search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமாதானத்தையும், மன்னிப்பையும் கற்றுக்கொடுக்கும் மார்க்கம் இஸ்லாம்
    X

    சமாதானத்தையும், மன்னிப்பையும் கற்றுக்கொடுக்கும் மார்க்கம் இஸ்லாம்

    இறைவன் முன் என்பது தான் இஸ்லாத்தின் அரிய உயர்ந்த கொள்கை, தான் வாழ மட்டுமல்லாமல், பிறரையும் வாழ்விக்க வேண்டும் என்பது கடமையாக்கப்பட்டுள்ளது.
    உலகம் தோன்றி, மண் தோன்றி, கடல் தோன்றி, விலங்கு தோன்றி, மனிதனும் தோன்றி, ஷைத்தானும் தோன்றி, இறைவனின் வார்த்தைகளை மனிதன் மறக்க பெண் சுவர்க்கத்தின் கதவுகளை வெளி திறக்க மனிதர்களை உலகுக்கு அனுப்பிய இறைவன் எத்தனை, எத்தனை இன்னல்களும், பட்டும் படாத கஷ்டங்களையெல்லாம் மனிதரின் நடமாட்டத்தையும் கண்டு, தூதுவர்களை தோன்றச் செய்தீர் நன்றி.

    நன்றாக வாழ மட்டுமல்ல இறைவன் தூதுவரை அனுப்பியது வழி காட்டவே. ஆம் இழந்த சுவர்க்கத்தை எப்படி அடைவது. இறைவன் நினைத்திருந்தால் தவறு செய்த போது உடனே நரகத்திற்கு ஆதம் ஏவாளை அனுப்பி இருந்தால் நாமெல்லாம் தோன்றவே வழியிருந்திருக்காது. அவகாசம் கொடுத்து மனமாறுவீர்கள் என்பதால், சமாதானத்தையும், மன்னிப்பையும் கற்றுக் கொடுக்கின்ற மார்க்கமாய் இஸ்லாம் விளங்கும்.

    இஸ்லாம் மார்க்கம் வாழ் நாளிலேயே எண்ணிப் பார்க்க வேண்டிய மார்க்கம். உலகில் எத்தனை மதங்கள், சமயங்கள், குலங்கள், வழக் கங்கள், அத்தனைக்கும் இறுதி யாகவும், உறுதியாகவும் ஒரு இறை தூதுவரை அனுப்பினார் என்பது தான் இஸ்லாம் மார்க்கத்தின் ஆணி வேர். நபிமார்கள் எத்தனைபேர் இவ்வுலகில் இறைவனால் அனுப்பப்பட்டார்களோ அவர்களின் வழித்தடங்களை எல்லாம் இன்றைய சூழ்நிலைக்கு ஏற்பவும், உறுதிப்படுத்தியும், உலகம் தோன்றியது முதல் அழியப்போகும் காலம் வரை இறைவனின் விருப்பம் தான் நடக்கும் என்பது எல்லா மதங்களும் கூறும் உண்மையே.

    காட்சிகள், நிகழ்வுகள் மாறலாம். ஆனால் இறைவன் என்ற ஈடு இணையற்றவனும், எல்லா புகழுக்கும் உரியவனும், தேவை அற்றவருக்கும், தேவையானதை கொடுக்கக்கூடிய வரும் ஆகிய அந்த ஏக இறைவனை இஸ்லாம் என்ற மார்க்கத்தில் நாம் உற்றுநோக்குவோமேயானால் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் உலகில் எந்த ஒரு முஸ்லிமும், அடுத்த முஸ்லிமை விட உயர்ந்தவனோ, தாழ்ந்தவனோ இல்லை - இறைவன் முன் என்பது தான் இஸ்லாத்தின் அரிய உயர்ந்த கொள்கை, தான் வாழ மட்டுமல்லாமல், பிறரையும் வாழ்விக்க வேண்டும் என்பது கடமையாக்கப்பட்டுள்ளது. உரிமைகள், கடமைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு உள்ளன. அன்பு, கோபம், சட்ட திட்டங்கள், உறவு, பகை, சமாதானம், மன்னிப்பு, மனித நேயம், தண்டனை எல்லாமே எளிமையாகவும், அருமையாகவும், இறைவன் விளக்கியதாக கூறும் இஸ்லாம் உண்மைகளை எல்லோரும் கடைப்பிடிக்க முஸ்லிம்களை மட்டும் அல்லாது மனிதர்களை மனிதர்களால் அறிவுறுத்துவது அற்புதம்.

    அ.செ.வில்வநாதன் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்
    Next Story
    ×