search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கடன் பிரச்சினையை தீர்க்கும் லட்சுமி நரசிங்க பெருமாள்
    X

    கடன் பிரச்சினையை தீர்க்கும் லட்சுமி நரசிங்க பெருமாள்

    நெல்லை மாவட்டம் புளியங்குடி லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் விசேஷம் என்ன வென்றால் இங்கு வந்து வழிபட்டால் தீராத கடன் பிரச்சினை தீரும்.
    நெல்லை மாவட்டம் புளியங்குடியில் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவில் மதுரைக்கு தெற்கு, நெல்லைக்கு வடக்கு என இரண்டு பகுதிகளுக்கும் மத்தியில் ஒரே ஒரு தனி சன்னி தானத்தில் லெட்சுமி நரசிங்க பெருமாள் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் உற்சவமூர்த்தி சுந்தர்ராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, பெரியதிருவடி கருடாழ்வார், திருவடி ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்திகள் அருள் பாலித்து வருகிறார்கள்.

    இக்கோவிலில் ஆகமம் பாஞ்சராத்ட்ரம ஆகமம் முறைப்படி நான்குகால பூஜை நடைபெறுகிறது. திருக்கோவிலின் விசேஷ நாட்களில் திருவிழா நாட்கள் சித்ரா பவுர்ணமி, கிருஷ்ணஜெயந்தி, உறியடி திருவிழா, புரட்டாசி சனி, ஸ்ரீராமநவமி, மார்கழி முப்பது நாட்களும் திருப்பாவை பாராயணம் நடைபெறும். மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, திருப்பாவை விழா, அனுமன் ஜெயந்தி ஆகியவை திருவிழா காலத்தில் நடைபெறுகிறது. இந்த கோவில் மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் கீழ்புறத்தில் அமைந்துள்ளது.

    இம்மலை யில் தென்புறம் வாழை மலையாறு உற்பத்தியாகிறது. கோவிலுக்கு வடபுறம் நிட்சையப்ப நதி ஆறு உற்பத்தியாகிறது. இக்கோவில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பாக தோன் றியது. புளியங்குடியில் புளியமர வனப் பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது. இதனால் கோவிலின் ஸ்தல விருட்சம் புளியமரம். கோவில் தீர்த்தம் லெட்சுமி தீர்த்தம். உக்கிரமாக இருக்கக்கூடிய நரசிம்ம மூர்த்தியை மகாலெட்சுமி தாயார் சாந்தப்படுத்தி அருள்காட்சி கிடைத்த ஸ்தலம். சுவாமிக்கு இடது மடியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். லெட்சுமி நரசிங்கப்பெருமாள் சாந்தமாக காட்சியளிக்கிறார்.

    இத்திருக்கோவிலில் விசேஷம் என்ன வென்றால் இங்கு வந்து வழிபட்டால் தீராத கடன் பிரச்சினை தீரும். எந்த நேரத்தில் தீரும் என்றால் நரசிம்ம பிரதோஷ காலத்தில் தீரும். சுவாதி நட்சத்திரத்தில் தரிசனம் செய்தால் குபேர சம்பத் கிடைக்கும். புதன்கிழமை சுக்கிர ஹோரையில் அன்று இரவு 7 முதல் 8 மணிக்குள் ஆண் பெண்ணுக்கு திருமணத்திற்காக அர்ச்சனை செய்தால் திருமணம் காரியங்கள் வெற்றியாகும். உக்கிரம் தணிக்க பானகத்தால் நெய்வேத்தியம் செய்தால் இது மிகவும் நன்று. மந்திர ராஜபதா ஷோத்திரம் பாராயணம் செய்தால் லெட்சுமி நரசிங்க பெருமாள் திருஅருள் பூரணமாக அருள்கடாட்சம் கிடைக்கும்.

    வைகுண்ட ஏகாதசியும், பாவை விழாவும் நடைபெறும் மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் கலந்து கொள்ளும் கன்னிகளுக்கு மார்கழியை தொடர்ந்து வரக்கூடிய தை மாதத்தில் திருமண யோகம் கிடைக்கும். மேலும் பாவை விழா பெண்கள் தெய்வ மகளிர் போல மிகுந்த வரங்கள் பெறுவதால், லெட்சுமி நரசிங்கப்பெருமாளுக்கு இணையில்லை. மேலும் கல்விக்கு அதிபதி மற்றும் புத்திகாரகர் புதன்கிழமையன்று அர்ச்சனை செய்தால் கல்வி வளமாக பெருகும்.
    Next Story
    ×