search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நோன்பின் மாண்புகள்: மனம் திருந்தினால் மன்னிப்பு உண்டு
    X

    நோன்பின் மாண்புகள்: மனம் திருந்தினால் மன்னிப்பு உண்டு

    அல்லாஹ் மாபெரும் கிருபையாளன். அவன் நம் பாவங்களை மன்னித்து நம்மை நல்வழிப்படுத்தவே விரும்புகின்றான். மனம் திருந்தி வரும் அடியார்களை இறைவன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றான்.
    இஸ்லாம் என்றாலே அமைதி என்றும் கீழ்ப்படிதல் என்றும் பொருள். இறைவனுக்கு முற்றிலும் கீழ்ப்படியும் போதே அமைதி கிட்டும். இறைவனின் ஒரு கட்டளையை ஏற்று இன்னொரு கட்டளையை புறக்கணித்தால் அமைதி கிட்டாது.

    எந்தப்செயலையும் முழுமையாகவும், நிறைவாகவும் அழிகாகவும் ஈடுபாட்டோடும், தூய எண்ணத்தோடும் செய்யும் போதுதான் அச்செயல் வெற்றி பெறும். அரைகுறை மனதோடு அரைவேக்காட்டுத்தனமாகச் செய்யப்படும் செயல்கள் பயனற்றதாக இருக்கும்.

    வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் முழுமையான தெளிவான வழிபாட்டுதலை இஸ்லாம் தருகிறது. இது நடைமுறை சார்ந்தது. முழுமையான மார்க்கத்தை முழுமையாக பின்பற்றுவது சரியானது.

    இறைநம்பிக்கை கொண்டோரே, நீங்கள் முழுக்க முழுக்க இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள். மேலும் ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான பகைவனாவான் (திருக்குர்ஆன் 2:208)

    நீங்கள் வேதத்தின் ஒரு பகுதியை நம்பி மறுபகுதியை நிராகரிக்கின்றீர்களா?(திருக்குர்ஆள் 2:85)

    மேற்கூறப்பட்ட இறைவசனங்கள் இறைமார்க்கத்தை கூறுபோட்டு பின்பற்ற வேண்டாம் என்பதை வலியுறுத்துகிறது.

    இம்மையில் மூழ்சி மறுமையை மறந்து விடுபவர்கள் செய்யும் செயல்களின் பட்டியல் இது :

    தொழுபவர்களாக இருப்பவர்கள் - ஜகாத் கொடுக்க மாட்டார்க்ள். ரமலானில் பக்தியாக இருப்பவர்கள் - ரமலான் முடிந்ததும் பழைய நிலைக்கு திரும்பிவிடுவார்கள்.

    ஜாகத் கொடுப்பார்கள் - தொழ மாட்டார்கள். தடை செய்யப்பட்ட உணவை உண்ணமாட்டார்கள் - ஆனால் தடைசெய்யப்பட்ட வியாபாரத்தை செய்வார்கள்.

    வணக்கங்களில் உறுதியாக இருப்பார்கள் - வணக்கத்தின் நோக்கமான ஒழுக்கத்ததை (தக்வாவை) பெறுவதில் உறுதியாக இருக்க மாட்டார்கள். படைத்தவனுக்குரிய கடமைகளை செய்வார்கள். படைப்புக்களுக்குரிய கடமைகளை விட்டு விடுவார்கள்.

    இறைவனுடைய உரிமைகளை (அதாவது வழிபாடுகள்) நிறைவேற்றுவார்கள் - ஆனால் மனித உரிமைகளை பறிப்பார்கள். அறப்பணிகளுக்கு எளிதில் பொருள் வழங்க மாட்டார்கள் - ஆனால் விழாக்களை ஆடம்பரமாக நடத்தி வீண் விரயம் செய்வார்கள்.

    இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவ்வாறு செய்பவர்கள், ஒன்று மார்ககத்தை சரியாகத் புரிந்து கொள்ளவில்லை. அல்லது புரிந்தும் தங்கள் மன இச்சைகளுக்கு கீழ்ப்படிகிறார்கள். சூழ்நிலைகளில் தாக்கங்களுக்கு பலியாகின்றனர். நேர்வழியை விட்டு விலகி விடுகின்றார்கள்.

    இந்த நிலையில் நீடிப்பது அவர்களுக்கு நல்லதல்ல. அப்படிப்பட்டவர்கள் உடனே இறைவனின் பக்கம் திரும்பிட வேண்டும். இதுவரை செய்த தவறுகளுக்கு இறைவனிடம் மன்றாடி மன்னிப்புக்கோரி அவனிடமே மீள வேண்டும்.

    எங்கள் இறைவனே எங்களுக்கு நாங்களே அக்கிரமம் செய்து கொண்டோம். எங்களை நீ மன்னித்து எங்களுக்கு கிருபை செய்யாவிடில் நிச்சயமாக நாங்கள் இழப்பிற்குரியவர்களாகி விடுவோம்.(திருக்குர்ஆன் 7:23)

    அல்லாஹ் மாபெரும் கிருபையாளன். அவன் நம் பாவங்களை மன்னித்து நம்மை நல்வழிப்படுத்தவே விரும்புகின்றான். மனம் திருந்தி வரும் அடியார்களை இறைவன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றான்.

    - டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.  
    Next Story
    ×