என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம்
Byமாலை மலர்21 May 2018 6:17 AM GMT (Updated: 21 May 2018 6:17 AM GMT)
ரமலானில் திருக்குர்ஆன் அருளப்பட்டதால் ரமலானில் அதை அதிகம் வாசிக்கிறார்கள். திருக்குர்ஆன் வந்த மாதத்தில் அதை அதிகமாக ஓதுவதுதான் திருக்குர்ஆனுக்கு தரும் மரியாதை ஆகும்.
நோன்பிருப்பதற்கான மாதமாக மற்ற மாதங்களை விடுத்து ரமலான் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டதேன்?
“ரமலான் மாதம் எத்தகையதென்றால் அம்மாதத்தில் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்” என்று குர்ஆன் கூறுகிறது. (2:185)
மனிதன் இவ்வுலகில் செம்மையாக, அமைதியாக வாழ ஒரு வழிகாட்டுதல் தேவை. மனிதர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொண்டான். மனிதனைப் படைத்த இறைவனே அதற்கு தகுதியானவன். எனவே முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்களுக்கு தனது முதல் வழிகாட்டுதலை வழங்கினான். பின்னர் பல்வேறு நாடுகளில் வாழ்ந்த, பல்வேறு இறைத்தூதர்களுக்கு வழிகாட்டுதல்கள் அருளப்பட்டன.
அரேபியாவிலுள்ள மக்காவில் பிறந்த நபிகள் நாயகம் (ஸல்) மக்காவில் நிலவிய மூடநம்பிக்கைகளை, இறைவனைப் பற்றிய தவறான கருத்துக்களை, அநீதிகள் ஆகியவற்றைப் பற்றி ஆழமாகச் சிந்தித்தார். மக்காவிற்கு அருகிலுள்ள ‘ஹிரா’ என்ற குகையில் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். அவ்வேளையில் வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) மூலம் அவருக்கு இறைவசனங்கள் அருளப்பட்டன.
“ஓதுவீராக! (முஹம்மதே!) படைத்த இறைவனின் திருப்பெயரைக் கொண்டு! இரத்தக்கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான். ஓதுவீராக! மேலும் உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன்றியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.”(96:1-5) என்ற வசனங்களே தொடக்கத்தில் நபிகளாருக்கு அருளப்பட்ட வசனங்களாகும்.
இது ரமலான் மாதத்தின் கடைசி பத்து தினங்களில் ஒன்றில் நடைபெற்றது. அன்றிலிருந்து இருபத்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இறைவசனங்கள் நபிகளாருக்கு அருளப்பட்டுக் கொண்டேயிருந்தன. மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் அவ்வசனங்களின் மூலம் மனித குலத்திற்கு அறிவிக்கப்பட்டது.
அருளப்பட்ட காலத்தில், அருளப்பட்ட மொழியில் திருக்குர் ஆன் தொகுக்கப்பட்டதால் அதில் முரண்பாடுகளோ, இடைச்செருல்களோ இல்லாமல் பாதுகாக்கப்பட்ட நூலாக திகழ்கிறது.
ரமலானில் திருக்குர்ஆன் அருளப்பட்டதால் ரமலானில் அதை அதிகம் வாசிக்கிறார்கள். முழு திருக்குர்ஆனையும் தொழுகைகளில் ஓதுகின்றார்கள். திருக்குர்ஆன் வந்த மாதத்தில் அதை அதிகமாக ஓதுவதுதான் திருக்குர்ஆனுக்கு தரும் மரியாதை ஆகும்.
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
“ரமலான் மாதம் எத்தகையதென்றால் அம்மாதத்தில் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியதுமான குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்” என்று குர்ஆன் கூறுகிறது. (2:185)
மனிதன் இவ்வுலகில் செம்மையாக, அமைதியாக வாழ ஒரு வழிகாட்டுதல் தேவை. மனிதர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொண்டான். மனிதனைப் படைத்த இறைவனே அதற்கு தகுதியானவன். எனவே முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்களுக்கு தனது முதல் வழிகாட்டுதலை வழங்கினான். பின்னர் பல்வேறு நாடுகளில் வாழ்ந்த, பல்வேறு இறைத்தூதர்களுக்கு வழிகாட்டுதல்கள் அருளப்பட்டன.
அரேபியாவிலுள்ள மக்காவில் பிறந்த நபிகள் நாயகம் (ஸல்) மக்காவில் நிலவிய மூடநம்பிக்கைகளை, இறைவனைப் பற்றிய தவறான கருத்துக்களை, அநீதிகள் ஆகியவற்றைப் பற்றி ஆழமாகச் சிந்தித்தார். மக்காவிற்கு அருகிலுள்ள ‘ஹிரா’ என்ற குகையில் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். அவ்வேளையில் வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) மூலம் அவருக்கு இறைவசனங்கள் அருளப்பட்டன.
“ஓதுவீராக! (முஹம்மதே!) படைத்த இறைவனின் திருப்பெயரைக் கொண்டு! இரத்தக்கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான். ஓதுவீராக! மேலும் உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன்றியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.”(96:1-5) என்ற வசனங்களே தொடக்கத்தில் நபிகளாருக்கு அருளப்பட்ட வசனங்களாகும்.
இது ரமலான் மாதத்தின் கடைசி பத்து தினங்களில் ஒன்றில் நடைபெற்றது. அன்றிலிருந்து இருபத்து மூன்று ஆண்டுகள் தொடர்ந்து இறைவசனங்கள் நபிகளாருக்கு அருளப்பட்டுக் கொண்டேயிருந்தன. மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் அவ்வசனங்களின் மூலம் மனித குலத்திற்கு அறிவிக்கப்பட்டது.
அருளப்பட்ட காலத்தில், அருளப்பட்ட மொழியில் திருக்குர் ஆன் தொகுக்கப்பட்டதால் அதில் முரண்பாடுகளோ, இடைச்செருல்களோ இல்லாமல் பாதுகாக்கப்பட்ட நூலாக திகழ்கிறது.
ரமலானில் திருக்குர்ஆன் அருளப்பட்டதால் ரமலானில் அதை அதிகம் வாசிக்கிறார்கள். முழு திருக்குர்ஆனையும் தொழுகைகளில் ஓதுகின்றார்கள். திருக்குர்ஆன் வந்த மாதத்தில் அதை அதிகமாக ஓதுவதுதான் திருக்குர்ஆனுக்கு தரும் மரியாதை ஆகும்.
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X