search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கடன் பிரச்சனையை தீர்க்கும் தோரண கணபதி விரத வழிபாடு
    X

    கடன் பிரச்சனையை தீர்க்கும் தோரண கணபதி விரத வழிபாடு

    வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் அவதிப்படுவோரும், கொடுத்த கடனை திரும்ப பெற முடியாமல் திண்டாடி வருவோருக்கும் ஒரு நல்ல வழியை ஏற்படுத்தி தருவார் தோரண கணபதி.
    மனிதர்களாகப் பிறந்தவர்கள் தேவ கடன், பித்ரு கடன், மானுட கடன் ஆகிய மூன்று கடன்களை நிச்சயம் சந்தித்தாக வேண்டும். இவற்றில் மானுட கடனைத் தீர்க்க, ஸ்ரீதோரண கணபதி விரத வழிபாடு கை கொடுக்கும்.

    செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீதோரண கணபதியைத் தரிசிப்பது விசேஷம். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் தோரண கணபதியை விரதம் இருந்து வழிபடலாம்.

    இந்த மூன்று கிழமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து ஆறு வாரங்கள்... குறிப்பிட்ட கிழமைகளில் விரதம் இருந்து ஸ்ரீதோரண விநாயகரைத் தரிசித்து, அவருக்கு மூன்று நெய் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட வேண்டும். அத்துடன் கணபதியின் மேகலை - பத்மபீடம் முன்பு அமர்ந்து, தோரணரின் மூல மந்திரத்தை 12 முறை ஜபித்து, தோப்புக்கரணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும்.

    மா, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆரஞ்சு என்று ஐவகைப் பழங்களைப் படைத்து, அர்ச்சனை செய்து வணங்குவது விசேஷம். இதனால் விரைவில் நமது கடன்கள் யாவும் தீர்ந்து, நிம்மதி பிறக்கும்.
    Next Story
    ×