search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தோல் நோய் தீர்க்கும் கருடன்
    X

    தோல் நோய் தீர்க்கும் கருடன்

    தோல் நோய்கள், ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறுகளை நீக்கும் சிறப்பு பெற்ற தலமாக, கேரள மாநிலம், ஆலத்தியூர் அருகில் உள்ள திரிப்பிரங்கோடில் அமைந்திருக்கும் கருடன் கோவில் திகழ்கிறது.
    கோவிலுக்கு வரும் பக்தர்கள், பழங்கள் மற்றும் இளநீரை கருடனுக்குச் சமர்ப்பித்து வழிபடுகின்றனர். பருவ நோய்களில் இருந்து குழந்தைகளைக் காக்க வேண்டி, பெற்றோர்கள் கோவில் முன்பகுதியில் விற்கப்படும் தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நாகம் மற்றும் அதன் முட்டைகளை வாங்கிச் சமர்ப்பித்துக் கருடனை வழிபடுகின்றனர்.

    தோல் நோய்கள் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக்கோளாறு நோய் பாதிப்பு உள்ளவர்கள், கோவிலின் முன்பகுதியில் விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம் அல்லது மரத்தால் செய்யப்பட்ட கூடையிலான வெள்ளரிக் காயை வாங்கிச் சமர்ப்பித்துக் கருடனை வழிபடுகின்றனர். இவை தவிர பறவைகளால் வந்த காயம் மற்றும் நோய்களில் இருந்து விடுபடுவதற்கும், இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தங்கள் விளைநிலங்களில் விளையும் பயிர்களைப் பறவைகளிடம் இருந்து பாதுகாக்க விவசாயிகள் இங்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்கின்றனர்.

    இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, மஞ்சள் மற்றும் பாயசம் கலந்த, மஞ்சள் நிறத்திலான பாயசம் வழங்கப்படுகிறது. இந்தப் பாயசத்தைப் பெற்றுச் சாப்பிடுபவர்களுக்கு, அவர்களுடைய தோல் நோய் எதுவாயினும் விரைவில் குணமாகிவிடும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது. கேரளாவில் இக்கோவிலில் மட்டுமே மஞ்சள் கலந்த பாயசம் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    நாகதோஷம் இருப்பவர்கள், ஒரு மண் கலசத்தில் உயிருள்ள பாம்பை உள்ளே வைத்து, கலசத்தின் மேற்பகுதியில் வெள்ளை நிற பருத்தித் துணி ஒன்றினால் மூடி, இக்கோவிலுக்குக் கொண்டு வருகின்றனர். பின்னர், கோவில் வளாகத்தில் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்தக் கலசத்தைப் போட்டு உடைக்கின்றனர்.

    கலசத்தில் இருந்து வெளியேறும் பாம்பு சீற்றத்துடன் எழுந்து நிற்கும் வேளையில், அங்கிருக்கும் அர்ச்சகர், கருட பஞ்சாட்சர மந்திரம் சொல்லி, பாம்பின் மேல் தீர்த்த நீரைத் தெளிக்கிறார். உடனே அந்தப் பாம்பு அங்கிருந்து தென்திசையில் வெளியேறிச் சென்று விடுகிறது. அப்படிச் சென்று விட்ட பின்பு, அவர்களது நாகதோஷம் நீங்கி விடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. உயிருடன் பாம்பைப் பிடித்து வந்து செய்யப்படும். இந்த வழிபாடு, பலருக்கும் ஆச்சரியதை அளிப்பதாக இருக்கிறது. 
    Next Story
    ×