என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கஜேந்திர மோட்சம் என்றால் என்ன?
Byமாலை மலர்23 April 2016 7:30 AM GMT (Updated: 23 April 2016 7:30 AM GMT)
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் கஜேந்திர மோட்ச இந்நிகழ்ச்சி நடத்தி காட்டப்படும்.
முன்னொரு காலத்தில் திரிகுதா என்ற மலை அடிவாரத்தில் உள்ள நீரோடையில் துர்வாச முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கந்தர்வன், அந்த நீரோடையில் கந்தர்வ பெண்களுடன் ஜலகிரீடையில் ஈடுபட்டான்.
இதனால் துர்வாச முனிவரின் தவம் கலைந்தது. இதனால் கோபமடைந்த முனிவர், கந்தர்வனை முதலையாக போகுமாறு சாபமிட்டார். உடனே கந்தர்வன் சாப விமோசனம் கேட்கும்போது, விஷ்ணுவின் சக்கர ஆயுதம் மூலம் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்றார்.
இதேபோல் இந்திரேதாயும்னா என்ற மன்னன் பெருமாளை வழிபடும்போது ஆச்சார்ய குறைவாக வழிபட்டதால் ஆத்திரமடைந்த அகத்திய முனிவர், அந்த மன்னனை யானையாக போகுமாறு சபித்தார். இதனால் அந்த மன்னர் கஜேந்திரன் என்ற பெயரில் யானையாக வாழ்ந்து வந்தார். ஒரு நாள் கஜேந்திர யானை தடாகத்தில் பெருமாளுக்கு பூஜைக்காக தாமரைப் பூ பறிக்க சென்றது. அந்த தடாகத்தில்தான் சாபம் பெற்ற கந்தர்வன் முதலையாக இருந்தான். யானை தடாகத்தில் இறங்கியபோது, முதலை அதன் காலை கவ்விப்பிடித்துக்கொண்டது. யானை தப்பிக்க எவ்வளவோ முயன்றும் முதலை காலை விடவில்லை.
இதனால் தவித்த கஜேந்திர யானை, பெருமாளை வேண்டி ரங்கா, ரங்கா என்று கூவி, தன்னை காப்பாற்ற அழைத்தது. உடனே கருடன் மீது அமர்ந்து அங்கு வந்த பெருமாள், தனது சக்கராயுதத்தால் முதலையை அழித்து கந்தர்வனுக்கும், யானையாக இருந்த மன்னருக்கும் சாப விமோசனம் வழங்கினார். இந்நிகழ்ச்சியே கஜேந்திர மோட்சம் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த நிகழ்ச்சி சித்ரா பவுர்ணமி நாளில் நடந்ததால், ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் இந்நிகழ்ச்சி நடத்தி காட்டப்படும்.
இதனால் துர்வாச முனிவரின் தவம் கலைந்தது. இதனால் கோபமடைந்த முனிவர், கந்தர்வனை முதலையாக போகுமாறு சாபமிட்டார். உடனே கந்தர்வன் சாப விமோசனம் கேட்கும்போது, விஷ்ணுவின் சக்கர ஆயுதம் மூலம் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்றார்.
இதேபோல் இந்திரேதாயும்னா என்ற மன்னன் பெருமாளை வழிபடும்போது ஆச்சார்ய குறைவாக வழிபட்டதால் ஆத்திரமடைந்த அகத்திய முனிவர், அந்த மன்னனை யானையாக போகுமாறு சபித்தார். இதனால் அந்த மன்னர் கஜேந்திரன் என்ற பெயரில் யானையாக வாழ்ந்து வந்தார். ஒரு நாள் கஜேந்திர யானை தடாகத்தில் பெருமாளுக்கு பூஜைக்காக தாமரைப் பூ பறிக்க சென்றது. அந்த தடாகத்தில்தான் சாபம் பெற்ற கந்தர்வன் முதலையாக இருந்தான். யானை தடாகத்தில் இறங்கியபோது, முதலை அதன் காலை கவ்விப்பிடித்துக்கொண்டது. யானை தப்பிக்க எவ்வளவோ முயன்றும் முதலை காலை விடவில்லை.
இதனால் தவித்த கஜேந்திர யானை, பெருமாளை வேண்டி ரங்கா, ரங்கா என்று கூவி, தன்னை காப்பாற்ற அழைத்தது. உடனே கருடன் மீது அமர்ந்து அங்கு வந்த பெருமாள், தனது சக்கராயுதத்தால் முதலையை அழித்து கந்தர்வனுக்கும், யானையாக இருந்த மன்னருக்கும் சாப விமோசனம் வழங்கினார். இந்நிகழ்ச்சியே கஜேந்திர மோட்சம் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த நிகழ்ச்சி சித்ரா பவுர்ணமி நாளில் நடந்ததால், ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் இந்நிகழ்ச்சி நடத்தி காட்டப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X