search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    சகலமும் அருளும் சீரடி சாய்பாபா 108 போற்றியை தினமும் சொல்லுங்கள். உங்கள் துன்பங்கள் பறந்தோடும். கவலைகள் மறையும். செல்வம் பெருகும்.
    ஓம் அகர்மானேக கர்மஸுகர்மிணே நம:
    ஓம் அசக்யராஹிதாய நம:
    ஓம் அசிந்த்யாய நம:
    ஓம் அத்புதானந்தசர்யாய நம:
    ஓம் அநாதநாத தீனபந்தவே நம:
    ஓம் அந்தர்யாமினே நம:
    ஓம் அனந்த கல்யாண குணாய நம:
    ஓம் அன்னவஸ்த்ரதாய நம:
    ஓம் அபராஜிதாய நம:
    ஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம:
    ஓம் அமர்த்யாய நம:
    ஓம் அமித பராக்ரமாய நம:
    ஓம் அம்ருதாம்சவே நம:
    ஓம் அரூபாவ்யக்தாய நம:
    ஓம் அஸஹாய ஸஹாயாய நம:
    ஓம் ஆனந்ததாய நம:
    ஓம் ஆனந்தாய நம:
    ஓம் ஆபத்பாந்தவாய நம:
    ஓம் ஆரோக்ய÷க்ஷமதாய நம:
    ஓம் கர்மத்வம்சினே நம:
    ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம:
    ஓம் காலகாலாய நம:
    ஓம் காலதர்பதமனாய நம:
    ஓம் காலாதீதாய நம:
    ஓம் காலாய நம:
    ஓம் குணாதீத குணாத்மனே நம:
    ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:
    ஓம் சத்ய தர்ம பராயணாய நம:
    ஓம் சரணாகதவத்ஸலாய நம:
    ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:
    ஓம் சேஷ சாயினே நம:
    ஓம் ஜகத பித்ரே நம:
    ஓம் ஜயினே நம:
    ஓம் ஜீவாதாராய நம:
    ஓம் ஞான வைராக்யதாய நம:
    ஓம் ஞானஸ்வரூபிணே நம:
    ஓம் தக்ஷிணாமூர்த்தயே நம:
    ஓம் தனமாங்கல்யப்ரதாய நம:
    ஓம் தீர்த்தாய நம:
    ஓம் துர்தர்ஷா÷க்ஷõப்யாய நம:
    ஓம் த்ருலோகேஷு அஸ்கந்திதகதயே நம:
    ஓம் பகவதே நம:
    ஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம:
    ஓம் பக்த பாராதீனாய நம:
    ஓம் பக்தவத்ஸலாய நம:
    ஓம் பக்த ஹ்ருதாலயாய நம:
    ஓம் பக்தானுக்ரஹ காதராய நம:
    ஓம் பக்தாபயப்ரதாய நம:
    ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம:
    ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:
    ஓம் பக்தி சக்தி ப்ரதாய நம:
    ஓம் பரப்ரம்ஹணே நம:
    ஓம் பரமாத்மனே நம:
    ஓம் பரமேச்வராய நம:
    ஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:
    ஓம் பாவனானகாய நம:
    ஓம் பாஸ்கரப்ரபாய நம:
    ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம:
    ஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம:
    ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:
    ஓம் புரு÷ஷாத்தமாய நம:
    ஓம் பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:
    ஓம் பூதாவாஸாய நம:
    ஓம் ப்ரபன்னார்த்திஹராய நம:
    ஓம் ப்ரியாய நம:
    ஓம் ப்ரீதிவர்தனாய நம:
    ஓம் ப்ருஹ்மசர்யதப: சர்யாதிஸுவ்ரதாய நம:
    ஓம் ப்ரேமப்ரதாய நம:
    ஓம் ப்ரேமமூர்த்தயே நம:
    ஓம் மனோவாக தீதாய நம:
    ஓம் மர்த்யாபயப்ரதாய நம:
    ஓம் மார்க்பந்தவே நம:
    ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
    ஓம் யோக÷க்ஷமவஹாய நம:
    ஓம் யோகேச்வராய நம:
    ஓம் ருத்திஸித்திதாய நம:
    ஓம் லோகநாதாய நம:
    ஓம் வாஸுதேவாய நம:
    ஓம் வேங்கடேசரமணாய நம:
    ஓம் ஸச்சிதாத்மனே நம:
    ஓம் ஸதாம் கதயே நம:
    ஓம் ஸத்பராயணாய நம:
    ஓம் ஸத்புருஷாய நம:
    ஓம் ஸத்ய தத்வபோதகாய நம:
    ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாபனாய நம:
    ஓம் ஸமஸர்வமதஸம்மதாய நம:
    ஓம் ஸம்சய ஹ்ருதய தௌர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம:
    ஓம் ஸம்ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம:
    ஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம:
    ஓம் ஸர்வ பாரப்ருதே நம:
    ஓம் ஸர்வமங்களகராய நம:
    ஓம் ஸர்வவித்ஸர்வதோமுகாய நம:
    ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:
    ஓம் ஸர்வாதாராய நம:
    ஓம் ஸர்வாந்தர்பஹிஸ்திதாய நம:
    ஓம் ஸர்வாந்தர்யாமினே நம:
    ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம:
    ஓம் ஸித்த ஸங்கல்பாய நம:
    ஓம் ஸித்தேச்வராய நம:
    ஓம் ஸுருபஸுந்தராய நம:
    ஓம் ஸுலபதுர்லபாய நம:
    ஓம் ஸுலோசனாய நம:
    ஓம் ஸூக்ஷ்மாய நம:
    ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:
    ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம:
    ஓம் ஸ்ரீஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம:
    ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம:
    ஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம:
    திருமணம் நடக்காமல் தடைப்பட்டு கொண்டிருப்பவர்கள் சந்தோஷி மாதாவிற்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நிச்சயம் திருமண தடை நீங்கும்.
    ஓம் ருபாதேவீ ச வித்மஹே
    சக்திரூபிணி தீமஹி
    தன்னோ சந்தோஷி ப்ரசோதயாத்
    உண்மையில் ஒரு மனிதனின் முக்கிய தேவையாக இருப்பது நிம்மதியே. அத்தகைய நிம்மதியை பெற விரும்புவோர் தினமும் சிவனை வணங்கி, கீழே உள்ள ஸ்லோகம் அதை கூறலாம்.
    விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர
    சிவசிவ ஹரஹர மஹாதேவா
    வில்வதள ப்ரிய சந்த்ர கலாதர
    சிவசிவ ஹரஹர மஹாதேவா
    கங்காதர ஹர சாம்ப சதாசிவாய
    சிவசிவ ஹரஹர மஹாதேவா
    த்ரியம்பகாய லிங்கேஸ்வராய
    சிவசிவ ஹரஹர மஹாதேவா
    மௌலீஸ்வராய யோகேஸ்வராய
    சிவசிவ ஹரஹர மஹாதேவா
    குஞ்சேஸ்வராய குபேரேஸ்வராய
    சிவசிவ ஹரஹர மஹாதேவா
    நடேஸ்வராய நாகேஸ்வராய
    சிவசிவ ஹரஹர மஹாதேவா
    கபாலீஸ்வரய்யா கற்கடகேஸ்வராய
    சிவசிவ ஹரஹர மஹாதேவா
    சர்வேஸ்வராய சாம்ப சதாசிவாய
    சிவசிவ ஹரஹர மஹாதேவா
    போலோ ஹரஹர சிவசிவ மஹாதேவா …..

    உண்மையில் ஒரு மனிதனின் முக்கிய தேவையாக இருப்பது நிம்மதியே. அத்தகைய நிம்மதியை பெற விரும்புவோர் தினமும் சிவனை வணங்கி, கீழே உள்ள ஸ்லோகம் அதை கூறலாம். இதன் மூலம் தினம் தினம் நமக்கு சிவனின் அருள் கிடைப்பதோடு நம்மிடம் எந்த துன்பமும் நெருங்காது.
    இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நம்முடைய குலதெய்வ தரிசனம் நம்முடைய கனவில் கிடைக்கும். அல்லது குலதெய்வம் பற்றிய விவரம் யார் மூலமாகவோ அறிய வரும்.
    நம்முடைய குலத்தைக் காப்பது குலதெய்வ வழிபாடு. மாறிவிட்ட வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை காரணமாக குல தெய்வத்தை பலரும் மறந்துவிட்டனர். பல தலைமுறைக்கு முன்பு சொந்த ஊரைவிட்டு வெளியேறி வேறு ஒரு ஊரில் குடியேறியதால் குலதெய்வத்தை தொலைத்தவர்கள் பலர். தங்களின் குலதெய்வம் எது என்று தெரியாமல், குல தெய்வம் எது என்று அறிய பலரும் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றனர்.

    எவ்வளவு பாடுபட்டும் குல தெய்வம் பற்றிய விவரம் கிடைக்கவில்லையே என்று கவலைப்படுகின்றீர்களா... கவலைப்படாதீங்க. உங்கள் குல தெய்வத்தை கண்டறிய உதவும் ஸ்லோகம் ஒன்று உள்ளது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நம்முடைய குலதெய்வ தரிசனம் நம்முடைய கனவில் கிடைக்கும். அல்லது குலதெய்வம் பற்றிய விவரம் யார் மூலமாகவோ அறிய வரும்.

    ஸ்லோகம்:

    ஓம் ஹ்ரீம் விசித்திர வீர்யம் ஸ்வப்னே இஷ்ட தர்ஷய நமஹா||

    இதை தினமும் தூங்கச் சொல்வதற்கு முன்பு சொல்ல வேண்டும். தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு சொம்பில் தண்ணீர் பிடித்து வைத்து, கிழக்கு பார்த்தபடி அமர்ந்து ஊதுபற்றி ஏற்றி நம்முடைய தேவையை மனதில் நினைத்துக் கொண்டு, இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். மந்திரத்தைச் சொல்லி முடித்ததும் சொம்பில் உள்ள தண்ணீரைக் குடிக்க வேண்டும். இந்த ஸ்லோகத்தை சனிக்கிழமை காலை அல்லது மாலையில் சொல்ல ஆரம்பிக்கலாம். தினமும் விடாமல் சொல்லி வர வேண்டும். 45 முதல் 90 நாட்களுக்குள் குல தெய்வம் பற்றிய விவரம் தெரிய வரும் என்பது நம்பிக்கை.

    நம் குலத்தை, கண்ணைப் போல் காத்தருள்வார்கள் குலதெய்வங்கள். குலதெய்வ வழிபாடு செய்தால்தான் அனைத்து தெய்வங்களின் ஆசியும் அருளும் நமக்குக் கிடைக்கும் என்பதால் குல தெய்வ வழிபாடு மிகவும் முக்கியம்.
    தினமும் காலையில் நீராடிவிட்டு கிழக்கு திசை பார்த்து நின்று சூரியனைப் பகவானை பார்த்து 10 முறை சொல்ல அனைத்து நோய்களும் தீர்ந்து உடல் மற்றும் மனோபலம் பெறலாம்.
    நாம் தினமும் காலையில் சொல்ல வேண்டிய சூரிய மந்திரத்தை சொல்ல அன்றைய நாள் முழுவதும் நம் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சியைப் பெறும். அதோடு சூரிய பகவானின் அருளும் நமக்கு கிடைக்கப்பெறும்.

    கீழே குறிப்பிடப்பட்டுள்ள சூரிய மந்திரங்களை காலையில் நீராடிவிட்டு, பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட்டு அதன் பின்னர் சொல்லலாம்.

    அதே போல் நீராடி சூரிய நமஸ்காரம் செய்யும் போது சொல்ல சூரிய பகவானின் அருள் நிறைந்து கிடைக்கும்.

    சூரிய காயத்ரி :

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி
    தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

    காயத்ரி மந்திரம் 2

    ஓம் பாஸ்கராய வித்மஹே
    திவாகராய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

    சூரிய பகவான் மந்திரம்

    காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
    பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
    வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
    தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி

    இந்த அற்புத சூரிய துதி தூய தமிழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தினமும் காலையில் நீராடிவிட்டு கிழக்கு திசை பார்த்து நின்று சூரியனைப் பகவானை பார்த்து 10 முறை சொல்ல அனைத்து நோய்களும் தீர்ந்து உடல் மற்றும் மனோபலம் பெறலாம்.

    ஞாயிறு கிழமைகளில் அதிகாலையில் குளித்த பின்னர் சொல்ல இந்த மந்திரத்தில் மேலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

    சூரிய மந்திரம் நம் மனதை ஒழுங்கு படுத்தி அமைதியையும், நற்சிந்தனையையும் தரும். அதே போல் சூரிய நமஸ்காரம் நம் உடலை வளப்படுத்தி, எந்த நோயிலிருந்தும் காக்கும் மிக உன்னதத்தைத் தரக் கூடியதாக இருக்கும்.
    தினமும் காகத்துக்கு உணவிட்டாலும் சனிக்கிழமையன்று இந்த ஸ்லோகத்தைச் சொல்லி சனீஸ்வரரை வழிபட்டால், கிரக தோஷங்கள் விலகும்.
    கோணஸ்தோ பிங்களோ பப்ரு; க்ருஷ்ணோ
    ரெளத்ராம்தகோ யம;
    ஸெளரீ சனைஸ்வரோ மந்த; பிப்பலாதேன ஸம்ஸ்துந;

    என்கிற ஸ்லோகத்தைச் சொல்லி சனி பகவானை வேண்டிக்கொள்ளலாம்.

    சனிக்கிழமையன்று சனி பகவானை வழிபடுவது மகத்துவம் நிறைந்தது. தினமும் காகத்துக்கு உணவிட்டாலும் சனிக்கிழமையன்று இந்த ஸ்லோகத்தைச் சொல்லி சனீஸ்வரரை வழிபட்டால், கிரக தோஷங்கள் விலகும். எள் தீபமேற்றி வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் விலகும். சனி பகவானை மனதில் நினைத்து, காகத்துக்கு சனிக்கிழமையில் உணவிட்டால், கெடுபலன்களில் இருந்து விடுபடச் செய்வார் சனி பகவான்.

    முடிந்த போதெல்லாம் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, சனீஸ்வர பகவானை வேண்டுங்கள். பாபங்களில் இருந்து விலகி நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
    நாம் ஒரு வேண்டுதலை சாய்பாபாவிடம் வைத்து கீழே உள்ள சாய்பாபா மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வர அந்த வேண்டுதல் நிறைவேறும்.
    ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி

    மந்திரத்தின் பொது பொருள்:

    ஓம் – உலகில் உள்ள விஞ்ஞானிகள் பலரால் ஏற்கப்பட்ட உலகின் மூல ஓசை தான் ஓம். கரடு முரடான மனம் கொண்டவரை கூட ஆழ்நிலை தியானத்திற்கு அழைத்துச்செல்லக்கூடிய ஒரே மூல மந்திரம் ஓம்.

    ஸ்ரீ – ஸ்ரீ என்ற சொல்லுக்கு திரு என்ற பொருளும் உண்டு. தெய்வீக சக்தி பெற்ற ஒரு அறிய சொல் ஸ்ரீ ஜெய ஜெய – வெற்றியை குறிக்கும் ஜெயம் என்ற சொல்லின் சுருக்கமே ஜெய.

    சாயி – அர்த்தமற்ற வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றும் ஒரு அற்புத மகான். ஞானத்தின் ஒளி. உலக பொதுக்கடவுள். இப்படி என்னிடலங்க பல அர்த்தங்களை கொண்டு ஒரு அற்புத சொல் சாயி. நாம் ஒரு வேண்டுதலை சாய் பாபாவிடம் வைத்து மேலே உள்ள சாய் பாபா மந்திரம் அதை தொடர்ந்து தினமும் 108 முறை ஜபித்து வர அந்த வேண்டுதல் நிறைவேறும்.

    தினந்தோறும் ஜபிக்க முடியாதவர்கள் வியாழக்கிழமைகளில் ஜபிக்கலாம். வெகு சிலருக்கு வேண்டுதல் நிறைவேறாமல் போகும். இதற்க்கு காரணம் அந்த வேண்டுதலை காட்டிலும் ஒரு பெரிய பரிசை சாய் பாபா தரவிருக்கிறார் என்பதே. ஆகையால் விடா முயற்சியோடு சாய் பாபா மகா மந்திரம் அதை ஜபித்து பயன் பெறுங்கள்.
    ஆலயத்திற்கு சென்று வழிபட இயலாதவர்கள், வீட்டிலேயே அரைக்காசு அம்மனை நினைத்து நெய்தீபம் ஏற்றி, பூஜை செய்து வருவதன் மூலம் இழந்த செல்வத்தை அடையலாம்.
    ஓம் அரைக்காசு அம்மனே போற்றி
    ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
    ஓம் அருள்தரும் நாயகியே போற்றி

    ஓம் அருள்தனை கொடுத்திடுவாய் போற்றி
    ஓம் அரைகாசில் தோன்றினாய் போற்றி
    ஓம் அன்பிற்கினியவளே போற்றி
    ஓம் அதிர்ஷ்ட தேவியே போற்றி
    ஓம் அலங்கார நாயகியே போற்ற
    ஓம் அற்புத தாயே போற்றி
    ஓம் அற்பு அழகே போற்றி

    ஓம் அபயவரம் அளிப்பாய் போற்றி
    ஓம் அறிவுடை தேவியே போற்றி
    ஓம் ஆனந்தம் தருவாய் போற்றி
    ஓம் ஆடியில் உதித்தவளே போற்றி
    ஓம் வெல்லப்பிரியையே போற்றி
    ஓம் சக்தி சொரூபமே போற்றி
    ஓம் சாந்த சொரூபமே போற்றி
    ஓம் செளபாக்கிம் அளிப்பவளே போற்றி
    ஓம் சமயத்தில் அருள்பவளே போற்றி
    ஓம் சத்திய சொரூபமே போற்றி

    ஓம் சுந்தர ரூபிணியே போற்றி
    ஓம் சிந்தையில் உறைபவளே போற்றி
    ஓம் சிந்திப்போருக்கு அருள்வாய் போற்றி
    ஓம் சங்கடங்களை களைவாய் போற்றி
    ஓம் சர்வ஧ஸ்வரியே போற்றி
    ஓம் சர்வ வரம் தருவாய் போற்றி
    ஓம் சந்தோஷ நாயகியே போற்றி
    ஓம் செம்மையான வாழ்வு அளிப்பவளே போற்றி
    ஓம் செவ்வரளி பிரியையே போற்றி
    ஓம் கேட்ட வரம் அளிப்பவளே போற்றி

    ஓம் கேட்டதனை நீக்கிடுவாய் போற்றி
    ஓம் காரிய சித்தி தருபவளே போற்றி
    ஓம் ரத்னமங்கலத்தில் அமர்ந்தவளே போற்றி
    ஓம் மகாமேருவில் இருப்பவளே போற்றி
    ஓம் பிரசன்ன நாயகியே போற்றி
    ஓம் பெளர்ணமி நாயகியே போற்றி
    ஓம் பொருள்தனை கொடுப்பவேள போற்றி
    ஓம் ஞாபக சக்தி தருபவளே போற்றி
    ஓம் ஓம்கார சக்தியே போற்றி
    ஓம் வெல்லமாலை அணிபவளே போற்றி

    ஓம் வெல்லத்தில் குடி கொண்டாய் போற்றி
    ஓம் தேவி பிரியையே போற்றி
    ஓம் திருவிளக்கில் உறைவாய் போற்றி
    ஓம் தீயவை அகற்றுவாய் போற்றி
    ஓம் தூயமனம் கொண்டவளே போற்றி
    ஓம் எளியோனுக்கும் அருள்பவளே போற்றி
    ஓம் நவமணி அரசியே போற்றி
    ஓம் இன்பம் அளிப்பவளே போற்றி
    ஓம் தூயமனம் படைத்தவளே போற்றி
    ஓம் மங்கல வாரப் பிரியையே போற்றி

    ஓம் உயர்வை தருவாய் போற்றி
    ஓம் உலகெல்லாம் இருப்பாய் போற்றி
    ஓம் உயிருக்கு உயிரானாய் போற்றி
    ஓம் உயர்மணியே போற்றி
    ஓம் உயர்வான வாழ்வு அளிப்பாய் போற்றி
    ஓம் உடன் அருள்வாய் போற்றி
    ஓம் சுகம் தருவாய் போற்றி
    ஓம் வளமெல்லாம் அளிப்பாய் போற்றி
    ஓம் வரம்பல தருபவளே போற்றி
    ஓம் வாழ்வளிக்கும் உமையே போற்றி

    ஓம் மங்களம் அளிப்பவளே போற்றி
    ஓம் மாங்கல்யத்தில் உறைவாய் போற்றி
    ஓம் விஜயம் தரும் வித்தகியே போற்றி
    ஓம் கிழக்கில் அமர்ந்தவளே போற்றி
    ஓம் யெளவன நாயகியே போற்றி
    ஓம் வல்லமை பெற்றவளே போற்றி
    ஓம் ஞான விளக்கே போற்றி
    ஓம் பாவமெல்லாம் ஒழிப்பாய் போற்றி
    ஓம் துயர் துடைப்பாய் போற்றி
    ஓம் துன்பம் தீர்த்திடுவாய் போற்றி

    ஓம் மன்னர் போற்றும் நாயகியே போற்றி
    ஓம் இன்பத்தின் இடமே போற்றி
    ஓம் நினைத்ததை நடத்திடுவாய் போற்றி
    ஓம் நீங்காத இன்பம் தந்திடுவாய் போற்றி
    ஓம் மகிழ்வான வாழ்வளிப்பாய் போற்றி
    ஓம் மாங்கல் தாரிணியே போற்றி
    ஓம் கிருபை தருவாய் போற்றி
    ஓம் யோக நாயகியே போற்றி
    ஓம் மோகன நாயகியே போற்றி
    ஓம் மனிதருள் இருப்பாய் போற்றி

    ஓம் மாதர்க்கு அரசியே போற்றி
    ஓம் மாணிக்க நாயகியே போற்றி
    ஓம் எண்ணம் வாழ்வாய் போற்றி
    ஓம் மந்திர பொருளே போற்றி
    ஓம் மரகத வடிவே போற்றி
    ஓம் மாட்சி பொருளே போற்றி
    ஓம் பொற்புடை நாயகியே போற்றி
    ஓம் ஏழு உலகம் காப்பாய் போற்றி
    ஓம் புவன நாயகியே போற்றி
    ஓம் நலந்தரும் நாயகியே போற்றி

    ஓம் சித்திரக் கொடியே போற்றி
    ஓம் வெல்லும் திறமை உடையவளே போற்றி
    ஓம் வியப்புடை நாயகியே போற்றி
    ஓம் பக்குவம் தருவாய் போற்றி
    ஓம் பண்பு தருவாய் போற்றி
    ஓம் காக்கும் பொருளே போற்றி
    ஓம் கருணை நிலவே போற்றி
    ஓம் பொற்புடை சரணம் போற்றி
    ஓம் பிறை வடிவே போற்றி
    ஓம் கவலைகள் தீர்ப்பாய் போற்றி
    ஓம் தயாபரியே போற்றி
    ஓம் தைரியம் அளிப்பாய் போற்றி
    ஓம் ஜன்னம் தருவாய் போற்றி
    ஓம் மரணம் தடுப்பாய் போற்றி
    ஓம் பாசாங்குசம் கொண்டவளே போற்றி
    ஓம் தீபச் சுடரே போற்றி
    ஓம் தீப நாயகியே போற்றி
    ஓம் பிரகாதாம்பாளே போற்றி போற்றி!

    இந்த வழிபாடு ஆலயத்திற்கு சென்று வழிபட இயலாதவர்கள், வீட்டிலேயே அம்மனை நினைத்து நெய்தீபம் ஏற்றி, பூஜை செய்து வருவதன் மூலம் பலனை அடையலாம்.
    சைவ சித்தாந்தக் கருத்துக்களை உள்ளடக்கிய இந்நூல், முருகப் பெருமானின் தோற்றத்தை வருணித்து, அவரிடமிருந்து கல்வி, ஒழுக்கம் முதலியவற்றை அருளவும், துன்பங்கள் அனைத்தையும் போக்கவும் வேண்டுகிறது.
    பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய

    பாமேவு தெய்வப் பழமறையும் – தேமேவு 1

    நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த

    போதமும் காணாத போதமாய் – ஆதிநடு 2

    அந்தம் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்

    பந்தம் தணந்த பரஞ்சுடராய் – வந்த 3

    குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்

    செறியும் பரம சிவமாய் – அறிவுக்கு 4

    அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே

    மானதிகளுக்கு எட்டா வடிவாய்த் – தனாதருளின் 5

    பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்

    தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் – எஞ்சாத 6

    பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்

    காரணமும் இல்லாக் கதியாதித் – தாரணியில் 7

    இந்திரசாலம் புரிவோன் யாரையும் தான்மயக்கும்

    தந்திரத்தில் சாராது சார்வதுபோல் – முந்தும் 8

    கருவின்றி நின்ற கருவாய் அருளே

    உருவின்றி நின்ற உருவாய்த் – திரிகரணம் 9

    ஆகவரும் இச்சை அறிவு இயற்ற லால்இயல

    போகஅதி காரப் பொருளாகி – ஏகத்து 10

    உருவம் அருவும் உருஅருவும் ஆகிப்

    பருவ வடிவம் பலவாய் – இருள்மலத்துள் 11

    மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல

    பாகமுறவே கடைக்கண் பாலித்துத் – தேகமுறத் 12

    தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்

    பெந்த முறவே பிணிப்பத்து – மந்த்ரமுதல் 13

    ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்

    கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து – மாறிவரும் 14

    ஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனி என்பான்

    ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் – தீர்வரிய 15

    கண்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற்

    சென்மித்து உழலத் திரோதித்து – வெந்நிரய 16

    சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்

    நற்காரணம் சிறிது நண்ணுதலும் – தர்க்கமிடும் 17

    தொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுவே

    நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து – முன்னூல் 18

    விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைச்

    சரியைகிரி யாயோகம் சார்வித்து – அருள்பெருகு 19

    சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து

    ஆலோகம் தன்னை அகற்றுவித்து – நால்வகையாம் 20

    சத்திநி பாதம் தருதற்கு இருவினையும்

    ஒத்துவரும் காலம் உளவாகிப் – பெத்த 21

    மலபரி பாகம் வருமளவில் பன்னாள்

    அலமருதல் கண்ணுற்று அருளி – உலவாது 22

    அறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா

    நெறியில் செறிந்தநிலை நீங்கிப் – பிறியாக் 23

    கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்

    குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு – திருநோக்கால் 24

    ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்

    ஏழும் அத்துவாக்கள் இருமூன்றும் – பாழாக 25

    ஆணவமான படலம் கிழித்து அறிவில்

    காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் – பூணும் 26

    அடிஞானத் தற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்

    கடியார் புவனமுற்றும் காட்டி – முடியாது 27

    தேக்குபர மானந்தத் தெள்ளமுதம் ஆகிஎங்கும்

    நீக்கமற நின்ற நிலைகாட்டிப் – போக்கும் 28

    வரவும் நினைப்பும் மறப்பும் பகலும்

    இரவும் கடந்துஉலவா இன்பம் – மருவுவித்துக் 29

    கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்

    வன்மழுவும் மானுமுடன் மால்விடைமேல் -மின்னிடந்துப் 30

    பூத்த பவளப் பொருப்புஒன்று வெள்ளிவெற்பில்

    வாய்த்தனைய தெய்வ வடிவாகி – மூத்த 31

    கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து உள்நின்று

    ஒருமலத்தார்க்கு இன்பம் உதவிப் – பெருகியெழு 32

    மூன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேஇருத்தி

    ஈன்றபர முத்தி அடைவித்துத் – தோன்றவரும் 33

    யானெனதென்று அற்ற இடமே திருவடியா

    மோனபரா னந்தம் முடியாக – ஞானம் 34

    திருஉருவா இச்சை செயலறிவு கண்ணா

    அருளதுவே செங்கை அலரா – இருநிலமே 35

    சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே; எவ்வுயிர்க்கும்

    பின்னமற நின்ற பெருமானே – மின்னுருவம் 36

    தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன்

    வாய்ந்த கிரண மணிமுடியும் – தேய்ந்தபிறைத் 37

    துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய

    புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் – விண்ட 38

    பருவமலரப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு

    அருள்பொழியும் கண்மலர் ஈராறும் – பருதி 39

    பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்

    குலவு மகரக் குழையும் – நிலவுமிழும் 40

    புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்

    சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் – வின்மலிதோள் 41

    வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடித்து

    தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் – எவ்வுயிர்க்கும் 42

    ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப

    வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் – சூழ்வோர் 43

    வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்

    முடிக்கும் கமல முகமும் – விடுத்தலாகப் 44

    பால இருள்துரந்து பல்கதிரில் சோதிவிடம்

    வாச மலர்வதன மண்டலமும் – நேசமுடன் 45

    போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்

    மோகம் அளிக்கும் முகமதியும் – தாகமுடன் 46

    வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்

    தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் – கொந்தவிழ்ந்த 47

    வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த

    பாரப் புயசயிலம் பன்னிரண்டும் – ஆரமுதம் 48

    தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்

    வேமக் குழைந்தணைந்த மென்கரமும் – ஓவாது 49

    மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையால்

    சேர அணிந்த திருக்கரமும் – மார்பகத்தில் 50

    வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்

    உய்த்த குறங்கில் ஒருகரமும் – மொய்த்த 51

    சிறுதொடிசேர் கையும்மணி சேர்ந்ததடங் கையும்

    கறுவுசமர் அங்குசம்சேர் கையும் – தெறுபோர் 52

    அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும்

    கதிர்வாள் விதிர்க்கும் கரமும் – முதிராத 53

    கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த

    அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் – பைம்பொன் 54

    புரிநூலும் கண்டிகையும் பூம்பட் டுடையும்

    அரைஞாணும் கச்சை அழகும் – திருவரையும் 55

    நாதக் கழலும் நகுமணிப் பொற் கிண்கிணியும்

    பாதத்து அணிந்த பரிபுரமும் – சோதி 56

    இளம்பருதி நூறா யிரங்கொடி போல

    வளந்தரு தெய்வீக வடிவம் – உளந்தனில்கண்டு 57

    ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்

    மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே – ஓதியஐந்து 58

    ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்

    நீங்காத பேருருவாய் நின்றோனே – தாங்கரிய 59

    மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்

    தொந்தமுறும் வன்னமே தொக்காகப் – பந்தனையால் 60

    ஒத்த புவனத் துருவே உரோமமாத்

    தத்துவங்க ளேசத்த தாதுவா – வைத்த 61

    கலையே அவயவாக் காட்டும்அத்து வாவின்

    நிலையே வடிவமா நின்றோய் – பலகோடி 62

    அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்

    கண்டசக்தி மூன்றுட் கரணமாய்த் – தொண்டுபடும் 63

    ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்

    ஏவித் தனிநடத்தும் எங்கோவே – மேவ 64

    வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்

    தரும்அட்ட யோகத் தவமே – பருவத்து 65

    அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்

    புகலாகும் இன்பப் பொருப்பும் – சுகலளிதப் 66

    பேரின்ப வெள்ளப் பெருக்காறும் மீதானம்

    தேரின்ப நல்கும் திருநாடும் – பாரின்பம் 67

    எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு

    அல்லாது உயர்ந்த அணிநகரும் – தொல்லுலகில் 68

    ஈறும் முதலுமகன்று எங்குநிறைந்த ஐந்தெழுத்தைக்

    கூறி நடாத்தும் குரகதமும் – ஏறுமதம் 69

    தோய்ந்து களித்தோர் துதிக்கையினால் பஞ்சமலம்

    காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் – வாய்ந்தசிவ 70

    பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா

    நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் – காரணத்துள் 71

    ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்த்த வான்கொடியும்

    வந்தநவ நாத மணிமுரகம் – சந்ததமும் 72

    நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம்

    ஆக்கி அசைத்தருளும் ஆணையும் – தேக்கமழ்ந்து 73

    வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே

    பேசும் தசாங்கமெனப் பெற்றோனே – தேசுதிகழ் 74

    பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்

    பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி – ஆங்கொருநாள் 75

    வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி

    ஐந்து முகத்தோடு அதோமுகமும் – தந்து 76

    திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்

    ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப – விரிபுவனம் 77

    எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்

    பொங்கும் தழல்பிழம்பைப் பொற்கரத்தால் – அங்கண் 78

    எடுத்தமைத்து வாயுலைக் கொண்டு ஏகுதினெய்று எம்மான்

    கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் – அடுத்ததொரு 79

    பூதத் தலைவகொடு போதி எனத் தீக்கடவுள்

    சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் – போதொருசற்று 80

    அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்

    சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் – முன்னர் 81

    அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி

    நறுநீர் முடிக்கணிந்த நாதன் – குறுமுறுவல் 82

    கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்

    அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறிணையும் – தன்னிரண்டு 83

    கையால் எடுத்தணைத்துக் கத்தனெனப் பேர்புனைந்து

    மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் – செய்ய 84

    முகத்தில் அணைத்துஉச்சி மோந்து முலைப்பால்

    அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் – சகத்தளந்த 85

    வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து

    உள்ளம் உவப்ப உயர்ந்தோனே – கிள்ளைமொழி 86

    மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்

    துங்க மடவார் துயர்தீர்ந்து – தங்கள் 87

    விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்

    மருப்பாயும் தார்வீர வாகு – நெருப்பிலிதித்து 88

    அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்

    செங்கண் கிடாஅதனைச் சென்றுகொணர்ந்து – எங்கோன் 89

    விடுக்குதி என்றுஉய்ப்ப அதன் மீதுவர்ந்து எண்திக்கும்

    நடத்தி விளையாடும் நாதா – படைப்போன் 90

    அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று

    உகந்த பிரணவத்தின் உண்மை – புகன்றிலையால் 91

    சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம்

    குட்டிச் சிறையிருத்தும் கோமானே – மட்டவிழும் 92

    பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப

    முன்னம் பிரமம் மொழிந்தோனே -கொன்னெடுவேல் 93

    தாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாக

    வீரவடி வேல் விடுத்தோனே – சீரலைவாய்த் 94

    தெள்ளு திரை கொழிக்கும் செந்தூரில் போய்க்கருணை

    வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து – வெள்ளைக் 95

    கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்

    மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் – சயேந்திரனால் 96

    சூரனைச் சோதித்தவரு கென்றுதடம் தோள்விசய

    வீரனைத் தூதாக விடுத்தோனே – காரவுணன் 97

    வானவரை விட்டு வணங்காமை யால்கொடிய

    தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் – பானு 98

    பகைவன் முதலாய பாலருடன் சிங்க

    முகனைவென்று வாகை முடித்தோய் – சகமுடுத்த 99

    வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும்

    சூருடலம் கீண்ட சுடர் வேலோய் – போரவுணன் 100

    அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்

    துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் – அங்கவற்றுள் 101

    சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா

    ஏறி நடாத்தும் இளையோனே – மாறிவரு 102

    சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன

    மேவத் தனித்துயர்ந்த மேலோனே – மூவர் 103

    குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்

    சிறைவிடுத்து ஆட்கொண்ட தேவே – மறைமுடிவாம் 104

    சைவக் கொழுந்தே தவக்கடலே வானுதவும்

    தெய்வக் களிற்றை மணம்செய்தோனே – பொய்விரவு 105

    காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்

    வாமமட மானின் வயிற்றுதித்துப் – பூமருவு 106

    கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்

    ஏனற் புனங்காத்து இனிதிருந்து – மேன்மைபெறத் 107

    தெள்ளித் தினைமாவும் தேனும் பரித்தளித்த

    வள்ளிக் கொடியை மணந்தோனே – உள்ளம் உவந்து 108

    ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்

    கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோ னே – நாறுமலர்க் 109

    கந்திப் பொதும்பர்எழு காரலைக்கும் சீரலைவாய்ச்

    செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே – சந்ததமும் 110

    பல்கோடி சன்பப் பகையும் அவமி|ருத்தும்

    பல்கோடி விக்கினமும் பல்பிணியும் – பல்கோடி 111

    பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாகம்அடல்

    பூதமுதீ நீரும் பொருபடையும் – தீது அகலா 112

    வெவ்விடமும் துட்ட மிருகமுதலாம் எவையும்

    எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் – அவ்விடத்தில் 113

    பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்

    அச்சம் அகற்றும் அயில்வேலும் – கச்சைத் 114

    திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு

    அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் – விரிகிரணம் 115

    சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்

    எந்தத் திசையும் எதிர்தோன்ற – வந்திடுக்கண் 116

    எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து

    உல்லாசமாக உளத்திருந்து – பல்விதமாம் 117

    ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்

    பேசும் இயல் பல்காப் பியத் தொகையும் – ஓசை 118

    எழுத்துமுத லாம்ஐந்து இலக்கணமும் தோய்ந்து

    பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து – ஒழுக்கமுடன் 119

    இம்மைப் பிறப்பில் இருவா தனைஅகற்றி

    மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் – தம்மைவிடுத்து 120

    ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்

    தோயும் பரபோகம் துய்ப்பித்துச் – சேய 121

    கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு

    அடியேற்கு முன்னின்று அருள். 122

    திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று….
    விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.
    கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை

    கணபதி என்றிடக் காலனும் கைதொழும்

    கணபதி என்றிடக் கருமம் ஆதலால்

    கணபதி என்றிடக் கவலை தீருமே

    எனக்கு வேண்டும் வரங்களை

    இசைப்பேன் கேளாய் கணபதி

    மனதிற் சலனமில்லாமல்

    மதியில் இருளே தோன்றாமல்

    நினைக்கும் பொழுது நின் மவுன

    நிலை வந் திடநீ செயல் வேண்டும்

    கனக்குஞ் செல்வம் நூறு வயது

    இவையும் தரநீ கடவாய்…
    பேருண்டா நித்யா தேவிக்குரிய இந்த மந்திரத்தை தினமும் சொல்லி பயபக்தியுடன் வழிபாடு செய்து வந்தால், விஷக்கடி போன்ற ஆபத்துகளில் இருந்து மீளலாம்.
    அனைத்து அண்டங்களிலும் நிறைந்து அகில ஆதிகாரணியாக இருப்பதால் இந்த அன்னைக்கு ‘அநேக கோடி பிரமாண்ட ஜனனீ’ என்ற திருநாமம் உண்டு. தங்கம் போன்ற மேனியில் பட்டாடை, குண்டலங்கள், பொன் ஆரங்கள், முத்துமாலை, ஒட்டியாணம், மோதிரங்களை தரித்து, அழகான முக்கண்கள் கொண்டவள். கரங்களில் பக்தர்களின் பாவங்களை அழிக்கும் பாசம், அங்குசம், கத்தி, கோதண்டம், கவசம், வஜ்ராயுதம் தரித்துள்ளாள். தேவியின் திருவடியை தாமரை மலர் தாங்குகிறது. இந்த தேவியை வழிபாடு செய்து வந்தால், விஷக்கடி போன்ற ஆபத்துகளில் இருந்து மீளலாம்.

    வழிபட வேண்டிய திதிகள்:- வளர்பிறை சதுர்த்தி, தேய்பிறை துவாதசி.

    மந்திரம்:

    ஓம் பேருண்டாயை வித்மஹே

    விஷஹராயை தீமஹி

    தன்னோ நித்யா ப்ரசோதயாத்

    ஷண்முக கவசத்தை நாள்தோறும் ஆறு முறை பாராயணம் செய்தல் சிறப்பு. கவசத்தை வார்த்தை பிழையின்றி ஓத வேண்டும். குமாரஸ்தவம் ஓதிய பின்பு ஷண்முக கவசத்தை ஓதுவது மிகவும் சிறப்பு.
    வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும் போது அவற்றில் இருந்து வெளியேற நமக்கு உறுதுணையாக இருப்பது பக்தி என்னும் அமுத சுரபி. அதிலும் முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு வினை எல்லாம் விலகி போகும். எனவே தினந்தோறும் நாம் பூஜிக்க கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதில் சண்முக கவசத்தை படிப்பதால் நமது மனம் சுகம் பெறும். இவற்றை தினமும் பாராயணம் செய்வதால் கல்வி, தொழிலில் உள்ள எதிர்ப்புகள் அனைத்தும் பனிபோல் விலகும். அதுமட்டுமின்றி மகிழ்ச்சியுடன் வாழ வழிவகை செய்யும்.

    ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் (Shanmuga kavasam). அண்டமாய் அவனியாகி பாடல் வரிகள். அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். ஷண்முக கவசத்தை இயற்றியவர் பாம்பன் சுவாமிகளாவார். 30 செய்யுள்கள் கொண்ட இக்கவசம் ஒவ்வொரு பாடலின் முதல் எழுத்தாக உயிர் எழுத்து மற்றும் மெய் எழுத்துகளை கொண்டுள்ளது (உயிர் எழுத்து – 12, மெய் எழுத்து – 18). ஷண்முக கவசத்தை முழு நம்பிக்கையுடன் பாராயணம் செய்வோர்க்கு தீராத நோய், சங்கடம் தரும் வழக்கு, செய்வினை, சூன்யம் போன்றவை நீங்கி முருகன் அருள் கிட்டுவது உறுதி. ஷண்முக கவசத்தை நாள் தோறும் ஆறு முறை பாராயணம் செய்தல் சிறப்பு. கவசத்தை வார்த்தை பிழையின்றி ஓத வேண்டும். குமாரஸ்தவம் ஓதிய பின்பு ஷண்முக கவசத்தை ஓதுவது மிகவும் சிறப்பு. இது உலகத்தின் நோய் மருந்து இதை கண்டிப்பாக தினமும் விடியல் காலையும் மாலையும் கண்டிப்பாக கேட்கவும்….

    அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித்
    தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி
    எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன
    திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க…(1)

    ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க
    தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க
    சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க
    நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க…(2)

    இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை
    முருகவேள் காக்க, நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க
    துரிசஅறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க
    திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க…(3)

    ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க
    தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க
    ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க, எந்தன்
    ஏசிலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க…(4)

    உறுதியாய் முன்கை தன்னை உமையிள மதலை காக்க
    தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க
    புறம்கையை அயிலோன் காக்க, பொறிக்கர விரல்கள் பத்தும்
    பிறங்கு மால்மருகன்காக்க, பின்முதுகைச் சேய் காக்க…(5)

    ஊண்நிறை வயிற்றை மஞ்ஞை ஊர்த்தியோன் காக்க, வம்புத்
    தோள்நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க, குய்ய
    நாணினை அங்கி கெளரிநந்தனன் காக்க, பீஜ
    ஆணியை கந்தன்காக்க, அறுமுகன் குதத்தைக் காக்க…(6)

    எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க
    அம்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க
    விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க
    செஞ்சரண நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க…(7)

    ஏரகத் தேவன்என்தாள் இரு முழங்காலும் காக்க
    சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த்தே காக்க
    நேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க
    சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க…(8)

    ஐயுறு மலையன்பாதத்து அமர் பத்து விரலும் காக்க
    பையுறு பழநி நாத பரன், அகம் காலைக் காக்க
    மெய்யுடன் முழுதும், ஆதி விமல சண்முகவன் காக்க
    தெய்வ நாயக விசாகன் தினமும் என் நெஞ்சைக் காக்க…(9)

    ஒலியெழ உரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம்
    பலிகொள் இராக்கதப்பேய் பலகணத்து எவை ஆனாலும்
    கிலிகொள எனைவேல் காக்க, கெடுபரர் செய்யும் சூன்யம்
    வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க…(10)

    ஓங்கிய சீற்றமே கொண்டு உவணிவில் வேல் சூலங்கள்
    தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யாதி
    பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்,
    தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க…(11)

    ஒளவியமுளர் ஊன் உண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர்
    தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனைமல் கட்டத்
    தவ்வியே வருவா ராயின், சராசரம் எலாம் புரக்கும்
    கவ்வுடைச் சூர சண்டன் கைஅயில் காக்க காக்க…(12)

    கடுவிடப் பாந்தள் சிங்கம் கரடி நாய் புலிமா யானை
    கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு
    நடையுடை எதனா லேனும் நான் இடர்ப் பட்டி டாமல்
    சடுதியில் வடிவேல் காக்க சானவிமுளை வேல் காக்க…(13)

    ஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க, வன்புள்
    சிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி
    நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி
    உகமிசை இவையால், எற் குஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க…(14)

    சலத்தில் உய்வன்மீன் ஐறு, தண்டுடைத் திருக்கை, மற்றும்
    நிலத்திலும் சலத்திலும் தான் நெடுந்துயர் தரற்கே உள்ள
    குலத்தினால், நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை
    பலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க…(15)

    ஞமலியம் பரியன்கைவேல், நவக்கிரகக்கோள் காக்க
    சுமவிழி நோய்கள், தந்த சூலை, ஆக்கிராண ரோகம்,
    திமிர்கழல் வாதம், சோகை, சிரமடி கர்ண ரோகம்
    எமை அணுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க…(16)

    டமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி, கண்ட மாலை
    குமுறு விப்புருதி, குன்மம், குடல்வலி, ஈழை காசம்,
    நிமிரொணா(து) இருத்தும்வெட்டை, நீர்பிரமேகம் எல்லாம்
    எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க…(17)

    இணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால்
    முணக்கவே குறைக்கும் குஷ்டம், மூலவெண்முளை, தீமந்தம்
    சணத்திலே கொல்லும் சன்னி சாலம் என்று அறையும் இந்த
    பிணிக்குலம் எனை ஆளாமல் பெரும்சக்தி வடிவேல் காக்க…(18)

    தவனமா ரோகம், வாதம், சயித்தியம், அரோசகம், மெய்
    சுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உடற்று விக்கல்,
    அவதிசெய் பேதி சீழ்நோய், அண்டவாதங்கள், சூலை
    எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க…(19)

    நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம்
    அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல்
    இமைக்குமுன் உறு வலிப்போடு எழுபுடைப்பகந்த ராதி
    இமைப்பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க…(20)

    பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக்
    கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உருட்டி நோக்கி
    எல்லினும் கரிய மேனி எமபடர், வரினும் என்னை
    ஒல்லையில் தார காரி ஓம் ஐம் ரீம் வேல் காக்க…(21)

    மண்ணிலும் மரத்தின்மீது மலையிலும் நெருப்பின் மீதும்
    தண்ணிறை ஜலத்தின் மீதும்சாரி செய் ஊர்தி மீதும்
    விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை
    நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க…(22)

    யகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல்முன் காக்க
    அகரமே முதலாம் ஈராறு அம்பகன் வேல்பின் காக்க
    சகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க
    சிகரமின் தேவ மோலி திகழ் ஐவேல் கீழ்மேல் காக்க…(23)

    ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்
    செஞ்சய வேல் கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி
    விஞ்சிடு திசையில் ஞான வீரன் வேல் காக்க, தெற்கில்
    எஞ்சிடாக் கதிர்கா மத்தோன் இகலுடைக் கரவேல் காக்க…(24)

    லகரமே போல் காளிங்கன்நல்லுடல் நெளிய நின்று
    தகர மர்த்தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்,
    நிகழ்எனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க, மேற்கில்
    இகல் அயில்காக்க, வாயுவினில் குகன் கதிர்வேல் காக்க…(25)

    வடதிசை தன்னில் ஈசன்மகன்அருள் திருவேல் காக்க
    விடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க
    நடக்கையில் இருக்கும்ஞான்றும் நவில்கையில் நிமிர்கையில், கீழ்க்
    கிடக்கையில் தூங்குஞான்றும் கிரிதுளைத்துள வேல்காக்க…(26)

    இழந்துபோகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்,
    வழங்கும் நல் ஊண் உண்போதும் மால்விளையாட்டின் போதும்
    பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்
    செழும்குணத்தோடே காக்க, திடமுடன் மயிலும் காக்க…(27)

    இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்
    வளர் அறுமுகச் சிவன்தான் வந்தெனைக் காக்க காக்க
    ஒளிஎழு காலை, முன்எல் ஓம் சிவ சாமி காக்க
    தெளிநடு பிற்பகல் கால், சிவகுரு நாதன் காக்க…(28)

    இறகுடைக்கோழித் தோகைக்கு இறைமுன் இராவில் காக்க
    திறலுடைச் சூர்ப்பகைத்தே, திகழ்பின் இராவில் காக்க
    நறவுசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னில் காக்க
    மறைதொழு குழகன் எம்கோன் மாறாது காக்க காக்க…(29)

    இனம்எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க
    தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க
    நனி அநுபூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக்
    கனிவோடு சொன்ன தாசன் கடவுள்தான் காக்கவந்தே…(30)

    … ஸ்ரீ சண்முக கவசம் முற்றிற்று. “எனை ஆதரித்த பரம ரகசிய சக்தி எனை நம்பினோரை ஆதரியாது நிற்குமோ, ஐயம் வேண்டாம்!” – பாம்பன் சுவாமிகள்
    ×