search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மெஞ்ஞான மாமேதை செய்கு பீர்முகம்மது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழா இன்று தொடங்குகிறது
    X

    மெஞ்ஞான மாமேதை செய்கு பீர்முகம்மது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழா இன்று தொடங்குகிறது

    தக்கலை மெஞ்ஞான மாமேதை செய்கு பீர்முகம்மது சாகிபு ஒலியுல்லா(ரலி) ஆண்டுபெருவிழா இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது.
    தக்கலை மெஞ்ஞான மாமேதை செய்கு பீர்முகம்மது சாகிபு ஒலியுல்லா(ரலி) ஆண்டுபெருவிழா இன்று(திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த விழா வருகிற ஏப்ரல் 2-ந் தேதி வரை தொடர்ந்து 15 நாட்கள் நடக்கிறது. அதன்படி, இன்று இரவு 9 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. 24-ந் தேதி இரவு ஜே.எம்.எச்.அரபிக் கல்லூரி மவுலனி முகம்மது இஸ்மாயில் பாசில் பாகவி இறைநேச செல்வர்கள் எனும் தலைப்பில் கருத்துரை நிகழ்த்துகிறார்.

    25-ந் தேதி இரவு 9 மணிக்கு இஸ்லாத்தில் பெண்ணுரிமை எனும் தலைப்பில் காரைக்குடி புதுவயல் பெரியபள்ளிவாசல் மவுலவி முகம்மது ரிழா பாகவியும், 29-ந் தேதி மரணத்துக்குப்பின் மனிதன் எனும் தலைப்பில் மேலப்பாளையம் மன்பவுல் பாக்கியா மகளிர் கல்லூரி நிறுவனர் மவுலவி காஜா மு.ஏ.னுத்தீன் பாகவியும், 30-ந்தேதி சமூக ஒற்றுமை காலத்தின் கட்டாயம் எனும் தலைப்பில் மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் ஹைதர் அலி மிஸ்பாவனியும் கருத்தரங்கம் நடத்துகிறார்கள்.

    பெருவிழாவில், 31-ந் தேதி இரவு 9 மணிக்கு மவுலவி முகம்மது சைப்புதீன் ஆலிம் ஸலாஹி தொடக்க உரையாற்றுகிறார். தொடர்ந்து, வலிமார்க்கமும், ஆன்மிக ஞானமும் எனும் தலைப்பில் காயல்பட்டினம் மக்ரைத்துல் காதியிய்யா அரபிக்கல்லூரி முதல்வர் எஸ். அல்செய்யது அப்துர்ரஹ்மான் பாகவி பாசில் அஹ்ளலி உரையாற்றுகிறார். ஏப்ரல் 1-ந் தேதி இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை வரை ஞானப்புகழ்ச்சி பாடுதல் நடைபெறுகிறது.

    பெருவிழா ஏற்பாடுகளை நெல்லை வக்பு கண்காணிப்பாளர் முஹ்மூத் மற்றும் விழாக்கால தற்காலிக கமிட்டியினர் ஹாஜி என்.எஸ்.ஹமீது, ஜனாப் பி.எம்.அப்துல் கபூர், ஹாஜி தாஜீதீன், ஜனாப் ஷாகுல் அமீது, ஹாஜி பீர்முகம்மது, ஜனாப் அபூஹன்யா, ஹாஜி சிராஜூதீன், ஹாஜி ஹஸனார், ஹாஜி அப்துல் அஸீஸ், ஜனாப் ஜகபர் சாதிக், ஜனாப் முகமது சலீம், ஜனாப் எம்.பி.எம். மாகீன் மற்றும் நிர்வாக குழுவினர், வக்பு கண்காணிப்பாளர் அஞ்சுவண்ணம் பீர்முகம்மதியா முஸ்லிம் அசோசியேசன், தக்கலை தமிழ்நாடு வக்பு வாரிய நேரடி நிர்வாக குழுவினர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×