search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேண்டுதலை நிறைவேற்றும் நரசிம்மர் ஸ்லோகம்
    X

    வேண்டுதலை நிறைவேற்றும் நரசிம்மர் ஸ்லோகம்

    தினமும் நீராடிய பின், “நரசிம்ம பிரபத்தி’ ஸ்லோகத்தை 3,12,24,48 என உங்களுக்கு வசதிப்படும் அளவுக்கு பாராயணம் செய்யுங்கள். 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடி விடும்.
    அறியாமலோ செய்த பாவங்களால், கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும். நரசிம்மரின் திருவடிகளில் சரணாகதி அடைவது, தண்டனையில் இருந்து விடுதலை தரும்.

    தன்னை நம்பிச் சரணடைந்தவர் யாராக இருந்தாலும், அந்த விநாடியே ஏற்று அருளும் தாயுள்ளம் படைத்தவர் நரசிம்மர். அவரது படத்தை, பூஜை அறையில் கிழக்கு நோக்கி வையுங்கள்.

    தினமும் நீராடிய பின், “நரசிம்ம பிரபத்தி’ ஸ்லோகத்தை 3,12,24,48 என உங்களுக்கு வசதிப்படும் அளவுக்கு பாராயணம் செய்யுங்கள். இதே அந்த நரசிம்ம பிரபத்தி

    நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை.
    சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே!
    அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே!
    எஜமானனும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே!
    இவ்வுலகத்திலும் நரசிம்மரே!
    அவ்வுலகத்திலும் நரசிம்மரே!
    எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மரே!
    நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை
    அதனால், நரசிம்மரே! உம்மைச் சரணடைகிறேன்.

    அஹோபில மடத்தின் 44வது பட்டமாக வீற்றிருந்த அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் அருளப்பட்ட மந்திரம் இது.

    இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும். இப்பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வரவேண்டும். கைமேல் பலன் தரும் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது.

    48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடி விடும். அதன் பிறகு நரசிம்மர் கோயிலில் சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி துளசிமாலை சாத்தி வழிபட வேண்டும். கடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம்.

    பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்பார். அவரைப் பொருத்தவரை நாளை என்பதே கிடையாது. உடனுக்குடன் பலன்களை அள்ளித்தருவார். ஆகையால் நாளை அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று மறக்காமல் நரசிம்மரை மனம் உருக வழிபடுங்கள்.
    Next Story
    ×