search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நபிகளாருக்கு விஷம் கொடுத்த யூதப்பெண்மணி
    X

    நபிகளாருக்கு விஷம் கொடுத்த யூதப்பெண்மணி

    கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது நபி(ஸல்) அவர்களுக்கு யூதப் பெண்ணொருத்தி நபிகளாருக்கு விருந்தளிக்க விரும்புவதாக அழைப்பு விடுத்திருந்தார்.
    கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது நபி(ஸல்) அவர்களுக்கு யூதப் பெண்ணொருத்தி நபிகளாருக்கு விருந்தளிக்க விரும்புவதாக அழைப்பு விடுத்திருந்தார்.

    அழைப்பை ஏற்றார்கள் நபிகளார். அந்த யூதப் பெண்மணி விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி(ஸல்) அவர்கள் மற்றும் அவர்களது தோழர்கள் சாப்பிட அமர்ந்தனர். நபிகளாருக்கு ஆட்டின் எந்தப் பகுதி பிடிக்குமென்று அறிந்து தெரிந்து கொண்டு அந்தப் பாகத்தில் அதீத விஷத்தைத் தடவியிருந்தார் அந்தப் பெண். அன்போடு பரிசளிக்கப்பட்ட ஆட்டிலிருந்து நபி(ஸல்) சிறிது உண்டார்கள்.

    இறைச்சியை வாயில் போட்டு சுவைக்கும் முன்பே அதில் விஷம் இருப்பதை அறிந்து கொண்ட நபி(ஸல்) அவர்கள் தோழர்களை நோக்கி “இதைச் சாப்பிடாதீர்கள், இதில் விஷம் தடவப்பட்டுள்ளது” என்று தடுத்து விட்டு  'இங்கேயுள்ள யூதர்களை ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள்' என்றார்கள்.

    ஒன்று திரட்டி கொண்டு வரப்பட்ட யூதர்களை நோக்கி நபி(ஸல்), 'இந்த ஆட்டில் நீங்கள் விஷம் கலந்திருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். அப்போது கூட்டத்திலிருந்த அந்த யூதப் பெண்மணி தைரியமாக, 'ஆம் கலந்திருக்கிறோம்' என்று பதில் சொன்னார். நபி(ஸல்) அவர்கள், 'ஏன் இப்படிச் செய்தீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'நீங்கள் பொய்யராக இருந்து விஷத்தின் மூலம் இறந்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நீங்கள் இறைத் தூதராக இருந்தால் உங்களுக்கு அந்த விஷமானது தீங்கு செய்யாது' என்று பதிலளித்தார்கள்.

    நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் கொந்தளித்தனர். 'அவளைக் கொன்று விடுவோமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. நபிகளாரோ, 'வேண்டாம்' என்று கூறிவிட்டார்கள்.

    நபி (ஸல்) அவர்களுடன் விருந்தில் இருந்த பிஷ்ர் இப்னு பரா (ரலி) என்ற தோழர் அந்த விஷம் கலந்த ஆட்டிலிருந்து ஒரு துண்டை முழுமையாகச் சாப்பிட்டதால் மரணித்து விட்டார். மரணித்துவிட்டதால் அப்பெண்மணிக்குத் தண்டனை தந்தே ஆக வேண்டுமென்று தோழர்கள் வலியுறுத்தினர்.

    நபிகளாரால் மன்னிக்கப்பட்டவர், அவள் தந்த விஷத்தால் பிஷ்ர் (ரலி) இறந்துவிட்டதால் அவளுக்குத் தண்டனைத் தரப்பட்டது என்று சில அறிஞர்களின் வரலாறு குறிப்பில் உள்ளது.

    நபி(ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பு அவர்களது மரணப்படுக்கை வரை தொடர்ந்தது.

    ஆதாரம்: ஸஹீஹ் புகாரி 3:51:2671, 3:58:3169, இப்னு ஹிஷாம்

    - ஜெஸிலா பானு.
    Next Story
    ×