search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேண்டுதலை நிறைவேற்றும் நவராத்திரி ஸ்லோகம்
    X

    வேண்டுதலை நிறைவேற்றும் நவராத்திரி ஸ்லோகம்

    நவராத்திரி நாளில் தேவி தன்னைப் பூஜித்தவருக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுப்பாள் என்று சொல்வார்கள். இன்றைய தினம் சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை பார்க்கலாம்.
    கிராஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ
    ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!
    துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா
    மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!

    பொருள்: இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! மகாமாயாவாக இருந்து உலகை இயக்கச் செய்து பிரமிக்க வைப்பவளே! அருள்புரிவாயாக.

    Next Story
    ×