search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆஞ்சநேயர் அருள் தரும் மந்திரங்கள்
    X

    ஆஞ்சநேயர் அருள் தரும் மந்திரங்கள்

    அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற தினமும் சொல்ல வேண்டிய ஆஞ்சநேயர் அருள் தரும் மந்திரங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    ஆஞ்சநேயர் அருள் கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம் வருமாறு:-

    ஸர்வ கல்யாண தாதாரம்
    ஸர்வ வாபத்கந வாரகம்
    அபார கருணா மூர்த்திம்
    ஆஞ்ச நேயம் நமாம் யஹம்

    தினமும் 21 முறை ‘ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்’ என்ற மந்திரத்தையும் கூறலாம்.

    அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற தினமும் சொல்ல வேண்டிய மந்திரம் வருமாறு:-

    ஸ்ரீராம தூத மஹாதீர
    ருத்ர வீர்ய ஸமத் பவ
    ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத
    வாயு புத்திர நமோஸ்துதே

    ஆஞ்சநேயரை வழிபட்டு கீழ்கண்ட சுலோகத்தை ஜெபித்தால் கெட்ட கனவுகள் பலிக்காது. சுலோகம் வருமாறு:-

    புத்திர் பலம் யசோதை ரியம்
    நிர்பயத்வ மரோகதா
    அஜாட்யம் வாக்படுத்வம்ச
    ஹனுமத் ஸ்மரணாத்பவேத்

    கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து ‘ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோ நம’ என்ற மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.
    Next Story
    ×