என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இன்று சிறப்பு வாய்ந்த மாசி அமாவாசை விரதம்
Byமாலை மலர்6 March 2019 6:45 AM GMT (Updated: 6 March 2019 6:45 AM GMT)
மாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் விரதம் இருந்து மறைந்த நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் கிரக தோஷங்கள், திருமண தடை, குழந்தை பாக்கியமின்மை போன்ற பிரச்சனைகள் விரைவில் நீங்கும்.
மாசி அமாவாசை தினமான இன்று அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு, விரதம் இருந்து உங்கள் ஊரில் கோயில் குளக்கரை மற்றும் ஆற்றங்கரையோரங்களில் மறைந்த உங்கள் முன்னோர்களுக்கு சிராத்தம், திதி போன்றவற்றை தர வேண்டும். இந்த சடங்குகளை முடித்த பின்பு சிராத்த சடங்குகளை செய்வித்த வேதியர்களுக்கு அரிசி, காய்கறிகள், வஸ்திர துண்டு போன்றவற்றை தானம் அளிப்பது சிறந்தது.
தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் மகத்துவங்களை தரும் மாசி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும். திருஷ்டி கழித்து உடைபவர்களுக்கு தட்சிணை கட்டாயம் தர வேண்டும். இதை செய்வதால் தொடர்ந்து வரும் காலங்களில் தொழில், வியாபாரங்களில் நல்ல லாபங்கள் ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படாது.
மாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் விரதம் இருந்து மறைந்த நமது முன்னோர்கள் மற்றும் சமீபத்தில் மறைந்த உறவினர்கள் போன்றோர்களுக்கும் சேர்த்து பித்ரு தர்ப்பணம், சிராத்தம் தருவதால் பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்களின் ஆன்மாக்கள் நற்கதி அடைந்து நமக்கு அவர்களின் ஆசிகள் கிடைக்கின்றன. மேலும் நமது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏற்படுகின்ற கிரக தோஷங்கள், திருமண தடை, குழந்தை பாக்கியமின்மை, உடலாரோக்கிய குறைபாடுகள் போன்றவை விரைவில் நீங்கும்.
தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் மகத்துவங்களை தரும் மாசி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும். திருஷ்டி கழித்து உடைபவர்களுக்கு தட்சிணை கட்டாயம் தர வேண்டும். இதை செய்வதால் தொடர்ந்து வரும் காலங்களில் தொழில், வியாபாரங்களில் நல்ல லாபங்கள் ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படாது.
மாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் விரதம் இருந்து மறைந்த நமது முன்னோர்கள் மற்றும் சமீபத்தில் மறைந்த உறவினர்கள் போன்றோர்களுக்கும் சேர்த்து பித்ரு தர்ப்பணம், சிராத்தம் தருவதால் பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்களின் ஆன்மாக்கள் நற்கதி அடைந்து நமக்கு அவர்களின் ஆசிகள் கிடைக்கின்றன. மேலும் நமது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏற்படுகின்ற கிரக தோஷங்கள், திருமண தடை, குழந்தை பாக்கியமின்மை, உடலாரோக்கிய குறைபாடுகள் போன்றவை விரைவில் நீங்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X