search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாகையடி பக்கீர்பாவா தர்கா கந்தூரி பெருவிழா நாளை தொடங்குகிறது
    X

    வாகையடி பக்கீர்பாவா தர்கா கந்தூரி பெருவிழா நாளை தொடங்குகிறது

    பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் தர்கா கந்தூரி பெருவிழா நாளை(வியாழக்கிமை) தொடங்குகிறது.
    பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளை மகான் வாகையடி பக்கீர் பாவா ஹயாத் தர்கா கந்தூரி பெருவிழா நாளை(வியாழக்கிமை) தொடங்குகிறது. விழா 17-ந் தேதி வரை நடக்கிறது. நாளை மாலை 4 மணிக்கு மவுலூது ஓதுதல் நடக்கிறது.

    13-ந் தேதி இரவு 7 மணிக்கு எஸ்.எம்.அபுல்பரகாத் குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

    14-ந் தேதி மதியம் 1 மணிக்கு பிறைகொடி தாங்கிய யானை ஊர்வலம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு இஸ்லாமிய மார்க்க பேரூரை நடக்கிறது. இதற்கு மைதீன் பிள்ளை தலைமை தாங்குகிறார். சென்னை அக்பர் அலி சமதானி சிறப்புரையாற்றுகிறார்.

    15-ந் தேதி காலை 10 மணிக்கு நேர்ச்சை வழங்குதலும், இரவு 7 மணிக்கு இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

    17-ந் தேதி காலை 10 மணிக்கு மூன்றாம் ஜியாரத் நேர்ச்சை வழங்குதல் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை யு.எல்.எஸ்.எம்.டி. ஜமாத் நிர்வாகத்தினர் மற்றும் தர்கா ஆண்டுவிழா கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×