search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஏவல் - பில்லி சூனியத்தை விலக்கும் தாளக்கரை ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்
    X

    ஏவல் - பில்லி சூனியத்தை விலக்கும் தாளக்கரை ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்

    பில்லி சூனியம், ஏவல் உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபட ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு வந்து பக்தர்கள் பிரார்த்தனை செய்தால் அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமூக தீர்வு ஏற்படுகிறது.
    திருப்பூர் மாவட்டம் அவினாசி - புளியம்பட்டி மெயின் ரோட்டில் 14-வது கிலோ மீட்டர் தொலைவிலிருந்து வலது புறகிளை ரோட்டில் 3 கி.மீ தொலைவில் உள்ள மங்கரசு வளையபாளையம் ஊராட்சி தாளக்கரையில் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இக்கோவில் 8-ம் நூற்றாண்டில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. விழுப்புரம் மாவட்ட பகுதியில் உள்ள பரிக்கல், பூவரசம் குப்பம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள கோவில்களில் நரசிம்ம பெருமாள் மடியில் லட்சுமி தாயார் அமர்ந்த கோலத்தில் தான் இருப்பார். ஆனால் தாளக்கரையில் லட்சுமி நரசிம்மர் தனித் தனியே நின்ற வண்ணம் காணப்படுகிறார். நரசிம்மர் கோரை பற்களுடன் நாக்கு தொங்கிய கோலத்திலும் கையில் சங்கு சக்கரமும் காலில் ஸ்ரீ சக்கரமும் இருந்தாலும் நின்ற கோலத்திலேயே நரசிம்மர் சாந்த சொரூபமாக உள்ளார்.

    மூலஸ்தானத்தில் நரசிம்மர் கையில் சங்கு, சக்கரத்துடன் சாந்த மூர்த்தியாக சந்திர விமானத்தின் கீழ் அருளுகிறார். மூலஸ்தானத்தில் சுவாமி, மகாலட்சுமி, இருவருமே நின்ற கோலத்தில் இருப்பது விசேஷமான அமைப்பு. நரசிம்மர் பீடத்தில் ஸ்ரீசக்கரம் உள்ளது. அர்த்த மண்டபத்தில் சாளக்கிராமம் இருக்கிறது. இந்த சாளக்கிராமமே முதலில் நரசிம்மராக வழிபடப்பட்டுள்ளது. எனவே இதனை ஆதி மூர்த்தி என்கிறார்கள்.

    இந்த கோவிலுக்கு முன்புறம் ஓடை உள்ளது. முற்காலத்தில் எப்போதும் வற்றாத ஜீவ நதியாக இந்த ஓடை திகழ்ந்துள்ளது. தாளம் என்றால் ஓடை என்ற பொருள் உண்டு. எனவே இத் தலம் தாளக்கரை என்று அழைக்கப்படுகிறது. சாமியின் ஈசாணி மூலையில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில் இன்று வரை நீர் வற்றியதில்லை. இந்த குளத்திற்குள் தங்க தேர் இறங்கியதாக வரலாறு கூறுகிறது.

    சேர, சோழ, பாண்டியர் காலத்தில் தோன்றிய இக்கோவிலில் நரசிம்மர் அருளால் தடைபடும். திருமணம், புத்திர பாக்கியம், தொழில், கடன் நிவர்த்தி, மன நிலை பாதிப்பு, பில்லி சூனியம், ஏவல் உள்ளிட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபட இக்கோவிலுக்கு வந்து பக்தர்கள் துளசிமாலை, எலுமிச்சை கனி ஆகியவற்றை சுவாமியின் முன் வைத்து பிரார்த்தனை செய்தால் அவர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் சுமூக தீர்வு ஏற்படுகிறது.

    சொர்க்கவாசல் வழியாக (பரமபதம்) பக்தர்கள் வருவது போல் இக் கோவில் அமைய பெற்று உள்ளது. பக்தர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கிறது.
    Next Story
    ×