search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த வார விசேஷங்கள் 18.12.2018 முதல் 24.12.2018 வரை
    X

    இந்த வார விசேஷங்கள் 18.12.2018 முதல் 24.12.2018 வரை

    டிசம்பர் மாதம் 18-ம் தேதியில் இருந்து 24-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    18-ந்தேதி (செவ்வாய்) :

    * வைகுண்ட ஏகாதசி.
    * சகல விஷ்ணு ஆலயங்களிலும் இராபத்து உற்சவம்.
    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் ஊர்த்துவ தாண்டவ காட்சி, இரவு வெள்ளி யானை வாகனத்திலும் சுவாமி பவனி.
    * குற்றாலம் குற்றாலநாதர் பஞ்சமூர்த்திகளுடன் ரத உற்சவம்.
    * ஸ்ரீரங்கம் நம்பெருமாள் முத்தங்கி சேவை.
    * காஞ்சீபுரம் பச்சை வண்ணன், பவள வண்ணன் கருட பரமபத வாசல் திறப்பு விழா.
    * சமநோக்கு நாள்.

    19-ந்தேதி (புதன்) :

    * திருப்பதி நவநதி மகா தீர்த்தம்.
    * நாச்சியார்கோவில் தெப்ப உற்சவம்.
    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் காலை ருத்ராட்சி விமானத்தில் பிட்டுக்கு மண்சுமந்த லீலை.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கும்பகோணம் சாரங்கபாணி ஆகிய தலங்களில் இராபத்து உற்சவ சேவை.
    * சங்கரன்கோவில் சங்கரநாராயணர் யானை வாகனத்திலும், கோமதி அம்மன் அன்ன வாகனத்திலும் வீதி உலா.
    * கீழ்நோக்கு நாள்.

    20-ந்தேதி (வியாழன்) :


    * பிரதோஷம்.
    * சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சுவாமி கயிலாய வாகனத்தில் வீதி உலா.
    * சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் அஷ்டாபிஷேகம்.
    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் எல்லாம் வல்ல சித்தராய் இரவு வெள்ளி குதிரையில் சேவகனாக காட்சியருளல்.
    * வீரவநல்லூர் சுவாமி விசேஷ அலங்கார சப்பரத்தில் பவனி.
    * காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள், மதுரை கூடலழகர் ஆகிய ஆலயங்களில் உற்சவ சேவை.
    * கீழ்நோக்கு நாள்.

    21-ந்தேதி (வெள்ளி) :

    * சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஈசன் தங்க ரதத்தில் பிச்சாண்டவர் திருக்கோல காட்சி.
    * திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் மகா ரத உற்சவம், மாலை ஆனந்த தாண்டவ காட்சி.
    * சங்கரன்கோவில் சங்கரநாராயணர் தந்த பல்லக்கில் வீதி உலா.
    * சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ஆகிய தலங்களில் இராபத்து உற்சவ சேவை.
    * மேல்நோக்கு நாள்.



    22-ந்தேதி (சனி) :


    * பவுர்ணமி.
    * தத்தாத்ரேயர் ஜெயந்தி.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இரவு நடராஜர் மகா அபிஷேகம்.
    * ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் பஞ்ச பிரகார உற்சவம், இரவு வெள்ளி ரதம்.
    * சிதம்பரம் நடராஜ மூர்த்தி- சிவகாமசுந்தரி ரத உற்சவம், இரவு இருவரும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளல்.
    * சங்கரன் கோவில் சங்கரநாராயணர் ஆலயத்தில் ரத உற்சவம்.
    * திருமோகூர் காளமேகப் பெருமாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் திருவாய்மொழி உற்சவம்.
    * சமநோக்கு நாள்.

    23-ந்தேதி (ஞாயிறு) :

    * ஆருத்ரா தரிசனம்.
    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தாம்பிரசபா நடனம்.
    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் பார்வதி அம்மன் ஊஞ்சல் சேவை.
    * மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ராட்டினம், பொன்னூஞ்சல்.
    * ஆவுடையார்கோவிலில் மாணிக்கவாசகருக்கு இறைவன் உபதேசம் வழங்கிய காட்சி.
    * சிதம்பரம் ஆடல்வல்லபிரான் சித்திரசபையில் சிதம்பர ரகசிய பூஜை.
    * மேல்நோக்கு நாள்.

    24-ந்தேதி (திங்கள்) :

    * காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கமன்னார், மதுரை கூடலழகர் ஆகிய தலங்களில் இராபத்து உற்சவ சேவை.
    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
    * பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.
    * சமநோக்கு நாள்.

    Next Story
    ×