search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் - தமிழில்
    X

    ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் - தமிழில்

    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகத்தை இதைத் தினமும் அல்லது அஷ்ட நாட்களில் படித்து வந்தால் தீராத கடன்கள் தீரும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகத்தை இதைத் தினமும் படித்து வந்தால் தீராத கடன்கள் தீரும். கையில் பணம் இல்லையே என நினைத்து வருந்தும்போது குறைந்த அளவுக்கான தேவைக்காவது பணம் கிடைக்க்ம் என ஆத்தீகர்களின் நம்பிக்கை.

    தனந்தரும் வயிரவன் தளிரடிபணிந்திடின்
    தளர்வுகள் தீர்ந்து விடும்
    மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்
    மகிழ்வுகள்வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின்
    சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
    தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (1)

    வாழ்வினில் வளந்தர வையகம்
    நடந்தான் வாரியே வழங்கிடுவான்
    தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
    தானெனவந்திடுவான் காழ்ப்புகள் தீர்த்தான்
    கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
    தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (2)

    முழுநில வதனில் முறையொடு
    பூஜைகள் முடித்திட அருளிடுவான்
    உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான்
    உயர்வுறச்செய்திடுவான் முழுமலர்த்
    தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
    தனக்கிலை யீடு யாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான் (3)

    நான்மறை ஓதுவார் நடுவினில்இருப்பான்
    நான்முகன் நானென்பான் தேனினில் பழத்தைச்
    சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள்
    நிறைத்திடுவான் வான்மழை எனவே
    வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
    தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (4)

    பூதங்கள் யாவும் தனக்குள்ளே
    வைப்பான் பூரணன் நான் என்பான் நாதங்கள்
    ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில்
    பூட்டிடுவான் காதங்கள் கடந்து கட்டிடும்
    மாயம் யாவையும் போக்கிடுவான்
    தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (5)

    பொழில்களில் மணப்பான் பூசைகள்ஏற்பான்
    பொன்குடம் ஏந்திடுவான் கழல்களில்
    தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
    நிழல்தரும் கற்பகம் நினைத்திட
    பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
    தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (6)

    சதுர்முகன் ஆணவத் தலையினைக்
    கொய்தான் சத்தொடு சித்தானான் புதரினில்
    பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம்
    செய்யென்றான் பதரினைக் குவித்து
    செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
    தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (7)

    ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள்
    செய்திடுவாய் ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம்
    ஜெயங்களைத் தந்திடுவாய்
    ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
    செல்வங்கள் தந்திடுவாய்
    தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான் (8)
    Next Story
    ×