என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா 20-ந்தேதி கொடியேற்றம்
Byமாலை மலர்16 Feb 2018 4:07 AM GMT (Updated: 16 Feb 2018 4:07 AM GMT)
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ்நகரில் வென்னிமலை முருகன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழா 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
முதல்நாள் திருவிழா பாவூர்சத்திரம் காமராஜ்நகர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்படுகிறது. 20-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு கொடி ஏற்றம் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், 12 மணிக்கு உச்சிகால பூஜையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு 1,008 விளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு சுவாமி வீதி உலா மற்றும் கோவில் வளாகத்தில் இசை கச்சேரி ஆகியவை நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை ஆகியன நடக்கிறது. 11-ம் திருவிழாவான வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து சமுதாய மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
முதல்நாள் திருவிழா பாவூர்சத்திரம் காமராஜ்நகர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்படுகிறது. 20-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு கொடி ஏற்றம் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சியும், 12 மணிக்கு உச்சிகால பூஜையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு 1,008 விளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு சுவாமி வீதி உலா மற்றும் கோவில் வளாகத்தில் இசை கச்சேரி ஆகியவை நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை ஆகியன நடக்கிறது. 11-ம் திருவிழாவான வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து சமுதாய மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X