search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வீட்டில் யாருக்காவது அம்மை கண்டால் விளக்கேற்ற கூடாது என்பது ஏன்?
    X

    வீட்டில் யாருக்காவது அம்மை கண்டால் விளக்கேற்ற கூடாது என்பது ஏன்?

    வீட்டில் யாருக்காவது அம்மை கண்டால் எந்த விசேஷ பூஜைகளும் செய்யக்கூடாது என்று சொல்வார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    அம்மை போட்டவர்களிடம் மாரியம்மன் இருப்பதாக ஐதீகம். அதாவது அம்பாளே ஒருவரிடத்தில் வந்து இருப்பதால் மற்றைய விசேஷ பூஜைகளை செய்யத் தேவையில்லை என்பதன் அடிப்படையில் இவ்வாறு சொல்வார்கள்.

    இந்நேரத்தில், பத்தி, சாம்பிராணி போடுதல், கடுகு, மிளகாய் எண்ணெயில் வறுத்தல் போன்றவற்றை தவிர்ப்பது நலம். உடலில் கொப்புளம் இருக்கும் போது கமறுவது, இருமுவது போன்றவற்றால் அவர்கள் கஷ்டப்படுவர். அதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு.

    இவர்களுக்கு காய்ந்த திராட்சை சாறு கொடுக்கலாம். விபூதி பூசி வேப்பிலையால் தடவி மாரியம்மன் பாடல்களைப் பாடலாம். அந்தக் காலத்தில் கஸ்தூரி மாத்திரை கொடுத்தார்கள். தற்கால அறிவியல் பிரகாரம் தடுப்பூசி போடுகிறார்கள்.
    Next Story
    ×