search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ரம்ஜான் நோன்பு நாளை தொடங்குகிறது
    X

    ரம்ஜான் நோன்பு நாளை தொடங்குகிறது

    ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைப்பதுடன் கடமை முடிந்துபோவதில்லை. இம்மாதத்தில் இறைவனின் அருட்கொடைகளை பெற பலவிதமான வாய்ப்புகளை இறைவன் ஏற்படுத்தி தந்திருக்கிறான்.
    தமிழக அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் அய்யூப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஷாபான் மாதத்தின் 29-ந் தேதியான நேற்று (மே மாதம் 5-ந் தேதி) சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் ரமலான் மாத பிறை தென்படவில்லை. எனவே ஷரியத் முறைப்படி நாளை (செவ்வாய்க்கிழமை) ரமலான் மாத முதல் பிறை என்று நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது.

    எனவே ஷபே கத்ர், ஜூன் 1 மற்றும் 2-ந் தேதிக்கு இடைப்பட்ட இரவில் ஆகும்.

    இவ்வாறு தலைமை காஜி சலாஹுத்தீன் அய்யூப் கூறியுள்ளார்.

    ரம்ஜான் இல்லாத மாதங்களிலும் இந்நிலை தொடர வேண்டும் என்பதற்காகவே ஒரு வாரம், பத்து நாள் என இல்லாமல் 30 நாட்கள் அதாவது ஒரு மாதம் முழுவதும் நோன்பு இருப்பது கடமையாக்கப்பட்டுள்ளது. ‘சஹர்’ எனப்படும் காலை உணவில் இருந்து இந்த நோன்பு தொடங்குகிறது. விடியற்காலை 4 மணிக்கு சாப்பிட்டு, நோன்பை ஆரம்பிப்பார்கள்.

    ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைப்பதுடன் கடமை முடிந்துபோவதில்லை. இம்மாதத்தில் இறைவனின் அருட்கொடைகளை பெற பலவிதமான வாய்ப்புகளை இறைவன் ஏற்படுத்தி தந்திருக்கிறான். அதில் ஒன்றுதான் ‘ஜகாத்’. இதுவும் முஸ்லிம்களுக்கு கடமையாக்கியுள்ள ஐந்து விஷயங்களில் ஒன்று. நம்மிடம் கடந்த ஓராண்டில் சேமித்து வைக்கப்பட்ட பணம், நகை ஆகியவற்றின் மீது இரண்டரை சதவீத தொகையை எடுத்து ஏழைகளுக்கு வழங்க வேண்டும். இதுதான் ஜகாத். ஜகாத் தொகையை, முதலில் பெற தகுதி வாய்ந்தவர்கள் வறுமையில் உள்ள உங்கள் உறவினர்கள்தான் என்கிறது இஸ்லாம்.
    Next Story
    ×