என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தோஷங்களை நிவர்த்தி செய்யும் தாயத்து
Byமாலை மலர்16 Jan 2019 5:47 AM GMT (Updated: 16 Jan 2019 5:47 AM GMT)
மனிதருக்கு உண்டாகும் தோஷங்களை நிவர்த்தி செய்ய வேண்டி தாயத்து மந்திரித்து பூஜித்து நோயாளிகள், குழந்தைகள், பெண்கள், பேய் பிசாசு பூதம் பிடித்தவர்களுக்கு அணிவித்து சிகிச்சை செய்வதே குளிசமாடல் (அ) குளிசங்கட்டல் எனப்படும்.
மனிதருக்கு உண்டாகும் தோஷங்களை நிவர்த்தி செய்ய வேண்டி தாயத்து மந்திரித்து பூஜித்து நோயாளிகள், குழந்தைகள், பெண்கள், பேய் பிசாசு பூதம் பிடித்தவர்கள் ஆகியோருக்கு அணிவித்து சிகிச்சை செய்வதே குளிசமாடல் (அ) குளிசங்கட்டல் எனப்படும்.
* நஞ்சு முறிவிற்காக சில தெய்வீக மூலிகை வேர்களை தாயத்தில் அடைத்து மாந்திரீகம் செய்வோர், விஷக்கடி வைத்தியர், பாம்பாட்டிகள் ஆகியோர் தமது உடலில் அணிந்து கொள்வதாகும், இது தங்களை பாதுகாத்து கொள்வதற்கும், கடி விஷங்களை இறக்குவதற்கும் பயன்படுத்துவர்.
* கொடிக்குளிசம் என்பது சிறு குழந்தைகளுக்கு தொப்புள் கொடியை உலர்த்தி தாயத்தில் அடைத்து இடுப்பில் கட்டிவைத்தல், குழந்தைக்கு உடல்நிலை கோளாறோ அல்லது மாந்திரீக கோளாறோ ஏற்படும்போது அந்த தொப்புள் கொடியை பாலில் உரைத்து ஊட்டவோ அல்லது புகை போட்டு நாசியில் இழுக்க செய்யவோ பயன்படுத்துவர்.
* காப்புகட்டுதல் என்பது தெய்வீக மூலிகைகளின் சாப நிவர்த்திக்காகவும், அவற்றின் முழுபயனை பெறுவதற்காகவும் மந்திர சாஸ்திரப்படி அவற்றிற்கு குறிப்பிட்ட நேரத்தில் கட்டுவதாகும்.
* இதில் பரிகாரம் என்பது செம்பு வெள்ளி தங்கம் முதலிய உலோக தகடுகளில் சக்கரம் அல்லது கோடுகளைக் கீறி அந்த கட்டங்களுக்குள் மந்திர எண்எழுத்துக்களை பதித்து சிறு குழாயினுள் செலுத்தி பாதிப்புற்றவர்களின் உடலில் கை, கால்கள், இடுப்பு, புஜம், கழுத்து முதலிய இடங்களில் கட்டுவதாகும். இதனால் பேய், பிசாசு, பில்லி, சூனியம், கிரகதோஷம், நோய் இவற்றினால் வந்த பாதிப்பு நீங்கும், மற்றும் வசியம் உட்பட அஷ்ட கர்மங்கள் சித்தியும் ஆகும், தீயசக்தி விலகி செல்வசெழிப்பு உண்டாகும்.
* நஞ்சு முறிவிற்காக சில தெய்வீக மூலிகை வேர்களை தாயத்தில் அடைத்து மாந்திரீகம் செய்வோர், விஷக்கடி வைத்தியர், பாம்பாட்டிகள் ஆகியோர் தமது உடலில் அணிந்து கொள்வதாகும், இது தங்களை பாதுகாத்து கொள்வதற்கும், கடி விஷங்களை இறக்குவதற்கும் பயன்படுத்துவர்.
* கொடிக்குளிசம் என்பது சிறு குழந்தைகளுக்கு தொப்புள் கொடியை உலர்த்தி தாயத்தில் அடைத்து இடுப்பில் கட்டிவைத்தல், குழந்தைக்கு உடல்நிலை கோளாறோ அல்லது மாந்திரீக கோளாறோ ஏற்படும்போது அந்த தொப்புள் கொடியை பாலில் உரைத்து ஊட்டவோ அல்லது புகை போட்டு நாசியில் இழுக்க செய்யவோ பயன்படுத்துவர்.
* காப்புகட்டுதல் என்பது தெய்வீக மூலிகைகளின் சாப நிவர்த்திக்காகவும், அவற்றின் முழுபயனை பெறுவதற்காகவும் மந்திர சாஸ்திரப்படி அவற்றிற்கு குறிப்பிட்ட நேரத்தில் கட்டுவதாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X