search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பயத்தை போக்கும் த்வரிதா நித்யா தேவி மந்திரம்
    X

    பயத்தை போக்கும் த்வரிதா நித்யா தேவி மந்திரம்

    பக்தர்களுக்கு சீக்கிரமாய் அருள்பாலிப்பதால் ‘த்வரிதா’ என்று வணங்கப்படுகிறாள். இவளுக்கு உகந்த மந்திரதை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் எல்லா பயங்களும் போகும். பூரண ஆயுள் கிட்டும்.
    இந்த நித்யா தேவிக்கு தோதலா தேவி என்ற பெயரும் உண்டு. பக்தர்களுக்கு சீக்கிரமாய் அருள்பாலிப்பதால் ‘த்வரிதா’ என்று வணங்கப்படுகிறாள். தழைகளை ஆடையாக அணிந்தவள். எட்டு நாகங்களை தன் உடலில் சூடியுள்ளாள்.

    கருநீலநிறமான இவள் முக்கண்களுடனும் நான்கு கரங்களோடும் புன்முறுவல் பூத்த திருமுக மண்டலத்துடன் காட்சி யளிக்கிறாள். மேலும் சலங்கை, இடைமேகலை, ரத்னாபரணங்களுடன், மயில்பீலிகளைச் சூடிக்கொண்டு அலங்கார தரிசனமளிக்கிறாள்.

    மந்திரம் :

    ஓம் த்வரிதாயை வித்மஹே
    மஹாநித்யாயை தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

    வழிபட வேண்டிய திதிகள்:

    சுக்ல பட்சஅஷ்டமி, கிருஷ்ண பட்ச அஷ்டமி.

    பலன்கள்: எல்லா பயங்களும் போகும். கலைகளில் தேர்ச்சி பெற முடியும். பூரண ஆயுள் கிட்டும்.
    Next Story
    ×