search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பாம்புரம் சென்று பரிகார பூஜை செய்ய வேண்டியவர்கள்
    X

    திருப்பாம்புரம் சென்று பரிகார பூஜை செய்ய வேண்டியவர்கள்

    கால சர்ப்ப தோஷம், புத்திர தோஷம், களத்திர தோஷம், பதினெட்டு வருட ராகு திசை நடப்பவர்கள், தெரிந்தோ, தெரியாமலோ பாம்பை அடித்தவர்கள் ஆகியோர் திருப்பாம்புரம் சென்று பரிகார பூஜை செய்து வரலாம்.
    ‘பாம்பு கிரகங்கள்’ என்று வர்ணிக்கப்படுபவர்கள் ராகுவும், கேதுவும் ஆவார்கள். இந்த இரண்டு கிரகங்களுக்கும் தனித்தனியே திருத்தலங்கள் இருக்கின்றன. அதுபோல ராகுவும், கேதுவும் ஒரே சரீரமாக இணைந்து இறைவனை தரிசித்த தலம் தான் ‘திருப்பாம்புரம்.’ திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் கொல்லுமாங்குடிக்கு அருகில் இந்த ஊர் இருக்கிறது.

    புதுவை மாநிலம் காரைக்காலில் இருந்தும் அருகாமையில் தான் உள்ளது. இங்குள்ள சுவாமி ‘பாம்புரநாதர்’ என்றும், அம்பாள் ‘வண்டார்குழலி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

    ராகு- கேது பெயர்ச்சியால் நற்பலன் பெறுவோர், மேலும் நற்பலன் பெறவும், துர்பலன் பெறுவோர் அதன் கடுமையை தணித்து, கெடுதல்கள் நீங்கப்பெறவும் இந்த ஆலயத்திற்குச் சென்று வழிபடலாம்.

    கால சர்ப்ப தோஷம், புத்திர தோஷம், களத்திர தோஷம், பதினெட்டு வருட ராகு திசை நடப்பவர்கள், தெரிந்தோ, தெரியாமலோ பாம்பை அடித்தவர்கள் ஆகியோர் திருப்பாம்புரம் சென்று பரிகார பூஜை செய்து வரலாம். திருப்பாம்புரம் சென்றால் திருப்பங்கள் உருவாகும்.
    Next Story
    ×