search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வேலை வாய்ப்பு, நோய்களை தீர்க்கும் ஸ்ரீரங்கம் சிங்க பெருமாள்
    X

    வேலை வாய்ப்பு, நோய்களை தீர்க்கும் ஸ்ரீரங்கம் சிங்க பெருமாள்

    வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு, தீராத நோய்கள் தீருவது மற்றும் இன்ன பிற விரும்பிய வரங்களை ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்க பெருமாள் அருள்வதாக கூறுகிறார்கள் பக்தர்கள்.
    தன்னை வழிபடும் பக்தர்களின் அனைத்து தேவைகளையும் தீர்த்து தனது அருட்கடாச்சத்தை தருபவர் ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர். சுமார் 2500 ஆண்டுகளுக்குமேல் பழமையான கோவிலாக இக்கோவில் இருக்கிறது. இக்கோயிலின் பிரதான தெய்வமான திருமாலின் அவதாரமான நரசிம்ம மூர்த்தி காட்டழகிய சிங்கர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். இக்கோவில் ஒரு பிராத்தனை தலமாக விளங்குகிறது. பெருமாளின் ஜென்ம நட்சத்திரமான சுவாதி நட்சத்திர தினத்தன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. பக்தர்கள் விரும்பும் நட்சத்திர தினங்களிலும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது.

    இந்த நாளில் பெருமாளை வழிபடுபவர்களுக்கு வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு, தீராத நோய்கள் தீருவது மற்றும் இன்ன பிற விரும்பிய வரங்களை பெருமாள் அருள்வதாக கூறுகிறார்கள் பக்தர்கள். பிரதோஷ நாளில் இந்த நரசிம்மருக்கு செய்யப்படும் பூஜையில் கலந்து கொண்டு வழிபடும் குழந்தை பாக்கியமில்லாத தம்பதிகளுக்கு நிச்சயம் குழந்தை பிறக்கும் என்று உறுதியாக கூறுகிறார்கள். வைகாசி நரசிம்ம ஜெயந்தி, ஆனி சுவாதி நட்சத்திரம், ஆடி ஜேஷ்டாபிஷேகம், பங்குனி யுகாதி ஆகிய நான்கு நாட்களின் போது ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து தைலக்காப்பு, திருப்பணியாரங்கள் இக்கோயிலுக்கு அனுப்பப்படுகிறது.

    கோவில் முகவரி

    அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயில்
    ஸ்ரீரங்கம்
    திருச்சிராப்பள்ளி - 620006
    தொலைபேசி எண் 431 - 2432246
    Next Story
    ×