search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துன்பங்களை போக்கும் ஜ்வாலா மாலினி மந்திரம்
    X

    துன்பங்களை போக்கும் ஜ்வாலா மாலினி மந்திரம்

    ஜ்வாலா மாலினிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எந்த வகையான துன்பமும் தீயிலிட்ட பஞ்சுபோல் ஆகும். பகைவர்கள் அழிவர்.
    இந்த நித்யா தேவி நெருப்பு ஜுவாலை ரூபமாய் இருப்பவள். பண்டாசுரனுடன் லலிதாதேவி நடத்திய யுத்தத்தில் நூறு யோஜனை நீளமும், முப்பது யோஜனை அகலமும் முப்பது யோஜனை உயரமும், கொண்ட நெருப்புக் கோட்டையைப் படைத்தவள். அக்னியையே மாலையாகக் கொண்டவள். இந்த அம்பிகையின் வித்யை அறுபது அட்சரங்களைக் கொண்டது.

    வைடூரிய மகுடம் அணிந்து அக்னி ஜுவாலையைப் போல் சிவந்து காட்சியளிக்கும் இத்தேவிக்கு ஆறுமுகமும் பன்னிருகரங்களும் உள்ளன. கரங்களில் அங்குசம், கத்தி, வில், நெருப்பு, கதை, பாசம், கேடயம், தாமரை, சூலம், அம்பு, அபயம், வரதம் தாங்கியுள்ளாள்.

    மந்திரம்:

    ஓம் ஜ்வாலாமாலின்யை வித்மஹே
    மஹாஜ்வாலாயை தீமஹி
    தன்னோ தேவி ப்ரசோதயாத்.

    வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச சதுர்த்தசி, கிருஷ்ண பட்ச துவிதியை

    பலன்கள்: எந்தத் துன்பமும் தீயிலிட்ட பஞ்சுபோல் ஆகும். பகைவர்கள் அழிவர்.
    Next Story
    ×