search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல்
    X

    ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல்

    நீண்ட ஆயுளைத் தரும் என்கிற வகையில் ஹோமத்தினை அடிக்கடி செய்யலாம். ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடலை பார்க்கலாம்.
    அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
    அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
    தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
    சிறப்பான ஓமமது தீர்க்கமாக
    வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
    மகத்தான பிரமமய மாவாய்பாரு
    இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
    என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே  

    பொருள்: அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டும். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும்.

    இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாம். அதையே தொடர்ந்து  இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.

    Next Story
    ×