search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கடன் பிரச்சனை தீர்க்கும் பரிகார ஸ்தலம்
    X

    கடன் பிரச்சனை தீர்க்கும் பரிகார ஸ்தலம்

    கும்பகோணம் - திருவாரூர் மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள திருச்சேறை கோவில் கடன் பிரச்சனை தீர்க்கும் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
    தென்கரையில் அமைய பெற்ற 127 தலங்களுள் 95வது தலமாக விளங்குகிறது திருச்சேறை. கும்பகோணம் - திருவாரூர் மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கே உள்ள கடன் தீர்க்கும் ஸ்ரீ ரிண விமோசன லிங்கம் மிகவும் விஷேசமானது.

    ஆனால் அதை மட்டும் வணங்கினால் போதாது கருவறையில் இருக்கும் செந்நறியப்பர் என்று சொல்லப்படும் சாரபரமேஸ்வரையும் சேர்த்து வணங்க வேண்டும். ஆலயத்தில் அருளாட்சி செய்யும் ஞானவல்லி எனப்படும் ஞானாம்பிகயை கும்பிட வேண்டும். இங்குள்ள பைரவர் மிகவும் விசேஷமானவர். இவர் சிவனை வழிபட்டவர்.

    அதற்கு அடையாளமாக இவரது இடது மேற்கரத்தில் சூலம் போட்ட மணியினை தாங்கியிருக்கிறார். கடன்கள், பிறவி கடன்கள் முதலியவை நீங்க அருள் செய்வதால் இத்தலத்தை கடன் நிவர்த்தி தலம் என்கிறார்கள்.
    Next Story
    ×