என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
விரத நாளில் குளிக்க முடியவில்லையா?
Byமாலை மலர்1 Jun 2019 8:10 AM GMT (Updated: 1 Jun 2019 8:10 AM GMT)
விரத நாட்களில் ஒரு சிலர் குளிக்க முடியவில்லையே என்று மிகவும் கவலை கொள்வார்கள். இந்த மாதிரி நேரத்தில், குளித்ததற்கு ஈடாக ஏதேனும் ஒன்றை செய்ய முடியாதா என்று நினைப்பவர்கள் ஏராளம். உங்களுக்குத்தான் இது..
முக்கியமான விரதம் வரும் நாளில்தான், ஒரு சிலருக்கு ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் வந்து பாடாய்படுத்தும். அதனால் அதுபோன்ற நல்ல நாட்களில் ஒரு சிலர் குளிக்க முடியவில்லையே என்று மிகவும் கவலை கொள்வார்கள். இந்த மாதிரி நேரத்தில், குளித்ததற்கு ஈடாக ஏதேனும் ஒன்றை செய்ய முடியாதா என்று நினைப்பவர்கள் ஏராளம். உங்களுக்குத்தான் இது..
* ‘சிவசிவ’, ‘ஓம் முருகா’, ‘ஓம் சக்தி’ ‘விநாயக நமஹ’, ‘ஓம் நமோ நாராயணாய’ என்று அவரவர் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம் சொல்லி, தலை மற்றும் உடலில் நீரைத் தெளித்துக் கொள்ளலாம். இதை ‘ப்ராம்ஹ ஸ்நானம்’ என்பார்கள்.
* உடலை ஈரத் துணியால் துடைத்துக் கொள்ளலாம். இதை ‘காபில ஸ்நானம்’ என்று சொல்வார்கள்.
* உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டாலும், குளித்ததற்கு சமமான பலன் கிடைக்கும். இதற்கு ‘ஆக்நேய ஸ்நானம்’ என குறிப்பிடுவர்.
* உங்கள் வீட்டில், சுத்தமாக பராமரிக்கப்படும் பசு தொழுவம் இருந்து, அங்கே பசுவின் குளம்படிபட்ட மண் இருந்தால் அதை எடுத்து உடலில் பூசிக் கொள்ளலாம். இதுவும் உடல் சுத்தி பலனைக் கொடுக்கும். இதற்கு ‘வாயவ்ய ஸ்நானம்’ என்று பெயர்.
* விரதநாளில் நமக்கு அதிர்ஷ்டம் இருந்து, வெயில் அடிக்கும்போதே பெய்யும் மழையில் உடலை லேசாக நனைக்கலாம். இதை ‘திவ்ய ஸ்நானம்’ என்பர்.
இதில் எது சாத்தியமோ, அதை விரத நாட்களில் குளிக்க முடியாத நிலை ஏற்படும் போது, கடைப்பிடிக்கலாம்.
* ‘சிவசிவ’, ‘ஓம் முருகா’, ‘ஓம் சக்தி’ ‘விநாயக நமஹ’, ‘ஓம் நமோ நாராயணாய’ என்று அவரவர் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரம் சொல்லி, தலை மற்றும் உடலில் நீரைத் தெளித்துக் கொள்ளலாம். இதை ‘ப்ராம்ஹ ஸ்நானம்’ என்பார்கள்.
* உடலை ஈரத் துணியால் துடைத்துக் கொள்ளலாம். இதை ‘காபில ஸ்நானம்’ என்று சொல்வார்கள்.
* உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்டாலும், குளித்ததற்கு சமமான பலன் கிடைக்கும். இதற்கு ‘ஆக்நேய ஸ்நானம்’ என குறிப்பிடுவர்.
* உங்கள் வீட்டில், சுத்தமாக பராமரிக்கப்படும் பசு தொழுவம் இருந்து, அங்கே பசுவின் குளம்படிபட்ட மண் இருந்தால் அதை எடுத்து உடலில் பூசிக் கொள்ளலாம். இதுவும் உடல் சுத்தி பலனைக் கொடுக்கும். இதற்கு ‘வாயவ்ய ஸ்நானம்’ என்று பெயர்.
* விரதநாளில் நமக்கு அதிர்ஷ்டம் இருந்து, வெயில் அடிக்கும்போதே பெய்யும் மழையில் உடலை லேசாக நனைக்கலாம். இதை ‘திவ்ய ஸ்நானம்’ என்பர்.
இதில் எது சாத்தியமோ, அதை விரத நாட்களில் குளிக்க முடியாத நிலை ஏற்படும் போது, கடைப்பிடிக்கலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X