்த்தசாரதி சுவாமி தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில், ஏழு நாட்கள் தெப்ப உற்சவம் நடத்தப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.
இதையொட்டி கோவில் வளாகம் மற்றும் தெப்பம் மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 6.30 மணிக்கு உற்சவர் பார்த்தசாரதி சுவாமி தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
இதேபோல் இன்றும் நாளையும் மாலை 6.30 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார். 18-ம் தேதி நரசிம்மர், 19-ம் தேதி ரங்கநாதர், 20-ம் தேதி ராமர், 21-ம் தேதி கஜேந்திரவரதராஜ சுவாமிகள் மாலை 6.30 மணிக்கு தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலிக்கின்றனர்.
தெப்ப திருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகக் குழுவினர் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இதையொட்டி கோவில் வளாகம் மற்றும் தெப்பம் மின் விளக்குகளாலும், மலர்களாலும் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 6.30 மணிக்கு உற்சவர் பார்த்தசாரதி சுவாமி தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
இதேபோல் இன்றும் நாளையும் மாலை 6.30 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளார். 18-ம் தேதி நரசிம்மர், 19-ம் தேதி ரங்கநாதர், 20-ம் தேதி ராமர், 21-ம் தேதி கஜேந்திரவரதராஜ சுவாமிகள் மாலை 6.30 மணிக்கு தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலிக்கின்றனர்.
தெப்ப திருவிழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகக் குழுவினர் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X