search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மனக்கவலை, கடன்கள் நீங்க பலன் தரும் ஸ்லோகம்
    X

    மனக்கவலை, கடன்கள் நீங்க பலன் தரும் ஸ்லோகம்

    இத்துதியை தினமும் அல்லது கிருத்திகை தினத்தன்றும் பாராயணம் செய்து வந்தால் ரத்த சம்பந்தமான நோய்கள் விலகும். கடன்கள் நிவர்த்தியாகும். மனக்கவலைகள் ஓடிப்போகும்.
    பாகாராதி ஸுதாமுகாப்ஜமதுபம் பாலேந்து மெளலீஸ்வரம்
    லோகாநுக்ரஹ காரணம் ஸிவஸுதம் லோகேஸ தத்வப்ரதம்
    ராகாசந்த்ர ஸமானசாருவதனம் ரம்போருவல்லீஸ்வரம்
    ஹ்ரீங்கார ப்ரணவர ஸ்வரூபலஹரீம் ஸ்ரீகார்த்திகேயம் பஜே.
    ஸுப்ரமண்ய பஞ்சகம்.

    பொதுப்பொருள்:

    பாகன் என்ற அசுரனை வதைத்து உலகத்திற்கு நன்மையருளிய சுப்ரமண்யரே, நமஸ்காரம். இந்திரனின் மகளான தேவசேனையின் முகமாகிய தாமரைக்கு வண்டு போன்று விளங்குபவரே, பாலசந்திரனை தலையில் ஆபரணமாய்த் தரித்தவரே, நமஸ்காரம். உலகமனைத்தையும் பாதுகாப்பவரே, பரமசிவனின் புதல்வரே, சிருஷ்டி கர்த்தாவாகிய பிரம்மதேவனுக்கு பிரணவப்பொருளை உபதேசித்தவரே, நமஸ்காரம். பவுர்ணமி நிலவைப் போன்ற பிரகாசமான அழகிய திருமுகத்தையுடையவரே, வள்ளிமணாளரே, ஹ்ரீங்காரத்துடன் கூடிய பிரணவ வடிவாக விளங்குபவரே, கார்த்திகேயா, நமஸ்காரம்.
    Next Story
    ×