search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சந்தான பாக்கியம், திருமண தடை நீக்கும் வல்வில் ராமர் கோவில்
    X

    சந்தான பாக்கியம், திருமண தடை நீக்கும் வல்வில் ராமர் கோவில்

    திருவைக்காவூர் பூதங்குடி கிராமத்தில் அமைந்துள்ள வல்வில் ராமர் கோவிலில் வழிபாடு செய்தால் திருமணம், சந்தான பாக்கியம் சம்பந்தமான குறைகளையும் தீரும் என்பது ஐதீகம்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வழியாக திருவைக்காவூர் செல்லும் பாதையில் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருப்புள்ள பூதங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது வல்வில் ராமர் கோவில்.

    சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் ராமர் சயன கோணத்தில் காட்சியளிக்கிறார். அதே போல் பெருமாள் கிழக்கு நோக்கி புஜங்க சயனத்தில் சோபன விமானத்தின் கீழ் காட்சியளிக்கிறார். புதனுக்குரிய பரிகார தலமான இக்கோவிலில் பித்ருக்களுக்கு பரிகாரம் செய்வது உண்டு. பெருமாளின் மங்களா சாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இக்கோவில் 10-வது திவ்ய தேசமாகும்.

    இக்கோவிலின் பிரகாரத்தில் நரசிம்மர் தனியே சன்னதி கொண்டிருக்கிறார். இவர் யோக நரசிம்மர். இவர் காலடியில் ராமன் விக்கிரகம் காணப்படுகிறது. இந்த ராமருக்கும் மூலவர் வல்வில் ராமருக்கும் கண் திருஷ்டி பட்டு விடாதபடி இந்த நரசிம்மர் பார்த்துக் கொள்வதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, அதுமட்டுமின்றி பக்தர்களின் உத்தியோகம், திருமணம், சந்தான பாக்கியம் சம்பந்தமான குறைகளையும் தீர்த்து வைக்கிறார்.

    காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ள திருப்புட்குழி திவ்ய தேசத்திலும் ஜடாயுவுக்கு ராமன் இறுதிக்கைங்கர் யங்களைச் செய்தான் என்ற தலபுராணக் குறிப்பு இருந்தாலும் திருப்புள்ள பூதங்குடியைப் பொறுத்த வரை பூமிதேவியுடன் அந்த சாங்கியங்களை அவன் அனுசரித்தான் என்ற வகையில் சற்றே மாறுபட்டிருக்கிறது. இப்படி தன் தந்தைக்கு நிகரான ஜடாயுவுக்கு அந்தி மக்கிரியைகளை நிறைவேற்றிய ராமன் இத்தலத்தில் ஓய்வு கொண்டான்.

    ஏற்கனவே சீதையைப் பிரிந்த துக்கம், இப்போது ஜடாயுவை இழந்து விட்ட சோகம் எல்லாமுமாகச் சேர்ந்து அவனை மிகவும் களைப்படைய வைத்திருக்கும் போலிருக்கிறது. ஆகவே இந்த புள்ள பூதங்குடியில் ஓய்வெடுத்து கொண்டான். அந்த நிலையே சயனக்கோல ராமபிரானாக இன்றளவும் நமக்கு தரிசனம் கிடைக்கிறது.

    ஜடாயுவாகிய புள்ளிற்கு மோட்ச கதி அளித்து, அதன் பூத உடலுக்குச் செய்ய வேண்டிய கர்மாக்களை ராமன் செய்ததால் இந்தத் தலம் புள்ளபூதங்குடி என்றாகியது. ஸ்ரீரங்கம் போலவே இந்தத் தலமும் காவிரி, கொள்ளிடம் நதிகளுக்கு நடுவே அமைந்திருக்கிறது. நீத்தார் கடன் நிறைவேற்றும் பாரம்பரியத்தில் வந்த ஒவ்வொருவரும், வடநாட்டில் உள்ள பிரபலமான கயா தலத்தில் அதனை மேற்கொண்டால் என்ன நற்பலன்கள் கிட்டுமோ அந்தப் பலன்கள் எல்லாம் கொஞ்சமும் குறைவின்றி, இந்தத் தலத்தில் மேற்கொள்பவர்களுக்கும் கிட்டும்.
    Next Story
    ×