search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தீய சக்திகளை விலக்கும் தீப வழிபாடு
    X

    தீய சக்திகளை விலக்கும் தீப வழிபாடு

    நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.
    தீப வழிபாடு என்பது நம் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது என்றால் அது மிகையல்ல. நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்கின்றன ஞான நூல்கள்.

    வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்வதனால், சுபம், ஆரோக்கியம், நன்மை, தன வரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் ‘திருக்கார்த்திகை’ ஆகும். இந்த திருக்கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திரு விளக்கேற்றி வழி படுவது மிகவும் விஷேசமானதாகும்.
    Next Story
    ×