என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண தடை நீக்கும் பரிகாரம்
Byமாலை மலர்10 Jan 2019 4:41 AM GMT (Updated: 10 Jan 2019 4:41 AM GMT)
உடல்ரீதியாக குறைபாடு அடைந்த நபர்கள் கவலை கொள்ளாமல் இறைவனின் மீது முழு நம்பிக்கை வைத்து சில எளிய பரிகார வழிபட்டு முறைகளை செய்தால் சீக்கிரம் சிறந்த வாழ்க்கை துணை அமைய பெறுவார்கள்.
இக்காலத்தில் பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு சரியான வரன் பார்த்து திருமணம் செய்வதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர். இதிலும் உடலில் குறைபாடு அடைந்த நபர்களும், அவர்களின் பெற்றோர்கள் அவர்களுக்கு திருமணம் செய்ய முடியாமல் அடையும் வேதனை வெளியில் சொல்ல முடியாதது. இப்படிப்பட்ட நபர்களும் வெகு விரைவில் இல்லற வாழ்க்கை அமைய பெறுவதற்கான பரிகாரங்களை பார்க்கலாம்..
தற்காலத்தில் உள்ள வாழ்க்கை முறை மற்றும் பொருளாதார நிலை காரணமாக திருமண வயது வந்த ஆண்களும், பெண்களும் மிகுந்த காலங்கடந்தே திருமணம் செய்கின்றனர். மேலும் பலருக்கு காலங்கடந்தே பொருளாதார காரணங்களால் சரியான வரன் கிடைக்காமல் திருமணம் தாமதமாகிறது. இதில் பிறவியிலேயோ அல்லது விபத்திலேயோ உடல் குறைபாடு அடைந்த மாற்றுத்திறனாளி ஆண்கள், பெண்கள் கல்வி, பொருளாதார தகுதி போன்றவை இருந்தும் பலர் திருமணம் ஆகாமலே வாழும் பரிதாப நிலை பரவலாக காணப்படுகிறது.
இப்படி உடல்ரீதியாக குறைபாடு அடைந்த நபர்கள் கவலை கொள்ளாமல் இறைவனின் மீது முழு நம்பிக்கை வைத்து சில எளிய பரிகார வழிபட்டு முறைகளை செய்தால் சீக்கிரம் சிறந்த வாழ்க்கை துணை அமைய பெறுவார்கள். மாற்றுத்திறனாளி திருமணமாக ஆண்கள் மற்றும் பெண்கள் 9 சனிக்கிழமைகள் சனீஸ்வரர் சந்நிதியில் கருப்பு எள் கலந்த விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, உங்களின் திருமண தடை நீங்க வேண்டும் என மனதார நினைத்து சனி பகவானை வழிபட்டு வர திருமண வரன் சீக்கிரம் அமையும் வாய்ப்பை சனி பகவான் வழங்குவார்.
வாரத்தின் எந்த ஒரு கிழமையிலும் எம கண்ட நேரத்தில் சிவன் கோயிலுக்கு சென்று, சிவனை வழிபட்டு சிவனின் பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வந்து வணங்க வேண்டும். பின்பு கோயிலில் உள்ள கொடிமரத்தை வணங்க வேண்டும், பிறகு சிவபெருமானுக்கு எதிராக அமர்திருக்கும் நந்தி பகவானின் வாலை தொட்டவாறு ” “ஓம் நமசிவாய நமக” என்று 9 முறை சொல்ல வேண்டும். பின்பு நந்தியின் காதில் எனக்கு திருமணம் நடக்க வேண்டும் என 9 முறை கூறி வணங்க வேண்டும்.
மேற்கண்ட முறையில் தொடர்ந்து ஒன்பது கிழமைகள் அன்று எமகண்ட நேரத்தில் வழிபடும் நபர்களுக்கு 90 நாட்கள் காலத்திற்குள் திருமணம் வரன் அமைந்து, திருமணம் இனிதே நடக்கும்.
தற்காலத்தில் உள்ள வாழ்க்கை முறை மற்றும் பொருளாதார நிலை காரணமாக திருமண வயது வந்த ஆண்களும், பெண்களும் மிகுந்த காலங்கடந்தே திருமணம் செய்கின்றனர். மேலும் பலருக்கு காலங்கடந்தே பொருளாதார காரணங்களால் சரியான வரன் கிடைக்காமல் திருமணம் தாமதமாகிறது. இதில் பிறவியிலேயோ அல்லது விபத்திலேயோ உடல் குறைபாடு அடைந்த மாற்றுத்திறனாளி ஆண்கள், பெண்கள் கல்வி, பொருளாதார தகுதி போன்றவை இருந்தும் பலர் திருமணம் ஆகாமலே வாழும் பரிதாப நிலை பரவலாக காணப்படுகிறது.
இப்படி உடல்ரீதியாக குறைபாடு அடைந்த நபர்கள் கவலை கொள்ளாமல் இறைவனின் மீது முழு நம்பிக்கை வைத்து சில எளிய பரிகார வழிபட்டு முறைகளை செய்தால் சீக்கிரம் சிறந்த வாழ்க்கை துணை அமைய பெறுவார்கள். மாற்றுத்திறனாளி திருமணமாக ஆண்கள் மற்றும் பெண்கள் 9 சனிக்கிழமைகள் சனீஸ்வரர் சந்நிதியில் கருப்பு எள் கலந்த விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, உங்களின் திருமண தடை நீங்க வேண்டும் என மனதார நினைத்து சனி பகவானை வழிபட்டு வர திருமண வரன் சீக்கிரம் அமையும் வாய்ப்பை சனி பகவான் வழங்குவார்.
வாரத்தின் எந்த ஒரு கிழமையிலும் எம கண்ட நேரத்தில் சிவன் கோயிலுக்கு சென்று, சிவனை வழிபட்டு சிவனின் பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வந்து வணங்க வேண்டும். பின்பு கோயிலில் உள்ள கொடிமரத்தை வணங்க வேண்டும், பிறகு சிவபெருமானுக்கு எதிராக அமர்திருக்கும் நந்தி பகவானின் வாலை தொட்டவாறு ” “ஓம் நமசிவாய நமக” என்று 9 முறை சொல்ல வேண்டும். பின்பு நந்தியின் காதில் எனக்கு திருமணம் நடக்க வேண்டும் என 9 முறை கூறி வணங்க வேண்டும்.
மேற்கண்ட முறையில் தொடர்ந்து ஒன்பது கிழமைகள் அன்று எமகண்ட நேரத்தில் வழிபடும் நபர்களுக்கு 90 நாட்கள் காலத்திற்குள் திருமணம் வரன் அமைந்து, திருமணம் இனிதே நடக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X