search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா 8-ந்தேதி தொடங்குகிறது
    X

    முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா 8-ந்தேதி தொடங்குகிறது

    பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா வருகிற 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் கடையம் அருகே பொட்டல்புதூரில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தர்காவும் ஒன்றாகும்.

    இங்கு ஆண்டு தோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அதனை முன்னிட்டு அன்று மதியம் 2 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை மீது கீழுர் ஜமாஅத் நிறைபிறை கொடி, மேள தாளம் முழங்க வான வேடிக்கையுடன் பொட்டல்புதூரின் முக்கிய வீதி வழியாக சென்று பள்ளிவாசலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது.

    தொடர்ந்து 17-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு பச்சைக்கனை ஊர்வலம் நடைபெறும். 18-ந்தேதி காலை 10 மணிக்கு சுவாமி கம்முத்தவல்லி இனாம்தார் எஸ்.பி.ஷா இல்லத்தில் ராத்திபு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பகல் 12 மணிக்கு அரண்மனை கொடியேற்றமும், மதியம் 2 மணிக்கு மேலூர் ஜமாஅத் சார்பில் கொடி ஊர்வலம் தொடங்கி, மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து இரவு 10 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானைகள் முன்வர மேள தாளங்கள் முழங்க ரவணசமுத்திரத்தில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு, அதிகாலை 5 மணிக்கு பள்ளிவாசல் வந்தடையும். 19-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பள்ளிவாசலில் இனாம்தார் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு தீப அலங்காரத்திடலில் தீப அலங்காரமும் நடைபெறுகிறது. 21-ந் தேதி இரவு ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி தலைவர் எஸ்.பி.ஷா மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். 
    Next Story
    ×