search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கை மேல் பலன் தரும் நரசிம்மர் ஸ்லோகம்
    X

    கை மேல் பலன் தரும் நரசிம்மர் ஸ்லோகம்

    நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் பக்தியுடன் சொல்லி லட்சுமி நரசிம்மரை வழிபட்டால், நினைத்தது எளிதில் கைகூடும்.
    நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் பக்தியுடன் சொல்லி லட்சுமி நரசிம்மரை வழிபட்டால், நினைத்தது எளிதில் கைகூடும். நைவேதியமாக பசும்பால் அல்லது வெல்லம், எலுமிச்சை கலந்த பானகம் படைப்பது நல்லது. கைமேல் பலன் தரும் இந்த ஸ்லோகத்தை 48 நாட்கள் சொல்வது சிறப்பு.

    மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
    பிராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
    வித்யா ந்ருஸிம்ஹ: திரவிணம் ந்ருஸிம்ஹ:
    ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
    இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
    யதோ யதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ:
    ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
    தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யே!

    இந்த ஸ்லோகத்தை சொல்ல முடியாதவர்கள் இதன் பொருளைச் சொன்னாலே பலன் உண்டு.

    பொருள்: நரசிம்மனே தாய்! நரசிம்மனே தந்தை! சகோதரனாகவும், தோழனாகவும் இருப்பவனும் அவனே. அறிவும், செல்வமாகத் திகழ்பவனும் அவனேதான். நமக்கு எஜமானனாகவும், எல்லாமுமாகவும் நரசிம்மனே விளங்குகிறான். பூலோகம், விண்ணுலகத்திலும் நரசிம்மனே அருள்புரிந்து கொண்டிருக்கிறான். நாம் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் அவனே வீற்றிருக்கிறான். நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் யாருமில்லை. அதனால் நரசிம்மனே! உம்மைச் சரணடைகிறேன்.
    Next Story
    ×