என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் திரயோதசி விரதம்
Byமாலை மலர்3 Sep 2018 5:03 AM GMT (Updated: 3 Sep 2018 5:03 AM GMT)
விரதம் இருந்து திரயோதசி வேளையில் சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபடுவதால், அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கி, சந்தோஷமான வாழ்க்கை அமையும்.
அமாவாசை தினத்துக்கும், பௌர்ணமி தினத்துக்கும் அடுத்து வரும் பதிமூன்றாம் திதி 'திரயோதசி' என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் 'பிரதோஷ விரதம்.’
மாதத்துக்கு இரு முறை திரயோதசி திதியில் கடைப்பிடிக்கப்படுவதால், இது 'திரயோதசி திதி விரதம்' என்றும் அழைக்கப்படுகிறது. அமாவாசைக்கு அடுத்து வரும்போது 'சுக்கிலபட்ச திரயோதசி' என்றும், பௌர்ணமியை அடுத்த திரயோதசி 'கிருஷ்ணபட்ச திரயோதசி' என்றும் அழைக்கப்படுகிறது.
பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷம், மூவுலகையும் அழிக்க இருந்த பேரழிவில் இருந்து சிவபெருமான் காப்பாற்றிய தினம்தான் திரயோதசி. எனவே, அன்றைய தினம் விரதம் இருந்து, மாலை பிரதோஷ வேளையில் சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபடுவதால், அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கி, சிவபெருமானின் அருளால் சந்தோஷமான வாழ்க்கை அமையும்.
சனிக்கிழமைகளில் வருவது 'மகா பிரதோஷம்' என்று சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. புதிதாக பிரதோஷ விரதத்தை மேற்கொள்ள விரும்புவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் வரும் சனி மகா பிரதோஷ நாளில் கடைப்பிடிப்பது நல்லது. விரத நாளில் காலை முதல் மாலை வரை உபவாசம் இருக்க வேண்டும். பிரதோஷ நேரமாகிய மாலை 4:30 முதல் 7 மணி வரை ஆலயங்களுக்குச் சென்று, பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு இறைவனைத் தரிசித்த பின்னர் உணவருந்தி விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.
மாதத்துக்கு இரு முறை திரயோதசி திதியில் கடைப்பிடிக்கப்படுவதால், இது 'திரயோதசி திதி விரதம்' என்றும் அழைக்கப்படுகிறது. அமாவாசைக்கு அடுத்து வரும்போது 'சுக்கிலபட்ச திரயோதசி' என்றும், பௌர்ணமியை அடுத்த திரயோதசி 'கிருஷ்ணபட்ச திரயோதசி' என்றும் அழைக்கப்படுகிறது.
பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷம், மூவுலகையும் அழிக்க இருந்த பேரழிவில் இருந்து சிவபெருமான் காப்பாற்றிய தினம்தான் திரயோதசி. எனவே, அன்றைய தினம் விரதம் இருந்து, மாலை பிரதோஷ வேளையில் சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபடுவதால், அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கி, சிவபெருமானின் அருளால் சந்தோஷமான வாழ்க்கை அமையும்.
சனிக்கிழமைகளில் வருவது 'மகா பிரதோஷம்' என்று சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. புதிதாக பிரதோஷ விரதத்தை மேற்கொள்ள விரும்புவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் வரும் சனி மகா பிரதோஷ நாளில் கடைப்பிடிப்பது நல்லது. விரத நாளில் காலை முதல் மாலை வரை உபவாசம் இருக்க வேண்டும். பிரதோஷ நேரமாகிய மாலை 4:30 முதல் 7 மணி வரை ஆலயங்களுக்குச் சென்று, பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு இறைவனைத் தரிசித்த பின்னர் உணவருந்தி விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X