search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை விழா இன்று தொடங்குகிறது
    X

    வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை விழா இன்று தொடங்குகிறது

    வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் இன்று (5-ந்தேதி) முதல் வருகிற 9-ந்தேதி வரை காலை, மாலை லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜம் பேட்டை தெருவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் சீதளாதேவி என்னும் பாடைகட்டி மகாமாரியம்மன் கோவிலில் வருடந்தோறும் பங்குனி பாடைக்காவடி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இக்கோவிலில் இன்று (5-ந்தேதி) முதல் வருகிற 9-ந்தேதி வரை காலை, மாலை லட்சார்ச்சனை நடைபெறுகிறது. வருகிற 12-ந்தேதி கடைசி வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் குத்துவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள் ரூ.300 செலுத்தி லட்சார்சனை மற்றும் குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×