search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குழந்தை பாக்கியம் அருளும் நிலக்கோட்டை மாரியம்மன்
    X

    குழந்தை பாக்கியம் அருளும் நிலக்கோட்டை மாரியம்மன்

    குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் நிலக்கோட்டை மாரியம்மனை மனம் உருகி வேண்டினால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம்.
    திண்டுக்கல் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களில் நிலக்கோட்டை இந்து நாடார் உறவினர் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவில் கடந்த 1912-ம் ஆண்டுக்கு முன்பு மாரியம்மன் கோவில் பீடமாக இருந்தது. பின்னர் அம்மன் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இந்த கோவில் பைரவரை அஷ்டமி திதியில் வணங்கி வந்தால் அனைத்து தொல்லைகள், பீடைகள் நீங்கும். அதே போன்று குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் அம்மனை மனம் உருகி வேண்டினால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இவ்வாறு குழந்தை பாக்கியம் கிடைத்த தம்பதியினர் ஆண்டுதோறும் கரும்பு தொட்டில்களுடன் வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இது தவிர தங்கள் குறைகள் தீர்த்து வைக்கக்கோரி அம்மனிடம் மனம் உருகி வேண்டும் பக்தர்கள், வேண்டுதல் நிறைவேறியதும், தீச்சட்டி, தீர்த்தக்காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    நிலக்கோட்டை மாரியம்மன் அருளால் பக்தர்களின் வாழ்வில் உள்ள இடர்பாடுகள் நீங்குகிறது. கோடைகாலத்தில் ஏற்படும் நோய்களில் ஒன்றான அம்மைநோய் மற்றும் வேறு பல கொடிய நோய்கள் ஏற்பட்டால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் நோய்தீர அம்மனை மனதார வேண்டிக்கொள்வார்கள். குறிப்பாக அம்மைநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிலில் தரப்படும் தீர்த்தத்தை தொடர்ந்து 3 நாட்கள் அருந்தினால் அம்மைநோய் குணமாகும் என பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

    குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வரம் அருள மனம் உருகி நிலக்கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைப்பார்கள். பின்னர் வேண்டுதல் நிறைவேறியதும் கரும்பு தொட்டில் கட்டி அதில் குழந்தையை வைத்து கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் அம்மனிடம் வேண்டுதல் வைத்து குழந்தை வரம் கிடைத்ததும் புதிய சேலையை மஞ்சள் நீரில் நனைத்து, அதை கரும்பில் தொட்டிலாக கட்டி அந்த தொட்டிலில் குழந்தையை வைத்து மாரியம்மன் கோவிலை 3 முறை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    பின்னர் தொட்டில் கட்டிய கரும்புகளை கோவிலுக்கு காணிக்கையாக செலுத்துவார்கள்.
    Next Story
    ×