search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பலன்கள் நிறைந்த விரதம்
    X

    பலன்கள் நிறைந்த விரதம்

    எல்லா யாகங்களையும் எல்லா தர்மங்களையும் விட, மிக உயர்ந்த விரதம் ‘மகா சிவராத்திரி’ விரதம் என்று கருதப்படுகிறது.
    மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்களை எமதர்மனும் நெருங்க அஞ்சுவான். எல்லா யாகங்களையும் எல்லா தர்மங்களையும் விட, மிக உயர்ந்த விரதம் ‘மகா சிவராத்திரி’ விரதம் என்று கருதப்படுகிறது.

    புராணங்களில் சொல்லப்பட்ட ஏனைய பல விரதங்களை நெடுங்காலம் கடைப்பிடிப்பதும், நூறு அசுவமேத யாகங்களை செய்வதும், பல முறை கங்கா ஸ்நானம் செய்வதும் கூட, ஒரு மகா சிவராத்திரி நாளில் ஈசனை நினைத்து விரதம் இருப்பதற்கு ஈடாகாது.

    இப்படி புராணங்கள் போற்றும் மகா சிவராத்திரி தினத்தில் உடலையும், உள்ளத்தையும் பரிசுத்தமாக்கி, சிவபெருமானை மனதில் நினைத்து, இரவு முழுவதும் கண் விழித்து நான்கு கால வேளையிலும் வழிபாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்வதால் ஒருவரின் வாழ்வில் துன்பம், வறுமை நீங்கி வாழ்வு செழிக்கும். சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே செய்த பாவங்களும் நம்மை விட்டு நீங்கிப் போகும்.

    Next Story
    ×