search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முக்கிய விரத நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாமா?
    X

    முக்கிய விரத நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாமா?

    முக்கிய விரத தினங்களில் கண்டிப்பாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது. அதற்கான காரணத்தை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சஷ்டி விரதம், சதுர்த்தி விரதம் போன்றவற்றை எண்ணற்ற மக்கள் மேற்கொள்கிறார்கள்.

    அப்படி விரதம் இருக்கும் நாட்களில், அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னதாக குளித்து விபூதி அணிந்து விநாயகரை வழிபட்ட பின் எந்த தெய்வத்திற்காக விரதம் இருக்கிறோமோ, அந்த தெய்வத்தை மனதில் தியானித்து “விரதத்தின் மூலம் உன் அருளைக் கேட்கிறேன். நீ விரும்பிய காரியத்தை கொடுப்பாய்” என்று எண்ணி இருகரம் கூப்பி வழிபட்ட பின்பு விரதத்தை தொடங்க வேண்டும்.

    அப்போதுதான் அந்த தெய்வம் ஆலயத்தை விட்டு உங்கள் இல்லத்தில் அடியெடுத்து வைத்து அருள் கொடுக்கும். அவ்வாறு முக்கிய விரத தினங்களில் கண்டிப்பாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது. அதிகாலை நேரத்தில் தீபாவளி தவிர மற்ற விரத காலத்தில் தவிர்த்தல் நல்லது.

    Next Story
    ×