search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செல்வம் தரும் சாஸ்தா விரத வழிபாடு
    X

    செல்வம் தரும் சாஸ்தா விரத வழிபாடு

    பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தெய்வம் சாஸ்தா. பூச நட்சத்திரக்காரர்கள் சாஸ்தாவை விரதம் இருந்து வழிபட்டால் சகல யோகங்களும் பெறலாம்.
    பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பக்தி ஞானம் உடையவர்கள். நல்ல குணம் மிகுந்தவர்கள். எதிலும் நீதி, நியாயம் பார்ப்பவர்கள். வாக்கு தவற மாட்டார்கள். தன்னைப்போல் பிறரும் இருக்கவேண்டும் என விரும்புபவர்கள். தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வார்கள்.

    சிலர் யோசனை முறையில் தீவிர நாட்டம் உடையவராக இருப்பர். பூசம் நட்சத்திரத்தின் அதிபதி சனி. இந்நட்சத்திரத்தின் முழுமையான நாழிகை 52. இந்நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தெய்வம் சாஸ்தா. பூச நட்சத்திரக்காரர்கள் சாஸ்தாவை விரதம் இருந்து வழிபட்டால் சகல யோகங்களும் பெறலாம். பூசம் நட்சத்திரக்காரர்கள் சாஸ்தா வழிபாடு நடத்தினால் சகல செல்வங்களையும் பெறலாம். அறிவிற் சிறந்த முன்னோர்கள் நம் தேசத்தின் முக்கியமான சாஸ்திர கருத்துக்களை அழகாக, அய்யப்பப் பூஜை வழிபாட்டு முறையில் வைத்துள்ளார்கள்.

    சபரிமலைக்குச் சென்று செய்யும் அய்யப்பப் பூஜையானது. அனைத்து வழிபாடுகளையும், சாஸ்திர விஷரங்களையும் உள்ள டக்கியதாக இருக்கிறது. பண்டிதர்கள் அறிந்த விசயத்தைப் பாமரரும் அறியும் வண்ணம் அழகாக இந்த பூஜையில் நம் பெரியோர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். இதுபோன்ற ஓர் அற்புதமான வாழிபாட்டு முறையைக் காண்பது அரிது.

    ஐயப்பன் வழிபாட்டில் பல தத்துவங்கள் அடங்கி இருக்கின்றன. மாலை போட்டுக் கொண்டு 48 நாட்களுக்கு விரதம் இருத்தல், நாள் தோறும் வழிபடுதல், உணவு கட்டுப்பாடு முதலிய பல விஷயங்கள் உள்ளன. சபரிமலைக்கு பக்தியோடு கிளம்பிச் செல்லுதல், பார்ப்பவர்களை எல்லாம் சுவாமி என்று அழைத்தல், பெண்களை மாளிகைபுரம் என்று கூறுதல் என நம்முடைய பாவனை மாறுவதை கவனிக்கவேண்டும்.

    அய்யப்பனுக்கு தர்ம சாஸ்தா என்று பெயர். ஐயப்பனின் ஒரு கை வரமளிக்கிறது. மற்றொரு கையில் சின்முதிரை இருக்கிறது. கட்டை விரல் பரமாத்மாவாகிய கடவுளைக் குறிக்கிறது. ஆள் காட்டி விரல் ஜீவாத்மாவாகிய உயிரைக் குறிக்கிறது. ஜீவாத்மா பரமாத்மாவோடு இணைந்து விட்டால் நிம்மதி தானாக ஏற்படும்.

    இந்த நிம்மதி உருவாக்கி, நிலைத்து நீடிக்க பூசம் நட்சத்திரக்காரர்கள் தவறாமல் தர்ம சாஸ்தாவான அய்யப்பனை கெட்டியாக பிடித்துக் கொண்டு வழிபட வேண்டும். தர்மத்தை கற்று கொடுப்பவர் தான் அய்யப்பன். மெய்ஞானத் தைக் கற்றுக் கொடுப்பவர் அய்யப்பன். பூச நட்சத்திரக்காரர்கள் ஐயப்பனின் மூல மந்திரமாகிய சுவாமி சரணம் என்பதை ஓதிக்கொண்டே இருங்கள். காரிய தடை நீங்கி சகல யோகங்கள் பெறலாம்.
    Next Story
    ×