search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவராத்திரியன்று நடந்தவை
    X

    சிவராத்திரியன்று நடந்தவை

    சிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு உள்ளது. சிவராத்திரி அன்று நடந்த சில முக்கியமான நிகழ்வுகளை பார்க்கலாம்.
    • சிவபெருமான் காலனை உதைத்தார்.
    • லிங்கோற்பவராக ஈசன் தோன்றினார்.
    • பரமனின் உடலில் பாதியாக பார்வதி இடம் பிடித்தாள்.
    • உமையவள், மகேசனிடம் ஆகம உபதேசம் பெற்றாள்.
    • கண்ணப்ப நாயனார் சிவலிங்கத்தில் தன் கண்ணை அப்பினார்.
    • பகீரதன், கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்தார்.
    • சிவபெருமான் நஞ்சு உண்டார்.

    ஜடாமுடி சிவலிங்கம்!

    சிவனுக்கே உரித்தான ஜடாமுடியுடன் கூடிய லிங்கத்தை, திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகிலுள்ள சிவசைலம் சிவசைலநாதர் கோவிலில் மட்டும்தான் காண முடியும். லிங்கத்தின் பின்னால் உள்ள ஜடாமுடியை, பின்புறச் சுவரிலுள்ள துவாரம் வழியாக தரிசிக்கலாம்.
    Next Story
    ×