search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    கருட மாலா மந்திரத்தை தினமும் பக்தியுடன் பாராயணம் செய்பவர்கள் எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். பகை விலகும். ஆபத்து அகலும்.
    ஓம் நமோ பகவதே, கருடாய;
    காலாக்னி வர்ணாய ஏஹ்யேஹி
    கால நல லோல ஜிக்வாய பாதய
    பாதய மோஹய மோஹய
    வித்ராவய வித்ராவய ப்ரம
    ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந தஹ
    ஸ்ரீமத் பாகவதம் சொல்லும் கண்ணனின் திருக்கதையைச் சுருக்கமாகச் சொல்லும் ஒரு சின்ன சுலோகம் இது.
    ஆதௌ தேவகீ தேவி கர்ப்ப ஜனனம்
    கோபீ க்ருஹே வர்த்தனம்
    மாயா பூதன ஜீவிதாபஹரணம்
    கோவர்த்தனோத்தாரணம்
    கம்ஸ சேதன கௌரவாதி ஹனனம்
    குந்தீ ஸுதா பாலனம்
    ஏதத் பாகவதம் புராண கதிதம்

    - ஸ்ரீ க்ருஷ்ண லீலாம்ருதம்

    கீழ்க்காணும் ஸ்லோகத்தை தினமும் மாலைவேளையில் விளக்கேற்றி வைத்துச் சொல்லிவாருங்கள். உங்கள் இல்லத்திலும் மகாலட்சுமி மனமாரக் குடிகொண்டு அருள்வாள்.
    மகாலட்சுமிதேவியின் அருளைப் பெற அனைவருமே விரும்புவோம். கீழ்க்காணும் ஸ்லோகத்தை தினமும் மாலைவேளையில் விளக்கேற்றி வைத்துச் சொல்லிவாருங்கள். உங்கள் இல்லத்திலும் மகாலட்சுமி மனமாரக் குடிகொண்டு அருள்வாள். தினமும் இந்த வழிபாட்டைச் செய்ய இயலாதவர்கள், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது இதைச் செய்வது நல்லது.

    'ஸஹஸ்ரதள பத்மஸ்த கர்ணிகா வாஸினீம் பராம்
    சரத்பார்வண கோடீந்து ப்ரபாமுஷ்டிகராம் பராம்
    ஸ்வதேஜஸா ப்ரஜ்வலந்தீம் ஸுகத்ருச்யாம் மனோஹராம்
    ப்ரதப்த காஞ்சனநிப சோபாம் மூர்திமதீம் ஸதீம்
    ரத்நபூஷண பூஷாட்யாம் சோபிதாம் பீதவாஸஸா
    ஈஷத்தாஸ்ய ப்ரஸன்னாஸ்யாம்
    சஸ்வத்ஸுஸ்திரயௌவனாம்
    ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ச மஹாலக்ஷ்மீம் பஜே சுபாம்''

    கருத்து:

    ஆயிரம் தளங்களுடன் கூடிய தாமரை மலரின் நடுவில் வசிப்பவளும் சிறந்தவளும்,  சரத் காலத்தில் உள்ள கோடி சந்திரனுக்கு ஒப்பான காந்தி உள்ளவளும்,
    தனது காந்தியால் மிகவும் பிரகாசிக்கின்றவளும், ஆனந்தமயமாகக் காட்சி தருபவளும், பக்தர்களின் மனத்தைக் கவருகின்றவளும், உருக்கி வார்த்த தங்கத்தின் காந்தியே (பிரகாசமே) உருவெடுத்து வந்தது போன்று இருப்பவளும், பதிவிரதையும், ரத்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும், தங்கப் பட்டாடையால் விளங்குகின்றவளும், மந்தஹாஸத்தால் பிரசன்ன முகமுடையவளும், சாஸ்வதமாய் அமைந்துள்ள யௌவனத்தை உடையவளும், பக்தர்களுக்கு சர்வ சம்பத்துக்களையும் தருபவளும், மங்கலத்தை அருள்கின்றவளுமான ஸ்ரீ மகாலட்சுமியைப் பூஜிக்கிறேன்.

    ஸ்ரீதேவி பாகவதம் 9-வது ஸ்கந்தம், 42-வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள இந்த ஸ்லோகம் நம் இல்லத்தில் சகல சௌந்தர்யங்களையும் கொண்டுவந்து சேர்க்கக்கூடிய சக்தி கொண்டது.

    திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன.
    கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார். திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன.

    ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். கந்தவேள் கருனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை:

    தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
    சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
    மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
    ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!

    திங்கட்கிழமை:

    துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
    சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
    சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
    திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!

    செவ்வாய்க்கிழமை:

    செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
    எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
    தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
    செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!

    புதன்கிழமை:

    மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
    பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
    உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
    புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!

    வியாழக்கிழமை:

    மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
    தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
    தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
    வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!

    வெள்ளிக்கிழமை:

    அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
    வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
    வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
    வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!

    சனிக்கிழமை:

    கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
    முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
    இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
    சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!
    வாழ்க வையகம்,” வாழ்க வளமுடன்”
    இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும்.
    தன்னை நம்பிச் சரணடைந்தவர் யாராக இருந்தாலும், அந்த விநாடியே ஏற்று அருளும் தாயுள்ளம் படைத்தவர் நரசிம்மர். அவரது படத்தை, பூஜை அறையில் கிழக்கு நோக்கி வையுங்கள்.

    தினமும் நீராடிய பின், “நரசிம்ம பிரபத்தி’ ஸ்லோகத்தை 3,12,24,48 என உங்களுக்கு வசதிப்படும் அளவுக்கு பாராயணம் செய்யுங்கள். அஹோபில மடத்தின் 44வது பட்டமாக வீற்றிருந்த அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் அருளப்பட்ட மந்திரம் இது. இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும். இப்பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வரவேண்டும்.

    கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது. 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடியபின் நரசிம்மர் கோயிலில் சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி துளசிமாலை சாத்தி வழிபட வேண்டும். கடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம்.

    பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்பார். “நரசிம்ம பிரபத்தி”யின் தமிழாக்கம் வருமாறு:-

    நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை.

    சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே!

    அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே!

    எஜமானனும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே!

    இவ்வுலகத்திலும் நரசிம்மரே! அவ்வுல கத்திலும் நரசிம்மரே!

    எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல் லாம் நரசிம்மரே!

    நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை

    அதனால், நரசிம்மரே! உம்மைச் சரணடைகிறேன்.

    பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்பார்.
    கருட மந்திரம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப பெற்றே பல சித்திகளைப் பெற்றார்.
    கருடாய நமஸ்துப்யம் ஸர்வ சர்பேந்திர சத்ரவே
    வாஹனாய மஹாவிஷ்ணோ தார்க்ஷயாய அமித தேஜயே
    ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
    ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
    பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
    ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
    தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா
    திருமணம் நிச்சயம் ஆகாமல் பல இடையூறுகளை சந்திப்பவர்களும் விரைவில் மணவாழ்க்கை அமையப்பெற்று வாழ்வாங்கு வாழ பார்வதி தேவியை பிரார்த்தித்துக்கொள்கிறோம்.
    திருமணத்திற்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் துர்வாச முனிவர் அருளிய கீழ்க்காணும் ‘ஸ்வயம்வரா பார்வதி மந்திரமாலா ஸ்தோத்திரத்தை சொல்லிவரலாம்.

    ஓம் ஹ்ரீம் யோகின்யை நம:
    ஓம் ஹ்ரீம் யோகேஸ்வர்யை நம:
    ஓம் ஹ்ரீம் பயங்கர்யை நம:
    ஓம் ஹ்ரீம் பந்தூக வர்ணாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஸுகாத்ராயை நம:
    ஓம் ஹ்ரீம் அம்போஜருத்யை நம:
    ஓம் ஹ்ரீம் அபிலாஷ தாத்ர்யை நம:
    ஓம் ஹ்ரீம் நிர்ஜாதாரு கல்பாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் மந்த்ராண்யை நம:
    ஓம் ஹ்ரீம் காமாயை
    நம: (10)

    ஓம் ஹ்ரீம் க்ஷேமங்கராண்யை நம:
    ஓம் ஹ்ரீம் பால்யாவஸ்தாயை நம:
    ஓம் ஹ்ரீம் லலிதாயை நம:
    ஓம் ஹ்ரீம் பவத்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஸ்ரீகண்டபாமின்யை நம:
    ஓம் ஹ்ரீம் ப்ரபதீன வேண்யை நம:
    ஓம் ஹ்ரீம் நவயெளவனாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஸ்ரீ துர்க்காயை நம:
    ஓம் ஹ்ரீம் விலாச பயாக்ஷிண்யை நம:
    ஓம் ஹ்ரீம் க்ருச்சாயை
    நம: (20)

    ஓம் ஹ்ரீம் விலக்ராயை நம:
    ஓம் ஹ்ரீம் பர்யுஸ்த்ரிதாயை நம:
    ஓம் ஹ்ரீம் குசபராயை நம:
    ஓம் ஹ்ரீம் ஜகன்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஜனகாயை நம:
    ஓம் ஹ்ரீம் ப்ரசுர பக்த்யை நம:
    ஓம் ஹ்ரீம் கிரிசாயை நம:
    ஓம் ஹ்ரீம் பரிசாரிண்யை நம:
    ஓம் ஹ்ரீம் அனுகூலாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஈச்வர்யை
    நம: (30)

    ஓம் ஹ்ரீம் க்ரியாட்ஹ்யஜாயை நம:
    ஓம் ஹ்ரீம் பஞ்ச ஹுதாசனாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஸதாசிவாயை நம:
    ஓம் ஹ்ரீம் வித்ராச தாத்ர்யை நம:
    ஓம் ஹ்ரீம் வர்ணதாமல ஸத்கராயை நம:
    ஓம் ஹ்ரீம் மந்தஹாஸாயை நம:
    ஓம் ஹ்ரீம் மோஹாவஹாயை நம:
    ஓம் ஹ்ரீம் பவான்யை நம:
    ஓம் ஹ்ரீம் பத்ராயை நம:
    ஓம் ஹ்ரீம் ப்ரமோத ஜனன்யை
    நம: (40)

    ஓம் ஹ்ரீம் நந்தானுபூதி ரஸிகாயை நம:
    ஓம் ஹ்ரீம் கல்யாண்யை நம:
    ஓம் ஹ்ரீம் மஹேஸ்வர்யை நம:
    ஓம் ஹ்ரீம் சம்முக்த மன்மத சராசன
    சாருரூபாயை நம:
    ஓம் ஹ்ரீம் அம்பிகாயை நம:
    ஓம் ஹ்ரீம் புவன ஸுந்தர்யை நம:
    ஓம் ஹ்ரீம் தீஷ்ணாம்பராலாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஸுந்தர்யை நம:
    ஓம் ஹ்ரீம் ருத்ரப்ரியாயை நம:
    ஓம் ஹ்ரீம் கஸ்தூரிகா திலகின்யை
    நம: (50)

    ஓம் ஹ்ரீம் ரக்தாம்பராபரண
    மால்யதராயை நம:
    ஓம் ஹ்ரீம் நவகுங்கும மாத்ராயை நம:
    ஓம் ஹ்ரீம் சாருரூபாயை நம:
    ஓம் ஹ்ரீம் கிரிஜாயை நம:
    ஓம் ஹ்ரீம் கனகமங்கள சூத்ர சோபாயை நம:
    ஓம் ஹ்ரீம் சந்த்ரார்த்த சாரு மகுடாயை நம:
    ஓம் ஹ்ரீம் நவபத்ம ஸம்ஸ்த்தாயை நம:
    ஓம் ஹ்ரீம் த்ரிநேத்ராயை நம:
    ஓம் ஹ்ரீம் கதம்ப வன வாஸின்யை நம:
    ஓம் ஹ்ரீம் உத்வேலமத்ய வஸத்யை
    நம: (60)

    ஓம் ஹ்ரீம் மதுராங்காயை நம:
    ஓம் ஹ்ரீம் மாயாயை நம:
    ஓம் ஹ்ரீம் தத்வாத்மிகாயை நம:
    ஓம் ஹ்ரீம் பகவத்யை நம:
    ஓம் ஹ்ரீம் சம்பு ப்ரியாயை நம:
    ஓம் ஹ்ரீம் சசிகலா வதம்ஸாயை நம:
    ஓம் ஹ்ரீம் பாசபாண்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஸம்பத்ப்ரதான நிரதாயை நம:
    ஓம் ஹ்ரீம் புவனேச்வர்யை நம:
    ஓம் ஹ்ரீம் அபாக்ருபாயைக்ஷ
     நம: (70)

    ஓம் ஹ்ரீம் ஆருட துங்க துர்காயை நம:
    ஓம் ஹ்ரீம் ம்ருது பாஹுவல்யை நம:
    ஓம் ஹ்ரீம் ப்ரகல்பாயை நம:
    ஓம் ஹ்ரீம் மனோஞாயை நம:
    ஓம் ஹ்ரீம் காமாத்மிகாயை நம:
    ஓம் ஹ்ரீம் அகில தர்ம மூர்த்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஜயாயை நம:
    ஓம் ஹ்ரீம் த்ரிகுணஸ்வரூபாயை நம:
    ஓம் ஹ்ரீம் கருணாம்ருதாயை நம:
    ஓம் ஹ்ரீம் சமஸ்த மூர்த்யை
     நம: (80)

    ஓம் ஹ்ரீம் விஸ்வஜன மோஹன
    திவமாயாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஜகதீஸ்வர்யை நம:
    ஓம் ஹ்ரீம் கர்த்யை நம:
    ஓம் ஹ்ரீம் பர்த்ர்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஹர்த்ர்யை நம:
    ஓம் ஹ்ரீம் விதிஹராத்ம சக்த்யை நம:
    ஓம் ஹ்ரீம் புக்த்யை நம:
    ஓம் ஹ்ரீம் அமிதப்ரஸூத்யை நம:
    ஓம் ஹ்ரீம் பக்தானுகம்பின்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஸ்வாஹாயை
    நம: (90)

    ஓம் ஹ்ரீம் ஸாகர ஸுதாயை நம:
    ஓம் ஹ்ரீம் முனிமண்டல
    த்ருச்யமூர்த்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஸுராபகாயை நம:
    ஓம் ஹ்ரீம் வ்யாஹாரரூப கக்ஷமாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஹரிப்ரியாயை நம:
    ஓம் ஹ்ரீம் நீஹாரசைல தனயாயை நம:
    ஓம் ஹ்ரீம் ப்ருஹத் ப்ரகாச ரூபாயை நம:
    ஓம் ஹ்ரீம் பரேச மஹிஷ்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஹரஜீவ நாதாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஹரிப்ர முகாபி வந்த்யாயை நம: (100)

    ஓம் ஹ்ரீம் ஹேரம்ப சக்திதர நந்தின்யை நம:
    ஓம் ஹ்ரீம் ஹேம வாண்யை நம:
    ஓம் ஹ்ரீம் சண்டிகாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஹேமவத்யை நம:
    ஓம் ஹ்ரீம் தேவ்யை நம:
    ஓம் ஹ்ரீம் மதுகமலாயை நம:
    ஓம் ஹ்ரீம் ச்யாமாயை நம:
    ஓம் ஹ்ரீம் த்ரைலோக்ய ஸமயோகின்யை நம:
    ஓம் ஹ்ரீம் பரதேவதாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஜகன்மோஹின்யை
    நம: (110)

    ஓம் ஹ்ரீம் அத்ரிஸுதாயை நம:
    ஓம் ஹ்ரீம் இஷ்டார்தததாயை நம:
    ஓம் ஹ்ரீம் தேவ முனீந்த்ர வந்தித
    பதாயை நம:
    ஓம் ஹ்ரீம் பார்வத்யை நம:
    ஓம் ஹ்ரீம் வரப்ரதாயை நம:
    ஓம் ஹ்ரீம் தரா தரேந்த்ர கன்யகாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஹரித்ரா ஸமன்விதாயை நம:
    ஓம் ஹ்ரீம் ஸ்வயம்வரா பார்வத்யை
    நம: (118)
    ஆதி சங்கரர் அருளிய இந்த கணேச ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி விநாயகரை வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும். எதிரிகளின் தொல்லை நீங்கும்.
    ஸதா பால ரூபாபி விக்னாத்ரி ஹந்த்ரீ
    மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா!
    விதீந்த்ராதிகம் ருக்யா கணேஸாபிதானா
    விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாணமூர்த்தி!!
    குழந்தை வடிவமானவரே!
    தடைகளாகிய மலையை பிளக்கும் வலிமை கொண்டவரே!
    பரமேஸ்வரன் என்னும் சிங்கத்தின் அபிமானத்திற்குரியவரே!
    பிரம்மா, இந்திரன் போன்ற தேவர்களால் போற்றப்படுபவரே!
    கணங்களின் அதிபதியான விநாயகரே! மங்களமூர்த்தியே! அருள் புரிவீராக.

    - ஆதி சங்கரர் அருளிய கணேச ஸ்தோத்திரம். புஜங்க' சந்தத்தில் உள்ளது.
    ஒவ்வொரு சனிப் பிரதோஷத்தன்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு உகந்த இத்துதியை பாராயணம் செய்தால் சகல மங்களங்களும் பெருகும்.
    பக்தார்தி பஞ்ஜனபராய பராத்பராய
    காலாப்ரகாந்தி கரளாங்கித கந்தராய
    பூதேஸ்வராய புவனத்ரய காரணாய
    ஹாலாஸ்யமத்யநிலயாய நமஸ்ஸிவாய

    (மீனாட்சி ஸுந்தரேச்வர ஹாலாஸ்யநாத ஸ்தோத்திரம்)

    பொதுப்பொருள்:

    பக்தர்களுடைய மனக் கவலையைப் போக்கி அருள்பவரே, மீனாட்சி சுந்தரேஸ்வரா, நமஸ்காரம். பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்டவரே, பிரளயகால மேகம் போன்ற அருட்திரட்சி கொண்டவரே, காலகூட விஷத்தை அருந்தியதன் அடையாளமாக கழுத்தை உடையவரே, பிர மதகணங்களுக்கு ஈச்வரரானவரே, மூவுலகங்களையும் படைத்தவரே, ஹாலாஸ்ய ஷேத்திரம் எனப்படும் மதுரையம்பதியில் வசிப்பவரே, மீனாட்சி சுந்த ரேஸ்வரா, நமஸ்காரம்.
    தடைகள் நீங்கவும், சகல காரியங்கள் வெற்றி அடையவும் அம்மனுக்கு உகந்த காயத்ரி மந்திரங்களுடன் அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்களை நாமும் பாடி இஷ்ட சித்திகளைப் பெறுவோமாக
    ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி!
    ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி!
    ஓம் அருமறையின் வரம்பே போற்றி!
    ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி!
    ஓம் அரசிளங்குமரியே போற்றி!
    ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி!
    ஓம் அமுதநாயகியே போற்றி!
    ஓம் அருந்தவநாயகியே போற்றி!
    ஓம் அருள் நிறை அம்மையே போற்றி!
    ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி!
    ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி!
    ஓம் ஆதியின் பாதியே போற்றி!
    ஓம் ஆலால சுந்தரியே போற்றி!
    ஓம் ஆனந்த வல்லியே போற்றி!
    ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி!
    ஓம் இமயத்தரசியே போற்றி!
    ஓம் இடபத்தோன் துணையே போற்றி!
    ஓம் ஈசுவரியே போற்றி!
    ஓம் உயிர் ஓவியமே போற்றி!
    ஓம் உலகம்மையே போற்றி!
    ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி!
    ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி!
    ஓம் ஏகன் துணையே போற்றி!
    ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி!
    ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி!
    ஓம் ஒப்பிலா அமுதே போற்றி!
    ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி!
    ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி!
    ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி!
    ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி!
    ஓம் கல்யாண சுந்தரியே போற்றி!
    ஓம் கனகமணிக்குன்றே போற்றி!
    ஓம் கற்பின் அரசியே போற்றி!
    ஓம் கருணை ஊற்றே போற்றி!
    ஓம் கல்விக்கு வித்தே போற்றி!
    ஓம் கனகாம்பிகையே போற்றி!
    ஓம் கதிரொளிச் சுடரே போற்றி!
    ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி!
    ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி!
    ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி!
    ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி!
    ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி!
    ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி!
    ஓம் கூடற்கலாப மயிலே போற்றி!
    ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி!
    ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி!
    ஓம் சக்தி வடிவே போற்றி!
    ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி!
    ஓம் சிவகாம சுந்தரியே போற்றி!
    ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி!
    ஓம் சிவயோக நாயகியே போற்றி!
    ஓம் சிவானந்தவல்லியே போற்றி!
    ஓம் சிங்காரவல்லியே போற்றி!
    ஓம் செந்தமிழ் தாயே போற்றி!
    ஓம் செல்வத்துக்கரசியே போற்றி!
    ஓம் சேனைத்தலைவியே போற்றி!
    ஓம் சொக்கர் நாயகியே போற்றி!
    ஓம் சைவ நெறி நிலைக்கச்செய்தோய் போற்றி!
    ஓம் ஞானாம்பிகையே போற்றி!
    ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி!
    ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி!
    ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி!
    ஓம் திருவுடையம்மையே போற்றி!
    ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி!
    ஓம் திரிபுரசுந்தரியே போற்றி!
    ஓம் திருநிலை நாயகியே போற்றி!
    ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி!
    ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி!
    ஓம் தென்னவன் செல்வியே போற்றி!
    ஓம் தேன்மொழி அம்மையே போற்றி!
    ஓம் தையல் நாயகியே போற்றி!
    ஓம் நற்கனியின் சுவையே போற்றி!
    ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி!
    ஓம் நல்ல நாயகியே போற்றி!
    ஓம் நீலாம்பிகையே போற்றி!
    ஓம் நீதிக்கரசியே போற்றி!
    ஓம் பக்தர் தம் திலகமே போற்றி!
    ஓம் பழமறையின் குருந்தே போற்றி!
    ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி!
    ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி!
    ஓம் பவளவாய்க் கிளியே போற்றி!
    ஓம் பல்லுயிரின் தாயே போற்றி!
    ஓம் பசுபதி நாயகியே போற்றி!
    ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி!
    ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி!
    ஓம் பார்வதி அம்மையே போற்றி!
    ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி!
    ஓம் பெரிய நாயகியே போற்றி!
    ஓம் பொன்மயில் அம்மையே போற்றி!
    ஓம் பொற்கொடி அன்னையே போற்றி!
    ஓம் மலையத்துவசன் மகளே போற்றி!
    ஓம் மங்கள நாயகியே போற்றி!
    ஓம் மழலைக்கிளியே போற்றி!
    ஓம் மனோன்மணித்தாயே போற்றி!
    ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி!
    ஓம் மாயோன் தங்கையே போற்றி!
    ஓம் மாணிக்கவல்லியே போற்றி!
    ஓம் மீனவர்கோன் மகளே போற்றி!
    ஓம் மீனாட்சி அம்மையே போற்றி!
    ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி!
    ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி!
    ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி!
    ஓம் வடிவழகு அம்மையே போற்றி!
    ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி!
    ஓம் வேதநாயகியே போற்றி!
    ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி!
    ஓம் அம்மையே அம்பிகையே போற்றி! போற்றி!!
    ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி! போற்றி!!
    பொருளாதாரம், வியாபாரத்தில் முன்னேற்றம் காண விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் மாற்றத்தை காணலாம்.
    "ஓம் கம் கணபதயே, உத்யோகலாபம், வித்யா லாபம் குருதே நமக''

    - என்று 108 தடவை ஜபம் செய்தபின் கையில் மலர்கள் எடுத்துக் கொண்டு தன்னையே சுற்றி வருகின்ற ஆத்ம பிரதட்சிணம் செய்து- கலசம் மற்றும் வைக்கப்படும் சிறு சிலை மேல் (பிரதீமை என்றும் சொல்வர்) போட்டு விழுந்து வணங்குதல் வேண்டும்.

    அடுத்தபடியாக, விநாயகருக்கு மங்கள ஆரத்தியை செய்யலாம்.

    ஓம் தத்புருஷாய வித்மகே வக்ர துண்டாய தீமகி
    தந்தோ கணேச ப்ரசோதயாத்- கற்பூர ஜோதிம் தர்சயாமி
    - என்றோ அல்லது அழகு தமிழில்

    ஜோதி ரூபனே கணேஸ்வரா ஜோதி மைந்தனே சர்வேசா!
    ஆனை முகத்தவா கணேஸ்வரா ஆனந்த ஜோதி கணேஸ்வரா!
    அழகன் அண்ணா கணேஸ்வரா!
    ஆதி நாதனே ஆனைமுக! மங்கள ஜோதி கணேஸ்வரா!
    பணிந்தோம் ஏகதந்தேஸ்வரா! தீப மங்கள் கணேஸ்வரா!
    என்றும் மங்களம் கணேஸ்வரா!

    பிறகு ஆரத்தி, விபூதி, குங்குமம் எடுத்துக் கொண்டு வந்திருப்பவர்கள் யாராயினும் இருந்தால் கொடுக்கவும். முதல் விரத பூஜை காலத்தில் ஒரு 7 வயது சிறுவனை மனைப் பலகையில் அமர வைத்து மஞ்சள், சந்தனம் கொடுத்து தட்டில் மூன்று பழங்கள், பாயாசம் தாம்பூலம் முடிந்த அளவு 5, 10 ரூபாய் காசுகள் வைத்து விநாயகராக அந்த சிறுவனை நினைத்து வணங்கி தானம் கொடுக்க வேண்டும். அப்போது தான் விரத பூஜையில் தவறு இருந்தால் அவர் ஏற்றுக் கொள்வதாக ஐதிகம்.

    என் நாவில் நீ தங்கி குடியிருந்து சொற்பிழை பொருட்பிழை நீக்கி நல்லறிவும் நல்வாழ்வும் நீ தந்து தஞ்சமென்ற பிள்ளைகளுக்கு சாஸ்வதமான சரஸ்வதி தாயே உன் திருவடி சரணம் போற்றி... போற்றியே .....
    சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காம ரூபிணி
    வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா...
    ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
    ஏய உணர்விக்கும் என் அம்மை -தூய
    உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தினுள்ளே
    இருப்பளிங்கு வாராது இடர்.

    ஓம் கலைவாணியே போற்றி
    ஓம் கல்வியறிவு தருபவளே போற்றி
    ஓம் நான்முகனின் நாயகியே போற்றி
    ஓம் நான்முகனின் நாநுனியில் வசிப்பவளே போற்றி
    ஓம் சகல கலா வல்லித்தாயே போற்றி
    ஓம் ஏகவல்லி நாயகியே போற்றி
    ஓம் பிரம்மதேவரின் பத்தினியே போற்றி
    ஓம் பரசுராமரைப் பெற்றவளே போற்றி
    ஓம் கல்வியறிவிற்கு அதிபதியே போற்றி
    ஓம் மஹா மாயா சக்தியும் நீயே போற்றி
    ஓம் தாமரை மலரில் வாசம் செய்பவளே போற்றி
    ஓம் கேட்கும் வரமனைத்தும் தருபவளே போற்றி
    ஓம் ஞானமுத்திரை தருபவளே போற்றி
    ஓம் புத்தகம் கரத்தில் கொண்டவளே போற்றி
    ஓம் மஹா வித்தை நீயே தாயே போற்றி
    ஓம் மஹா பாதகங்களை துவம்சம் செய்பவளே போற்றி
    ஓம் அனைத்து யோகங்களையும் தருபவளே போற்றி
    ஓம் மஹாகாளி மஹாதுர்கா மஹாலஷ்மி நீயே போற்றி
    ஓம் உயரிய கல்வியை கேட்டபடி தருபவளே போற்றி
    ஓம் கற்றதற்கு ஏற்ற உயர்வாழ்வை வரமாய்த் தருபவளே போற்றி
    ஓம் சர்வ மந்த்ரங்களின் மூலாதாரப் பொருள் நீயே போற்றி
    ஓம் சர்வ மங்கள மந்திரங்கள் சித்தி யளிப்பவளே போற்றி
    ஓம் சர்வ மங்கள மாங்கல்ய பலம் தருபவளே போற்றி
    ஓம் சர்வ சாஸ்த்திரங்களின் உற்பத்தி ஸ்தலம் நீயே போற்றி
    ஓம் கற்றோரை சென்ற இடமெல்லாம் சிறப்பிக்கும் தாயே போற்றி
    ஓம் நல்லவர் நாவில் இருந்து நல்வாக்கு சொல்பவளே போற்றி
    ஓம் அற்புத மந்திரம் எழுதும் வாணியே போற்றி
    ஓம் அழகுவீணை இசைப்பவளே போற்றி
    ஓம் கலைகள் மூன்றிற்கும் மூலாதாரச் சுடரே போற்றி
    ஓம் கல்வியை உனது ரூபமாகக் கொண்டவளே போற்றி
    ஓம் யந்திர தந்திர மந்த்ரம் கற்றுத் தருபவளே போற்றி
    ஓம் தொழிற் கல்வி அனைத்தும் தருபவளே போற்றி
    ஓம் அனைத்து வாகனங்களின் சூட்சுமம் நீயே போற்றி
    ஓம் கணிதம் தந்த கலைவாணித் தாயே போற்றி
    ஓம் கணிப்பொறி யியலின் காரணி போற்றி
    ஓம் காலம் நேரம் வகுத்தவளே போற்றி
    ஓம் விஞ்ஞானத்தின் மூலாதாரமே போற்றி
    ஓம் அண்ட சராசரங்களின் இருப்பிடம் கணித்த தாயே போற்றி
    ஓம் வான சாஸ்திர அறிவின் பிறப்பிடம் நீயே போற்றி
    ஓம் வறுமையை போக்கும் கல்வித் தாயே போற்றி
    ஓம் இயல் இசை நாடகம் போதித்த கலைமகளே போற்றி
    ஓம் வீணை யொலியில் மந்த்ரம் மீட்டும் தாயே போற்றி
    ஓம் மூவுலகும் மயங்கும் வீணை மீட்டும் வீணா கான வாணி போற்றி
    ஓம் முத்தமிழும் தழைக்கச் செய்த அன்னையே போற்றி
    ஓம் வாக்கிற்கு அதிதேவதை நீயே தாயே போற்றி
    ஓம் சௌபாக்ய செல்வம் தரும் மந்த்ரம் நீயே போற்றி
    ஓம் வாழ்வைப் புனிதமாக்கும் மந்திரமே போற்றி
    ஓம் கலைவாணித் தாயே சரஸ்வதியே போற்றி
    ஓம் ரக்தபீஜ சம்ஹார மந்த்ரம் தந்த வாணீ போற்றி
    ஓம் அம்பிகை சாமுண்டி வராஹி யாவரும் நீயே போற்றி
    ஓம் முக்காலங்களிலும் முகிழ்ந்து உறைந்தவளே போற்றி
    ஓம் சுபாஷிணி சுபத்ரை விஷாலாட்சி மூவரும் நீயே போற்றி
    ஓம் பிரஹ்மி வைஷ்ணவி சண்டி சாமுண்டி நீயே போற்றி
    ஓம் பாரதி கோமதி நாயகி நாண்முகி தாயே போற்றி
    ஓம் மகாலஷ்மி மஹாசரஸ்வதி மகாதுர்கா நீயே போற்றி
    ஓம் விமலா மாகாளி மாலினி யாவரும் நீயே போற்றி
    ஓம் விந்திய விலாசினி வித்யா ரூபினி போற்றி
    ஓம் மஹா சக்தியினுள்ளே உறைபவள் போற்றி
    ஓம் சர்வ தேவியருள்ளும் உறைபவள் நீயே போற்றி
    ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் கல்வியினால் அருள்பவளே போற்றி
    ஓம் திருமால் உந்தியில் உதித்தவனின் துணைவி போற்றி
    ஓம் உலகின் எல்லா எழுத்திற்கும் மூலமே போற்றி
    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் மந்திர எழுத்துகளின் ரூபமே போற்றி
    ஓம் மந்திர ராஜ்யத்தின் தேவி பீஜாட்ஸரி போற்றி
    ஓம் சர்வாம்பிகையே சத்தியவாசினி புத்தகவாசினியே போற்றி
    ஓம் சர்வ அபாயங்களையும் துவம்சிப்பவளே போற்றி
    ஓம் சாற்றுக் கவி நாநுனி யுரையும் அன்னையே போற்றி
    ஓம் காற்றில் கலந்த மந்திர ஒலியே போற்றி
    ஓம் வித்யா திருஷ்டா யுத்மா போற்றி
    ஓம் வாக்கின் தலைவியான வாக்தேவி போற்றி
    ஓம் விஞ்சு பகவதி உயர்புகழ் பிராம்ஹி போற்றி
    ஓம் சொல்லும் சொல்லின் மெய்ஞானப் பொருளே போற்றி
    ஓம் நீதித்துறை நடுநின்ற நாயகி போற்றி
    ஓம் பண் பரதம் கல்வி தருபவளே போற்றி
    ஓம் கற்றவர் நாவில் உறைபவளே போற்றி
    ஓம் யந்திர வாகன ஆயுதங்களின் அதிதேவதையே போற்றி
    ஓம் தேகத்தின் புத்திப் பகுதியில் உறைபவளே போற்றி
    ஓம் வேத தர்ம நீதி சாஸ்திரங்கள் வகுத்தவளே போற்றி
    ஓம் பூஜிப்போர் மனம் மகிழ்விப்பவளே போற்றி
    ஓம் அனைத்து புண்ய தீர்த்தங்களின் ரூபத்தவளே போற்றி
    ஓம் யமுனை நதி தீரத்தின் மையங் கொண்டவளே போற்றி
    ஓம் சர்வ ஜீவ காருண்ய மனம் கொண்ட மாதரசி போற்றி
    ஓம் பிரம்மா லோகத்தை மையம் கொண்ட பிரம்ம நாயகி போற்றி
    ஓம் உச்ச நிலை வறுமையையும் கற்ற வித்தை கொண்டு அழிப்பவளே போற்றி
    ஓம் சரணடைந்தவர்க்கு சாஸ்வத மானவளே போற்றி
    ஓம் வேதாந்த ஞானிகளின் ரூபத்தவளே போற்றி
    ஓம் எழு தாமரை யுறை புகழ் முன்றக் கரவுருள் போற்றி
    ஓம் பின்னமேதுமில்லாமல் தேவையானதை தருபவளே போற்றி
    ஓம் இடது ஒரு கையில் சுவடி கொண்டவளே போற்றி
    ஓம் இடது மறு கையில் ஞானாமிர்த கலசம் கொண்டவளே போற்றி
    ஓம் வலது ஒரு கையில் சின் முத்ரா கொண்டவளே போற்றி
    ஓம் வலது மறு கையில் சிருஷ்டியின் அட்சரமாலை கொண்டவளே போற்றி
    ஓம் பத்மாசனம் உறைபவளே போற்றி
    ஓம் புத்திப் பிரகாசம் தருபவளே போற்றி
    ஓம் வாக்கு வன்மை தருபவளே போற்றி
    ஓம் மனதில் தூய்மை சாந்தி அமைதி தருபவளே போற்றி
    ஓம் தத்துவ எழுத்து ரூபம் தாங்கிய தேவி போற்றி
    ஓம் மஹா நைவேத்யம் உவந்தவள் போற்றி
    ஓம் கற்பூர நீராஜனம் உவந்தவள் போற்றி
    ஓம் ஸ்வர்ண புஷ்பம் உவந்தவளே போற்றி
    ஓம் யுக தர்மம் கணித்தவளே சகலகலாவல்லியே போற்றி
    ஓம் ஸ்ரீசக்கர பூஜையின் மந்திர ரூபிணியே போற்றி
    ஓம் பதாம் புயத்தவளே சகலகலாவல்லியே போற்றி
    ஓம் கற்றறிஞர் கவிமழை தரும் கலாப மயிலே போற்றி
    ஓம் கண்ணும் கருத்தும் நிறை சகலாகலாவல்லியே போற்றி
    ஓம் வெள்ளோதிமைப் பேடே சகலகலாவல்லியே போற்றி
    ஓம் கண்கண்ட தெய்வமே சகலகாவல்லியே போற்றி
    ஓம் கல்விச் செல்வம் தந்தருள்வாய் கலைவாணியே
    போற்றி ... போற்றி ... போற்றி ... போற்றியே ....

    வாணி சரஸ்வதி என் வாக்கில் நீ குடியிருந்து  
    தாயே சரஸ்வதியே சங்கரி நீ என் முன் நடந்து
    என் நாவில் குடியிருந்து நல்லோசை தந்துவிட்டு
    கமலாசனத்தாலே எமைக் காத்து
    என் குரலில் நீயிருந்து கொஞ்சிடனும் பெற்றவளே ...

    என் நாவில் நீ தங்கி குடியிருந்து
    சொற்பிழை பொருட்பிழை நீக்கி
    நல்லறிவும் நல்வாழ்வும் நீ தந்து
    மங்கல வாழ்விற்கு வழி வகுத்து
    தஞ்சமென்ற பிள்ளைகளுக்கு
    சாஸ்வதமான சரஸ்வதி தாயே
    உன் திருவடி சரணம் போற்றி...
    உன் மலரடி சரணம் போற்றி ...போற்றியே .....
    ×